Nambikkai Awards: 'ரயிலில் சீட்கூட தர மாட்டார்கள்; இன்று அதிகாரி’- தடையுடைத்த திருநங்கை சிந்து கணபதி

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் விகடனின் 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் `நம்பிக்கை விருதுகள்’ விழா, இன்று (ஏப்ரல் 26) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. தனது 23 வயதில், தந்தையின் இறப்பால் கிடைத்த ரயில்வே கலாசி வேலையையும், வீட்டையும் தான் சந்தித்த அவமானங்களால் உதறித் தள்ளிவிட்டு, கல்வி எனும் ஆயுதத்தால் அடுத்தடுத்து தேர்வுகள் எழுதி, திருநங்கை என்ற தனது சொந்த அடையாளத்துடன் இன்று அதே ரயில்வேதுறையில் தென்னக ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் … Read more

Vikatan Nambikkai Awards : `சுஜாதா போல சயின்ஸை யூடியூப்பில் செய்பவர் Mr.GK' – இயக்குநர் ரவிக்குமார்

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளை கொண்டாடும் நம் விகடனின் இந்தாண்டிற்கான நம்பிக்கை விருது வழங்கும் விழா, இன்று (ஏப்ரல் 26) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுது. 2024-ஆம் ஆண்டின் டாப் 10 மனிதர்கள் மற்றும் டாப் 10 இளைஞர்கள் விருது, நம்பிக்கை விருதுகளில் உச்சமாக கருதப்படும் பெருந்தமிழர் விருது வழங்கப்பட்டு வருகின்றன. விழாவின் உச்சமாக, கண்ணியமான சமூகச் செயல்பாடுகளாலும் ஓய்வறியாத மக்கள் தொண்டாலும் தமிழ் மக்களின் மதிப்பையும் மரியாதையையும் சொத்தாகச் சேர்த்திருக்கும் தோழர், நல்லகண்ணு அவர்களுக்கு ‘பெருந்தமிழர் … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி விடுதியில் மாணவர் மர்ம மரணம்.. போலீஸார் விசாரணை!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். வெளியூர், வெளி மாநில மாணவர்கள் தங்கி பயில கல்லூரியில் ஆண், பெண் தனித்தனி விடுதி உள்ளது. அதன்படி, பல்கலைக்கழகத்தில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நெளபடா ஹர்சித் என்ற 19 வயது … Read more

கோடை வெயிலில் கருகும் சின்னமனூர் வெற்றிலை – கவலையில் விவசாயிகள்

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, வடுகபட்டி, சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி நடைபெறுகிறது. இதில் பெரியகுளம் சுற்றுவட்டாரத்தில் வெள்ளை வெற்றிலையும், சின்னமனூர் வட்டாரத்தில் கருப்பு வெற்றிலையும் சாகுபடி செய்யப்படுகிறது. சின்னமனூர் விவசாயிகள் தேனி மாவட்டத்தில் சின்னமனூர் பகுதியில் அதிக பரப்பில் வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில் கோடை வெயில் காரணமாக வெற்றிலை கொடிகள் கருகி வருகின்றன. கோடை மழை பொய்த்து அவ்வப்போது லேசான மழை பெய்வது மண்ணை … Read more

பூனைக்கடி ரேபிஸ் நோயாக மாறிய கொடுமை; வேதனையில் இளைஞர் விபரீத முடிவு.. மருத்துவமனையில் சோகம்

பூனை கடித்ததால் பாதிக்கப்பட்ட இளைஞர், அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ஆனந்தன் – விஜயலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகன் பாலமுருகன். கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு சென்று வந்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடியில் பாலமுருகன் உறங்கிகொண்டிருந்தபோது இரண்டுபூனைகள் சண்டையிட்டபடி மேலே விழுந்துள்ளது. அப்போது பூனை ஒன்று பாலமுருகனின் தொடையில் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளது. பூனை உடனே மருத்துவமனைக்கு சென்ற பாலமுருகன் சாதாரண காயத்துக்கான … Read more

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண் தொழிலாளர்கள் பலி; 7 பேர் காயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 7 பேர் காயமடைந்தனர். சிவகாசி சிறுகுளம் காலணியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 57) மற்றும் பூத்தாயம்மாள் நகரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரின் மனைவி ராஜரத்தினம் (56) ஆகியோர் எம்.புதுப்பட்டி அருகே நெடுங்குளத்தில் ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்ற … Read more

தென்காசி: சொத்துவரி ரசீது கொடுக்க ரூ.15000 லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது!

சொத்துவரி போட்டுத் தருவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடுகப்பட்டி, தெற்குசத்திரத்தை சேர்ந்தவர் காளிராஜன் (வயது 36). இவர், புளியங்குடியில் நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டியுள்ளார். லஞ்சம் வாங்குதல் காளிராஜன் புதிய வீட்டுக்கு சொத்துவரி கட்டுவதற்கு புளியங்குடி நகராட்சிக்குச் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமரை சந்தித்து, தனது வீட்டுக்கு சொத்துவரி ரசீது … Read more

Thudarum Review: 'குடும்பத்திற்காக மீண்டும் ரகட் பாயாகும் மோகன்லால்' – 'துடரும்' எப்படி இருக்கு?

மெட்ராஸில் சினிமா ஃபைட்டராக இருந்த சண்முகம் (எ) பென்ஸ் (மோகன் லால்), ஒரு விபத்துக்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி, கேரளத்தில் கேப் டிரைவராக வாழ்கிறார். சண்முகத்திற்குத் தன்னுடைய அம்பாசிடர் கார் மீது அளவற்ற பிரியம். மனைவி லலிதா (ஷோபனா) மற்றும் இரு பிள்ளைகளே அவரது உலகம். திடீரென ஒரு நாள், அவரது கார் போலீஸ் பிடியில் சிக்கிக் கொள்கிறது. காவல்துறையினர் காரைத் திருப்பித் தருவதில் பிடிவாதமாக இருக்கின்றனர். Thudarum Review ஆனால், காவல் அதிகாரி ஜார்ஜ் … Read more

"சிந்து நதியிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தான் செல்லாது" – மத்திய நீர்வளத்துறை அமைச்சர்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 25 சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர்வாசியும் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு, 1960-ம் ஆண்டு போடப்பட்ட இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான சிந்து நதிநீர் ஒப்பத்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு முடிவு செய்தது. அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இல்லத்தில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலும் கலந்துகொண்டார். அமித் ஷா அதற்குப் பிறகு சி.ஆர். பாட்டீல் தன் … Read more

“அவருடன் சண்டையிட எனக்குத் தகுதி கிடையாது'' – மகள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

இந்திய சினிமாவின் முதன்மை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளுடன் பதிவிட்ட புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது. அதில், கத்திஜா ரஹ்மான் புர்கா அணிந்திருந்ததால், ரஹ்மான் அவரை புர்க்கா அணிய கட்டாயப்படுத்துவதாக வதந்திகள் பேசப்பட்டது. சமீபத்தில் நயன்தீப் ரக்ஷித்தின் பாட்காஸ்ட்டில் பேசிய ரஹ்மான், தனது மகளுடனான உறவு குறித்துப் பேசியுள்ளார். பொய்யான வதந்திகள் மற்றும் இணையத்தில் பரவும் எதிர்வினைகளைச் சமாளிக்கும் போது அவரது மகளின் மன உறுதியைப் பாராட்டினார். கத்திஜா, ரஹ்மான் “என் மகளுக்கென்று தனி … Read more