இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறதா; வெளியான பரபர தகவல்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேச்சு வார்த்தை  நிறுத்தப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவும் பாகிஸ்தானும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் உள்ள முட்டுக்கட்டையைத் தீர்க்க ‘பேக் சேனல்’ பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன என ஊடக அறிக்கை ஒன்றில் அதிகாரபூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி  தகவல் வெளியாகியுள்ளது.  எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல ஆண்டுகளாக விரிசல் அடைந்து வருவதாகவும், 2019 ஆகஸ்ட் … Read more

நேபாள விமான விபத்து; 16 பேரின் சடலங்கள் மீட்பு

நேபாளத்தில் நேற்று பொக்காரா என்ற  இடத்திலிருந்து 22 பயணிகளுடன் ஜோம்சோம் நகரை நோக்கி பயணித்த விமானம், நடுவானில் திடீரென மாயமானது. இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் விமானத்தை தேடி வந்த  ராணுவத்தினர், கோவாங் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதைக் கண்டறிந்தனர்.  சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் சுற்றளவிற்கு விமானத்தில் பாகங்கள் சிதறியதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க … Read more

Strychnine: துடிதுடிக்க உயிரைக் கொல்லும் கொடூர விஷம்; எதிரிகளிடம் ரஷ்யா பயன்படுத்தியதா

துடிதுடிக்க உயிரைக் கொல்லும் உலகின் மிக கொடூரமான விஷம் குறித்து  இரசாயன நிபுணர் டாக்டர் நீல் பிராட்பரி  திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது வாழ்க்கையில் தான் ஆராய்ச்சி செய்ததில், மிகவும் பயங்கரமான துடிதுடிக்க உயிரைக் கொல்லும் விஷங்களில் ஒன்று ‘ஸ்டிரைக்கின்’ (Strychnine) என்று  அவர் விவரித்தார்.  இப்படிப்பட்ட கொடூரமான் விஷத்தை ரஷ்யா  பயன்படுத்த்தியதாகக் கூறப்படுகிறது. உலகின் மிக ஆபத்தான கொடிய விஷமான இது உடலில் புகுந்தால்,  லும்பிலிருந்து சதையை பிய்த்து எடுக்கும். அப்போது விஷம்  எடுத்துக் கொண்ட … Read more

ஏலியன்களால் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலா… அரசுடன் கைகோர்க்கும் NASA

பல ஆண்டு காலமாகவே விஞ்ஞானிகள் பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் உயிரினங்கள் எதுவும் வாழ்கின்றதா என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  ஏலியன்கள் இருப்பதாக அடிக்கடி சில செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.  சில இடங்களில் UFO எனப்படும் பறக்கும் தட்டை பார்த்ததாகவும் பல செய்திகள் இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கிறது.  இது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஏலியன்கள் பற்றி ஆய்வுகளை செய்துகொண்டே தான் இருக்கின்றனர். இந்நிலையில், UFO-க்களைத் தேடும் பணியில் அமெரிக்க அரசாங்கக் குழுவுடன் இணைவதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது. … Read more

Monkeypox: மேலும் 23 நாடுகளில் பரவும் குரங்கு அம்மை; WHO விடுக்கும் முக்கிய எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பு (WHO) ஞாயிற்றுக்கிழமை (மே 29, 2022) குரங்கு அம்மை வைரஸ் பரவல், புதிதாக மேலும் 23  நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதுவரை மொத்தம் 257 உறுதிப்படுத்தப்பட்ட  தொற்று பாதிப்புகளும், உறுதிப்படுத்தப்படாத அறிகுறிகள் காணப்படும் 120 பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியது.  குரங்கு அம்மை நோய் இப்போது உலக அளவில் ஒட்டுமொத்த பொது சுகாதாரத்திற்கு “மிதமான ஆபத்தை” உருவாக்குகிறது என்றும் WHO எச்சரித்துள்ளது. “இந்த வைரஸ், இளம் குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்கள் போன்ற … Read more

மர்மமான பெர்முடா பயணம் மேற்கொள்ள தயாரா; கப்பம் நிறுவனத்தின் பகீர் ஆஃபர்

உலகில் ஆங்காங்கே பல மர்மங்கள் சிதறிக்கிடக்கின்றன. அதில் பல ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு பகுதி தான் பெர்முடா முக்கோணம், அதாவது Bermuda Triangle.  அமெரிக்காவில் உள்ள புளோரிடா, பெர்முடா, புவர்டோ ரிக்கோ ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட இடத்தில் இருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தான் பெர்முடா முக்கோணம் அதாவது Bermuda Triangle என கூறுகிறார்கள். சுமார் 5,00,00 சதுர மைல்கள் அளவிற்கு பரவியுள்ள இந்த புதிர் நிறைந்த பகுதியின் மர்மம், பல … Read more

Breaking: நேபாளத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பயணம் செய்த விமானம் மாயம்

நேபாளத்தில் தனியார் ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை, 22 பேருடன் காணாமல் போனதாக விமான நிறுவனம் மற்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிய விமானம் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொக்காரா என்ற  இடத்திலிருந்து வடமேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோம்சோம் நகருக்கு சென்று கொண்டிருந்தது. கனடாவில் கட்டமைக்கப்பட்ட ட்வின் ஓட்டர் விமானங்களை இயக்கும் தாரா ஏர் (Tara Air), அதை இயக்குகிறது. “விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள ஜோம்சோம் … Read more

Oldest Man in the World: 113வது பிறந்தநாளை கொண்டாடிய உலகின் மிக வயதான நபர்

Oldest Man in the world: உலகில் மனிதர்களின் சராசரி வயது 72 ஆண்டுகள் என்றாலும், மாறி வரும் வாழ்க்கை முறை, தொடர்ந்து உருவாகி வரும் புதிய நோய்கள் ஆகியவற்றின் காரணமாக அது மேலும் குறைந்து வருகிறது.  உலகின் வயதான மனிதர்: உள்ள பல்வேறு காரணங்களால் மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது மனிதர்களின் சராசரி ஆயுள் 72 ஆண்டுகள் என்றாலும், மாறி வரும் வாழ்க்கை முறை, தொடர்ந்து உருவாகி வரும் புதிய … Read more

துப்பாக்கி கலாச்சர வன்முறையை தடுக்க முடியாமல் திணரும் அமெரிக்கா

அமெரிக்காவில் தலை தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம் பிரச்சினை குறித்த விவாதம் வலுப்பெற்று வருகிறது. நாட்டில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு விதிவிலக்கு அளித்ததே கட்டுப்பாடற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 21 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதங்களில், இதே போன்ற துப்பாக்கி சூடு சம்பவம்  மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தினால் செய்யப்படும் கொலை விகிதம் … Read more

மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியால் உக்ரைனுக்கு ஆபத்து அதிகரிக்கும்: ரஷ்யா எசரிக்கை

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆயுத விநியோகம் நிலைமையை மேலும் சீர்குலைவை ஏற்படுத்தும் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்குவது ஆபத்தானது என்று கூறினார். உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா அனுமதிக்க விரும்புவதாக மேற்கத்திய தலைவர்களுக்கு உறுதியளித்த ரஷ்ய அதிபர், “நிலைமையை மேலும் சீர்குலைக்கும் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை மோசமாக்கும் அபாயங்கள்” … Read more