கலப்பின கஞ்சா பறிமுதல்; கேரளாவில் `தல்லுமாலா' திரைப்பட இயக்குநர் உள்பட மூவர் கைது!

‘அனுரக கரிக்கின்வெல்லம்’, ‘உண்டா’ மற்றும் ‘தல்லுமாலா’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் காலித் ரஹ்மான். அவரது சமீபத்திய படமான ‘ஆலப்புழா ஜிம்கானா’ தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கலால் துறையினர் சோதனை நடத்தினர். காலித் ரஹ்மான் அதில், ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் வாடகைக்கு எடுத்திருந்த ஒரு குடியிருப்பில், இயக்குநர் காலித் ரஹ்மான், ‘தமாஷா’, ‘பீமண்டே வாழி’ படங்களுக்கு பெயர் பெற்ற மற்றொரு … Read more

Tourist Family: `அக் 31-ம் தேதி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?' – மேடையில் காதலை தெரிவித்த இயக்குநர்

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருக்கும் படம் `டூரிஸ்ட் ஃபேமிலி’ இந்தப் படத்தில் புரோமோஷன் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. சென்னையில் இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தன் தோழியிடம் காதலை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகிவருகிறது. Wow !! So Cute & … Read more

“தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் ஏன் இவ்வளவு மெத்தனமாக உள்ளது?'' – நேரில் ஆய்வு செய்த துரை வைகோ

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி பொது மக்களின் பொறுப்பு மிகு பிரதிநிதியாக, திருச்சி இரயில் நிலையத்தை ஆய்வு செய்து பாராட்டினேன்; புதுக்கோட்டை இரயில் நிலையத்தை ஆய்வு செய்து வேதனைப்படுகிறேன் என்று துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, துரை வைகோ எம்.பி தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் முக்கிய நகரமாக விளங்கும் புதுக்கோட்டையில் உள்ள இரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டேன். இந்த ஆய்வின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயக்கமாக … Read more

விஜய் கோவை விசிட்; கூட்டம், குழப்பம் டு டார்கெட் கொங்கு – தவெக பூத் கமிட்டி கூட்ட ஸ்பாட் ரிப்போர்ட்!

தவெக மேற்கு மண்டலம் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு நாள்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக அந்தக் கட்சியின் தலைவர் விஜய் நேற்று காலை 11 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வந்தார். விஜய் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் கோவை வந்துள்ளார். அதிலும் தவெக கட்சி தொடங்கிய பிறகு, முதல்முறையாக சென்னை மண்டலத்துக்கு வெளியே … Read more

Vikatan Nambikkai Awards : நம்பிக்கையை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் அழகிய தருணங்கள்..! | Album

எதிர்காலத்துக்கான நன்னம்பிக்கை – நான் முதல்வன் திட்டம் Vikatan Nambikkai Awards அன்பின் கலைஞன் ச.பிரேம்குமார் அன்பின் கலைஞன் ச.பிரேம்குமார் கிரிக்கெட் வீராங்கனை கமலினி கிரிக்கெட் வீராங்கனை கமலினி Vikatan Nambikkai Awards Vikatan Nambikkai Awards Vikatan Nambikkai Awards அன்பின் கலைஞன் ச.பிரேம்குமார் Vikatan Nambikkai Awards பூர்வகுடிகளின் நேசர்கள் – தனராஜ்-லீலாவதி ஒலி ஆளுமைகள்- சுரேன்-அழகியகூத்தன் Vikatan Nambikkai Awards பூர்வகுடிகளின் நேசர்கள் – தனராஜ்-லீலாவதி Vikatan Nambikkai Awards Vikatan Nambikkai … Read more

Nambikkai Awards: 'ரயிலில் சீட்கூட தர மாட்டார்கள்; இன்று அதிகாரி’- தடையுடைத்த திருநங்கை சிந்து கணபதி

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் விகடனின் 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் `நம்பிக்கை விருதுகள்’ விழா, இன்று (ஏப்ரல் 26) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. தனது 23 வயதில், தந்தையின் இறப்பால் கிடைத்த ரயில்வே கலாசி வேலையையும், வீட்டையும் தான் சந்தித்த அவமானங்களால் உதறித் தள்ளிவிட்டு, கல்வி எனும் ஆயுதத்தால் அடுத்தடுத்து தேர்வுகள் எழுதி, திருநங்கை என்ற தனது சொந்த அடையாளத்துடன் இன்று அதே ரயில்வேதுறையில் தென்னக ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் … Read more

Vikatan Nambikkai Awards : `சுஜாதா போல சயின்ஸை யூடியூப்பில் செய்பவர் Mr.GK' – இயக்குநர் ரவிக்குமார்

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளை கொண்டாடும் நம் விகடனின் இந்தாண்டிற்கான நம்பிக்கை விருது வழங்கும் விழா, இன்று (ஏப்ரல் 26) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுது. 2024-ஆம் ஆண்டின் டாப் 10 மனிதர்கள் மற்றும் டாப் 10 இளைஞர்கள் விருது, நம்பிக்கை விருதுகளில் உச்சமாக கருதப்படும் பெருந்தமிழர் விருது வழங்கப்பட்டு வருகின்றன. விழாவின் உச்சமாக, கண்ணியமான சமூகச் செயல்பாடுகளாலும் ஓய்வறியாத மக்கள் தொண்டாலும் தமிழ் மக்களின் மதிப்பையும் மரியாதையையும் சொத்தாகச் சேர்த்திருக்கும் தோழர், நல்லகண்ணு அவர்களுக்கு ‘பெருந்தமிழர் … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி விடுதியில் மாணவர் மர்ம மரணம்.. போலீஸார் விசாரணை!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். வெளியூர், வெளி மாநில மாணவர்கள் தங்கி பயில கல்லூரியில் ஆண், பெண் தனித்தனி விடுதி உள்ளது. அதன்படி, பல்கலைக்கழகத்தில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நெளபடா ஹர்சித் என்ற 19 வயது … Read more

கோடை வெயிலில் கருகும் சின்னமனூர் வெற்றிலை – கவலையில் விவசாயிகள்

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, வடுகபட்டி, சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி நடைபெறுகிறது. இதில் பெரியகுளம் சுற்றுவட்டாரத்தில் வெள்ளை வெற்றிலையும், சின்னமனூர் வட்டாரத்தில் கருப்பு வெற்றிலையும் சாகுபடி செய்யப்படுகிறது. சின்னமனூர் விவசாயிகள் தேனி மாவட்டத்தில் சின்னமனூர் பகுதியில் அதிக பரப்பில் வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில் கோடை வெயில் காரணமாக வெற்றிலை கொடிகள் கருகி வருகின்றன. கோடை மழை பொய்த்து அவ்வப்போது லேசான மழை பெய்வது மண்ணை … Read more

பூனைக்கடி ரேபிஸ் நோயாக மாறிய கொடுமை; வேதனையில் இளைஞர் விபரீத முடிவு.. மருத்துவமனையில் சோகம்

பூனை கடித்ததால் பாதிக்கப்பட்ட இளைஞர், அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ஆனந்தன் – விஜயலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகன் பாலமுருகன். கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு சென்று வந்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடியில் பாலமுருகன் உறங்கிகொண்டிருந்தபோது இரண்டுபூனைகள் சண்டையிட்டபடி மேலே விழுந்துள்ளது. அப்போது பூனை ஒன்று பாலமுருகனின் தொடையில் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளது. பூனை உடனே மருத்துவமனைக்கு சென்ற பாலமுருகன் சாதாரண காயத்துக்கான … Read more