நீண்ட காலமாக உடலுறவு கொள்ளவில்லை: வதந்திகளுக்கு விளக்கமளிக்கும் எலோன் மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், தனது தனிப்பட்ட வாழ்க்கைக்காக அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெறுவார். அதேபோல அவரும் தனது சமூக ஊடகங்களில் பல விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசுவார். நீண்ட காலமாக உடலுறவு கொள்ளவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். வதந்திகளுக்கு விளக்கமளிக்கும் எலோன் மஸ்க்கின் இந்த விளக்கம் பலனளிக்குமா என்று நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர். கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனஹானுடனான விவகாரம் குறித்த செய்திக்கு பதிலளித்த எலோன் மஸ்க் தனது பாலியல் வாழ்க்கை குறித்து தெரிவித்துள்ளார். தான் … Read more

Asteroid Bennu: சிறுகோள் பென்னுவின் ஆச்சரியமான மர்மங்களை அவிழ்க்கும் நாசா

சிறுகோள் பென்னு மர்மம்: மர்மங்கள் நிறைந்த சிறுகோள் பென்னுவின் பகல்-இரவு சுழற்சி 4.3 மணி நேரத்தில் முடிகிறது, காலையில் 127 டிகிரி வெப்பத்தால் நெருப்பாய் தகிக்கும் என்றால், இரவில் -23 டிகிரி வெப்பநிலையில் கல்லாய் உறையும் என்று நாசா வெளியிட்டுள்ள தகவல் ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது. சில காலத்திற்கு முன்பு, நாசா பென்னு என்ற சிறுகோளின் மேற்பரப்பில் OSIRIS-REx வாகனத்தை செலுத்தியது. இந்த வாகனம் அங்கிருந்து அனுப்பும் தகவல்கள் விஞ்ஞானிகளுக்கும் ஆச்சரியங்களை அள்ளித் தருகிறது. இன்னும் சில நாட்கள் விஞ்ஞானிகள் இந்த சிறுகோளை ஆய்வு செய்வார்கள். … Read more

Apologised Pope Francis: இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பு கோரும் போப் பிரான்சிஸ்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வாடிகன் நகரத்தின் இறையாண்மையுமான போப் பிரான்சிஸ், கனடாவின் பழங்குடியின மக்களுக்கு எதிராக பல கிறிஸ்தவர்கள் செய்த கலாச்சார அழிவுகள் மற்றும் கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்டார். நவீன உலகில் மதகுருக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் போப் பிரான்சிஸ். கடந்த பல நூற்றாண்டுகளாக மதங்களின் பெயரால் உலகெங்கும் நிகழ்ந்த அட்டூழியங்களை அடையாளப்படுத்தி, அவற்றை ஏற்றுக் கொண்டு வரலாற்றின் அங்கமாக அங்கீகரிப்பதன் அவசியத்தை போப் பிரான்சிஸ் உணர்ந்திருக்கிறார்.  Dear … Read more

குரங்கு அம்மைக்கு பெரியம்மை தடுப்பூசி – ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர், தெலங்கானாவில் ஒருவர் என 5 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதனிடையே, பெரியம்மைக்கான தடுப்பூசியை குரங்கு அம்மைக்கு பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து … Read more

கோத்தபய ராஜபக்ச தலைமேல் தொங்கும் கத்தி; மனித் உரிமை அமைப்பு அளித்த புகார்

இலங்கையில் இருந்து தப்பி சிங்கப்பூரில் வசிக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு சிக்கல்கள் அதிகரிக்கலாம். இலங்கையின் முன்னாள் அதிபரை கைது செய்யுமாறு தென்னாபிரிக்க மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் அமைப்பு சிங்கப்பூரில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இலங்கையில் பல தசாப்தங்களாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் ராஜபக்சேவின் பங்கு குறித்து, அந்த நேரத்தில் ராஜபக்சே நடத்திய அடக்கு முறை காரணமாக போர்க் குற்றவாளியாக கருத வேண்டும் எனவும், அவரை  கைது … Read more

