விகடன் இணையதளம் முடக்கம்: “நெருக்கடி நிலை காலத்தையே மிஞ்சுகிற அளவுக்கு..'' – வைகோ கண்டனம்!

அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கை, கால் விலகிடப்பட்டு அழைத்துவரப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்திற்குள்ளானது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து எந்த விஷயமும் பேசவில்லை. இதனை விமர்சிக்கும் வகையில் விகடன் ஒரு கார்டூனை வெளியிட்டிருந்தது. அதற்கு மத்திய அரசு விகடன் இணையத்தளத்தை முடக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு … Read more

விகடன் இணையதளம் முடக்கம்: `நாடாளுமன்றத்தில் பேசுவோம்' – எம்.பி மாணிக்கம் தாகூர் கண்டனம்!

அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள் கை,கால்கள் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் பதிவு செய்திருந்தனர். ஆனால் இது குறித்து பிரதமர் மோடி எதுவும் பேசவில்லை. இதை விமர்சிக்கும் விதமாக விகடன் ஒரு கருத்துப்படத்தை வெளியிட்டது. இந்த நிலையில், விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது. ஒரு சில இடங்களில் விகடன் வாசகர்கள் இணையதளத்தை பயன்படுத்துவதில் சில சிக்கல்களை சந்திப்பதாக சொல்கின்றனர். ஆனால் இதுதொடர்பாக மத்திய அரசிடமிருந்து எந்த … Read more

US aircraft: “நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது; இந்திய ராஜாதந்திரத்துக்கு ஒரு சோதனை..'' -ப.சிதம்பரம்

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின், அந்த நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். கடந்த மாதம் ஜனவரி 20-ம் தேதி, 104 இந்தியர்கள் கை கால்கள் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கை, கால்கள் விலங்கிடப்பட்ட விவகாரம் தேசிய அளவில் விவாதமானது. இந்த நிலையில், 2-வது கட்டமாக நேற்றிரவு 11.35 மணியளவில் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு, 119 அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். இன்று 3-வது அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் வந்தடைய உள்ளது. இந்த … Read more

“ஏன் மும்மொழி வேண்டாம்?'' -பேரறிஞர் அண்ணாவின் உரையுடன் பதிவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

பா.ஜ.க அரசின் மும்மொழி கொள்கை உள்ளிட்ட திணிப்புகள் காரணமாக, தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்று தமிழக ஆளும் தி.மு.க அரசு தொடர்ச்சியாகக் கூறிவருகிறது. மேலும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் மத்திய பா.ஜ.க அரசு கல்விக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதாகவும் தி.மு.க அரசு குற்றம்சாட்டி வருகிறது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் இத்தகைய சூழலில்தான், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், “மும்மொழி கொள்கையைத் தமிழக அரசு ஏற்க மறுப்பதேன்? அரசியல் காரணங்களுக்காகத் தேசிய … Read more

`கருத்து சுதந்திரத்திற்காக களத்தில் நிற்போம்!’ #VikatanForFreedomOfExpression

விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை. முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு … Read more

`Vikatan Stands Strong for Freedom of Expression!’ #VikatanForFreedomOfExpression

There have been numerous reports stating that, the Vikatan website has been blocked by the central government. Many users from different locations have reported that, they are unable to access the Vikatan website. However, as of now, there has been no official announcement from the central government regarding the blocking of the Vikatan website. Earlier, … Read more

Manipur: “குடியரசு தலைவர் ஆட்சியைத் திரும்பப் பெறுங்கள்" – மணிப்பூரில் போராட்டத்தில் இறங்கிய மக்கள்

மணிப்பூரில் 2024 மே மாதத்தில் குக்கி, மெய்தி சமூகத்தினருக்கு இடையே வெடித்த மோதல், இன்னும் ஓயாமல் இருக்கிறது. பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களைப் பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் சென்று பார்க்கவில்லை. இவ்வாறிருக்க, கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி கூடிய மணிப்பூர் சட்டமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிப்ரவரி 12-ம் தேதிக்குள் கூட்டியாக வேண்டிய சூழலில், பிப்ரவரி 9-ம் தேதி ஆளும் பாஜக-வைச் சேர்ந்த முதல்வர் பிரேன் சிங் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். மணிப்பூர் … Read more

`நம் கதைகளை நாம்தானே சொல்ல வேண்டும்!' – புகைப்படங்கள் ஊடே வாழ்வியலை விளக்கிய பள்ளி மாணவர்கள்

ஆவி பறக்கும் கொத்து பரேட்டா கடை, இரைச்சல் கொட்டும் கல் குவாரிகள், அதிகாலை குளிரில் செங்கல் சூளையில் பதியும் கால்கள், அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் பேருந்து ஓட்டுநர், கத்திகள் தயாரிக்கும் புலம் பெயர்ந்த நாடோடிகள், விறகு வெட்டிகள், கறி கடை பாய், மட்பாண்டங்கள், ஆலமரத்தடியில் பீடி சுருட்டும் தாத்தா என் குட்டி தமிழ்நாட்டை நம் கண்ணெதிரே வடித்து காட்டியது இந்த கண்காட்சி. எழும்பூர் அருங்காட்சியகத்தில் பழனி குமார் தலைமையில் மாதிரி பள்ளிகள் துறை சார்பில் இந்த … Read more

'பிரசாந்த் கிஷோர் தான் வர வேண்டுமா… உங்களுக்கு மூளை இல்லையா?' – சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனக்கு யாரிடம் இருந்து பாதுகாப்பு தேவை இருக்கிறது. இந்த மக்களுக்காக களத்துக்கு வந்திருக்கிறேன். நான் தான் இந்த மக்களுக்கு பாதுகாப்பு. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது சைரன் வைத்த வாகனம் வேண்டாம் என்று சொன்னார். வந்த வாகனத்தை திரும்பி போக சொன்னவர் அவர். மக்கள் அரசியலில் பாதுகாப்பு தேவையில்லை. தம்பி விஜய் போல புகழ்பெற்ற நடிகருக்கு என்னை மாதிரி … Read more

Amaran 100: `இங்க வாங்குற சம்பளத்தை பிடிங்கிட்டு போகிற குரூப்பும் இருக்கு!' – வெற்றி விழாவில் எஸ்.கே

கடந்தாண்டு தீபாவளி பண்டிகை வெளியீடாக சிவகார்த்திகேயன் நடித்திருந்த `அமரன்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. எஸ்.கே-வின் கரியரில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் இதுதான். இப்படம் வெளியாகி 100 நாட்கள் கடந்த நிலையில் நேற்றைய தினம் இத்திரைப்படத்தின் வெற்றி விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவருக்கும் தயாரிப்பாளர் கமல், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நினைவு பரிசையும் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், “ இந்தப் படத்துக்கு எனக்கு … Read more