ரஷ்யாவின் மிரட்டலுக்கு அடிபணியாத பின்லாந்து; நேட்டோவில் இணைய விருப்பம்

உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கிய நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்த போர் நீடித்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதலில்,  உக்ரைன் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் அடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது ரஷ்யாவின் மற்றொரு அண்டை நாடான பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா, பின்லாந்துக்கு வழங்கி வந்த … Read more

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்; வயிற்றில் பிளாஸ்டி கழிவுகளால் அதிர்ச்சி

அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் 47 அடி நீளமுள்ள விந்து திமிங்கலத்தில் உடல் ஒதுங்கியுள்ளது. திமிங்கலத்தின் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீன் மற்றும் வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் திமிங்கலத்தின் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. இறந்த விந்தணு திமிங்கலத்தின் வயிற்றில் மிக அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் கலந்திருப்பது நிபுணர்கள் குழுவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததால், திமிங்கலத்தால் சரியாக சாப்பிட முடியாமல போயிருக்கலாம் எனவும், அதனால், இறப்பு நேரிட்டுள்ளதாகவும் … Read more

UAE புதிய அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். புதிய ஆட்சியாளரின் தலைமையில் இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறவு தொடர்ந்து மேம்படும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். “அபுதாபியின் ஆட்சியாளர் எச்.எச். ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது நல்வாழ்த்துக்கள். அவரது ஆற்றல்மிக்க மற்றும் தொலைநோக்கு தலைமையின் கீழ், நமது … Read more

அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்; சூப்பர் மார்கெட் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரமும் இனவெறியும் அமெரிக்காவில் மிகவும் பொதுவான சம்பவங்களாக மாறி விட்டன. சென்ற மாதம் அமெரிக்காவின் பிரபல நகரமான நியூயார்க்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த துபாக்கி சூடு சம்பவத்தில் குறைந்தது 13 பேர் காயமடைந்தனர்.  இந்நிலையில், நியூயார்க் சூப்பர் மார்க்கெட்டில் தற்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 10 பேர் பலியாகியுள்ளனர். நியூயார்க்கில் சூப்பர் மார்க்கெட்டுக்கு வெளியே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கி ஏந்திய நபர், முதலில் 4 பேரை சுட்டுக் கொன்றார். பின்னர் சூப்பர் … Read more

மூன்றே நாளில் 8 லட்சம் பேருக்கு கொரோனா.. ஆபத்தான நிலையில் வடகொரியா

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. கடந்த 2 ஆண்டுகளாக தங்களது நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மறுத்து வந்த வடகொரியா, கடந்த 12-ம் தேதி  நாட்டில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் உலக சுகாதார அமைப்பும், சீனாவும் வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா … Read more

Wheat Export Ban: இந்தியாவின் கோதுமை ஏற்றுமதித் தடைக்கு கண்டனம் தெரிவிக்கும் உலக நாடுகள்

உக்ரைன் மீதான ரஷ்யப் போரின் எதிரொலியாகவும், பக்கவிளைவாகவும் உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. அதன் ஒரு விளைவாக, உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் கவலை கொள்ள செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்தியா கோதுமை ஏற்றுமதியை தடை செய்துள்ளது. இதற்கு  G7 அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. கோதுமையின் சர்வதேச விலையில் சமீபத்திய ஏற்றமானது, கோதுமை ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களுக்கு அதிக லாபத்தை தந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.   உணவு நெருக்கடி ஏற்படவும், உலக உணவு விநியோகத்தில் ஏற்பட்ட … Read more

'நிலைமை இன்னும் மோசமாகும்': இலங்கை நெருக்கடி குறித்து ரணில் விக்கிரமசிங்க

இலங்கை நெருக்கடி: இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மேம்படுவதற்கு முன்னர், தற்போது இருக்கும் நிலையை விட இன்னும் மோசமாகும் என இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளார். இலங்கையில் நீண்ட நாட்களாக இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான எரிபொருள் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. இலங்கையில் வாழ்வது கடினம் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பொது மக்கள் பலருக்கு உணவைக் கைவிட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. … Read more

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கைது?

இலங்கையில் பல வாரங்களாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மக்கள் போராட்டமாக வெடித்தது. பொதுமக்களின் கோபத்துக்கு அடிபணிந்த மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.  இதனால் அதிருப்தியடைந்த மஹிந்த ஆதரவாளர்கள் அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்த மக்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். ஆனால் போராட்டக்காரர்களும் பதில் தாக்குதல் நடத்தியதால் இலங்கை போர்க்களமாக மாறியது.  மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்ட ஆளும் கட்சி தலைவர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளின் வீடுகள் தீக்கரையாகின. மேலும், மஹிந்த … Read more

தடுப்பூசிக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் கல்தா கொடுக்கும் ஓமிக்ரான் மாறுபாடுகள் BA 4 மற்றும் BA 5

கொரோனாவின் தாக்கம் உலகில் முடிவுக்கு வந்துவிட்டது என்று மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டால், அதை தவறு என்று சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் ஆதாரத்துடன் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸின் ஓமிக்ரான் விகாரங்கள் BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றை கொரோனா தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஐரோப்பிய சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இந்த இரண்டு வகை விகாரங்களும் தடுப்பூசிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறமையை பெற்றுவிட்டன. கொரோனா பாதிப்புகள் ஏற்படுத்தும் அச்சமும் உலகை … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபா மறைவு: இந்தியா ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீபாவின் மறைவையடுத்து இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிக்கிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) காலமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று (2022, மே, 14 சனிக்கிழமை) ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) அதிபரும் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானதாக … Read more