மரணதண்டனையை டிவியில் நேரடியாக ஒளிபரப்ப அனுமதி கோரும் நீதிமன்றம்

மரணதண்டனையை நேரலையில் ஒளிபரப்ப சட்டத்தில் மாற்றம் தேவை என எகிப்திய நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது அதிர்ச்சியை எழுப்பியிருக்கிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திற்கு நீதிமன்றம் எழுதிய கடிதத்தில், “மரண தண்டனையை நேரடியாக ஒளிபரப்புவது, தண்டனை கொடுப்பதற்கான நோக்கத்தை பூர்த்தி செய்யும். இந்த நடவடிக்கை தொடக்கத்தின் ஒரு பகுதி மட்டுமே இருந்தாலும், இலக்கை அடைய முடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கடிதம் தற்போது சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த வித்தியாசமான கோரிக்கையின் பின்னணியும் ஆச்சரியமானதாக இருக்கிறது. பெண் … Read more

”நமக்குள்ளும் ஹீரோ உண்டு” – 5-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள டாங்சியாங் என்ற நகரில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5-வது மாடியில் இருந்து 2 வயது பெண் குழந்தை தவறி விழுந்தது. அப்போது, கீழே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் செல்போனைத் தூக்கி எறிந்து விட்டு குழந்தையைப் பத்திரமாகப் பிடித்துக் காப்பாற்றினார். அந்த இளைஞரின் பெயர் ஷென் டோங் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் படிக்க | Breaking: டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு! விரைந்து பரவும் நோய்த்தொற்று? Heroes among … Read more

திவால் நிலையில் பாகிஸ்தான்… அரசு சொத்துக்களை விற்க முடிவு

பாகிஸ்தானை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற அரசின் சொத்துக்கள் விற்கப்படும் என அந்நாட்டு அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது. பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் பணப்பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் தனது தேசிய சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், நாட்டில் பண வீக்கம் மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுக் கடன் உச்ச … Read more

Saturn vs Planets: வியாழனுக்கு ஏன் வளையங்கள் இல்லை? புதிரை விடுவித்த ஆய்வு

Planet and their Rings: நமது சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களில் இருந்து சனியை வேறுபடுத்துவது அந்த கிரகத்தில் உள்ள கம்பீரமான வளையங்கள் ஆகும். சனி கிரகத்தின் வளையங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, சனியின் வளையங்களை அமெச்சூர் தொலைநோக்கிகளிலிருந்தும் பார்க்கலாம். அரசர்களுக்கு கிரீடம் போல, சனி கிரகத்திற்கு அதன் வளையங்கள் கம்பீரமான தோற்றத்தை தருகிறது. ஆனால் பிற கிரகங்கள் அனைத்திற்கும் சனியைப் போன்ற வளையஙக்ள் இல்லை? இப்படி பல விஞ்ஞான ரீதியிலான கேள்விகள் எழுகின்றன. சனி … Read more

தானிய ஒப்பந்தத்தை கேள்விக்குறியாக்கும் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்

ரஷ்யா-உக்ரைன் போர்: உக்ரைனுடான போருக்கு மத்தியில், தானிய ஒப்பந்தம் மேற்கொண்ட சில மணிநேரங்களிலேயே ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது தானிய ஒப்பந்தம் தொடர்பான ரஷ்யாவின் அலட்சியப்போக்கை காட்டுவதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் உள்ள ஒடேசா துறைமுகத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இரு நாடுகளும் தானிய ஏற்றுமதி பற்றிய புரிதலை எட்ட முடிந்த நிலையில், அதை தொடர்வதே உலகத்திற்கு நல்லது என்று கவலை கலந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒப்பந்தம் தொடர்பான நிம்மதியை உலகம் அனுபவிப்பதைக்கூட ரஷ்யா … Read more