சிவில் சர்வீஸ் வேலைகளில் ஐந்தில் ஒரு பங்கைக் குறைக்க ஜான்சன் உத்தரவு

அரசு வேலைவாய்ப்புகளில் ஐந்தில் ஒரு பங்கைக் குறைக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசு முடிவெடுத்திருக்கிறது. வரிக் குறைப்புகளுக்காக பணம் தேவைப்படும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த முடிவை எடுத்திருப்பதாக டெய்லி மெயிலில் வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது. பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள் மீதான நிதி அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குமாறும் பிரிட்டன் பிரதமர், தனது அமைசரவையின் தனது உயர்மட்ட குழுவிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மக்களின் அடிப்படை செலவுகள் தற்போது மிக அதிகமாக உள்ளது … Read more

உய்குர் முஸ்லிம்களை இன படுகொலை செய்கிறதா சீனா: கேள்விகளை எழுப்பும் தரவுக் கசிவு

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் 10,000 க்கும் மேற்பட்ட உய்குர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் கவலைகளை அதிகரித்துள்ளன. சீனாவின் தரவுத்தளத்தில் இருந்து கசிந்த பட்டியல் இதனை வெளிப்படுத்துவதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது சீனாவின் கம்யூனிஸ்ட் அதிகாரிகளால் நெருக்கமாகப் பாதுகாக்கப்படும் சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்களும் மற்ற பெரும்பான்மையான முஸ்லீம் சிறுபான்மையினரும் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் தடுப்பு மையங்கள் மற்றும் சிறைகளின் இரகசிய வலையமைப்பு உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் படிக்க … Read more

வடகொரியாவில் கொரோனாவுக்கு முதல் பலி

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. கடந்த 2 ஆண்டுகளாக தங்களது நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மறுத்து வந்த வடகொரியா, முதன்முதலாக ஒருவருக்கு தொற்று இருப்பதை நேற்று உறுதி செய்தது. இந்த நிலையில், வடகொரியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும், நேற்று மட்டும் சுமார் 18 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 6 … Read more

Bomb Blast: பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி 13 பேர் காயம்

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் குண்டு வெடிப்பு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மேலும் 13 பேர் காயமடைந்தனர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள சதார் பகுதியில் வியாழன் இரவு (20022, மே 12) ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் மோசமாக காயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கான காரணத்தை  பாகிஸ்தான் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.  காயமடைந்தவர்கள், வெடிகுண்டு சாதனங்களில் காணப்படும் பால் பேரிங்குகளால்  பாதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பின்போது, அருகில் இருந்த பல … Read more

பால்வெளியின் கருந்துளை: வெளியானது முதல் புகைப்படம்!

நமது அண்டவெளியில் பல்வேறு ஆச்சர்யமான விஷயங்கள் நிரம்பியுள்ளது.  தற்போது பால்வீதி விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள பிரம்மாண்டமான கருந்துளையின் புகைப்படம் ஒன்று முதல் முறையாக வெளியிடப்பட்டு இருக்கிறது.  இந்த தெளிவற்ற வண்ணமயமான புகைப்படத்தை எட்டு சின்க்ரனைஸ்ட் செய்யப்பட்ட ரேடியோ தொலைநோக்கிகளின் தொகுப்பான ஈவண்ட் ஹாரிஸான் தொலைநோக்கியின் வெளியிடப்பட்டது.   BIG BREAKING: First ever image of the black hole at the centre of our (Milky Way) galaxy! It’s called Sagittarius … Read more

இலங்கையின் புதிய பிரதமராகிறார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வியாழக்கிழமை பதவியேற்கிறார். உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப்படவுள்ளதாக ஐஏஎன்எஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய பின்னர் விக்ரமசிங்கவின் நியமனம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. இருப்பினும், விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), இப்போது பெரும்பான்மை வலு பெற ஒரு இடம் குறைவாக இருக்கும் நிலையில், எவ்வாறு பெரும்பான்மையை பெற முடியும் … Read more

பிரதமராக பதவியேற்கத் தயார்: இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா

கடும் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கும் நிலையில், மக்கள் போராட்டம் வலுப்பெற்று, போராட்டத்தை ஒடுக்க அரசு எடுத்த அடக்குமுறையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில், அதன் பிரதமராக இருந்த மகிந்தா ராஜபக்‌ஷேயின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. முன்னதாக பிரதமர் பதவியில் விலகிய ராஜபக்‌ஷே  தனது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் … Read more

வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா…நாடு முழுவதும் ஊரடங்கு

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. இதனைத் தொடர்ந்து தனது எல்லைகளை மூடிய வடகொரியா, தங்களது நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறி வந்தது.  உலக சுகாதார அமைப்பு, சீனா மற்றும் ரஷ்யாவினால் அளிக்கப்பட்ட தடுப்பூசிகளையும் வடகொரியா நிராகரித்தது. அந்நாட்டிலுள்ள சுமார் இரண்டரை கோடி மக்களும் தடுப்பூசி போடவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு, கொரோனாவை எதிர்கொண்டதற்காக நாட்டு மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் ராணுவ … Read more

பசிபிக் பெருங்கடலின் கடல் தளத்தில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதை

பசிபிக் பகுதியில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதையைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலவித வரலாற்று ரீதியிலான கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் பசிபிக் பெருங்கடலின் கடல் தளத்தில் மர்மமான மஞ்சள் செங்கல் பாதையை கண்டுபிடித்துள்ளனர், தற்போதைய உலகில் இல்லாத, தொலைந்து போன நகரமான பண்டைய அட்லாண்டிஸின் பாதைக்கு இணையாக இது இருக்கலாம் என்று நம்பும்படி இது அமைந்துள்ளது. ஆழ்கடல் பயணத்தின் நேரடி காட்சிகள், கடந்த மாதம் ஆன்லைனில் எக்ஸ்ப்ளோரேஷன் வெசல் நாட்டிலஸ் குழுவினரால் வெளியிடப்பட்டது, விசித்திரமான தோற்றமுடைய இந்த பாதை … Read more

ஜாக் டோர்சி மீண்டும் ட்விட்டரை கைப்பற்றுவாரா… மவுனம் கலைத்த முன்னாள் CEO

எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் ஜாக் டோர்சி முதல் முறையாக அது குறித்து பேசியுள்ளார்.  டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டரை வாங்கிய பிறகு, ட்விட்டரின் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி,  ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் இணைந்து மீண்டும் நிறுவனத்தை நடத்த உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. இந்த வதந்திகளுக்கு பதிலளித்த … Read more