மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும் உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும்- உசிலம்பட்டியில் மிஷ்கின்
மணிகண்டன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த படம் கடைசி விவசாயி. அந்நப் படத்தை பார்த்த மிஷ்கின் இயக்குநர் மணிகண்டனைச் சந்திப்பதற்காக மணிகண்டனின் சொந்த ஊரான உசிலம்பட்டிக்குச் சென்றார். அதைப் பற்றிய பதிவு ஒன்றை மிஷ்கின் வெளியிட்டிருக்கிறார். “கடைசி விவசாயி தந்த மகா கலைஞனான மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்குச் சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த அவனுக்கு நன்றி கூறி, அவன் கரங்களை முத்தமிட்டேன். மணிகண்டா படத்தின் கதையின் … Read more