Bizarre Play: ஆணுறையில் ஓட்டை போட்டதற்காக ஜெயில் தண்டனை அனுபவிக்கும் பெண்

ஆண்களுக்கு மட்டும்தான் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை கிடைக்குமா? பெண்களுக்கும் கிடைக்கும்…. ஆண் நண்பருடன் உடலுறவு வைத்தபோது திருட்டுத்தனம் செய்த பெண்ணுக்கு பைல்ஃபெல்ட் நகரில் உள்ள ஒரு பிராந்திய நீதிமன்றம்,  பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியது. மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் கர்ப்பம் தரிப்பதற்காக தனது ஆண் துணையின் ஆணுறையில் திருட்டுத்தனமாக துளையிட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். ஜெர்மனியின் Bielefeld நகரில் உள்ள ஒரு பிராந்திய நீதிமன்றம் அந்தப் பெண் தனது … Read more

என்னை எப்படா கழுதைன்னு சொன்னேன், டங் ஸ்லிப்பாயிடுச்சோ: வைரலாகும் இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இடம் பெற்றுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவருடன் கழுதை புகைப்படங்களும் இணைந்து வைரலாகிறது.  பல பிரச்சனைகளில் சிக்கித் தவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தற்போது நெட்டிசன்களில் ட்ரோல்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டு சிரிக்க வைக்கும் பேசுபொருளாகியிருக்கிறார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், உள்ளடக்க உருவாக்குநர்களான ஜுனைத் அக்ரம், முஸம்மில் ஹாசன் மற்றும் தல்ஹா ஆகியோருடன் சமீபத்தில் போட்காஸ்டில் இடம்பெற்றார். மேலும் படிக்க | 26/11 சூத்திரதாரி … Read more

கொரோனாவை நாங்க பாத்துக்கறோம் உங்க வேலையை மட்டும் பாருங்க: ஜீ ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் கோவிட் கொள்கை தொடர்பான பரபரப்பை அமைதிப்படுத்த கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். கொரோனாவின் தாயகம் சீனா என்பதால் மட்டுமல்ல, அண்மை மாதங்களில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாலும் கோவிட் தொடர்பான விஷயங்களில் சீனா தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிறது. இதனால், அந்நாட்டிற்குள்ளும் சர்வதேச அளவிலும் சீனாவின் கொரோனா திட்டங்கள் தொடர்பாக தொடர்ந்து அவதூறாகப் பேசப்பட்டு வருகிறது.  மேலும் சீன அதிகாரிகளால் பலவந்தமாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பான பல புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி … Read more

தினமும் கொரோனா பரிசோதனை…புதிய கட்டுப்பாடு கொண்டு வர சீனா திட்டம்?

சீனாவின் ஷாங்காய், பெய்ஜிங் ஆகிய நகரங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிக அளவில் பரவி உள்ளது. இதன் காரணமாக அந்நகரங்களில் சீனா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஊரடங்கு காரணமாக ஷாங்காய் நகரில் உள்ள சுமார் இரண்டரை கோடி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.  மேலும், ஜீரோ கோவிட் கொள்கையைப் பின்பற்றி வரும் சீனா, அடிக்கடி பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதோடு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அண்மையில் சென்றார்களா என்பது மொபைல் செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் எதிர்காலத்தில் கொரோனா … Read more

வீட்டு விலை எப்ப இப்படி குறைஞ்சது: 200 ரூபாய்க்கு பங்களா வீடு தர தயாராகும் நாடு

வாடகைக்கு குடியிருக்கும் வீடு பற்றி குறை சொல்பவர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த நாட்டில் அந்த குறைகளை கேட்க முடியாது என்று நிச்சயமாக சொல்லலாம். ஏனென்றால் இங்கு நல்ல பெரிய அளவிலான வீடு ஒன்றின் விலையே 80 ரூபாய் என்றால் வாடகைக்கு யாராவது வீடு எடுப்பார்களா என்ன?  வீடுகளின் விலை மலிவாக இருப்பதால் உலகில் உள்ள பலரும் இங்கு வீடு வாங்க நினைக்கின்றனர். ஆனால், அந்த போட்டியில் முன்னணியில் இருப்பது அமெரிக்கர்கள் தான்… ஏராளமான அமெரிக்க குடிமக்கள் இங்கு … Read more

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15 மில்லியன் மக்கள்: WHOவின் அதிர்ச்சியூட்டும் தரவு

புதுடெல்லி: கொரோனா வைரஸால் சர்வதேசமும் அதிர்ந்து போன நிலையில், அதன் பலி எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. சீனாவின் வூஹானில் தொடங்கிய கொரோனாவின் களியாட்டம் இன்றும் தொடர்கிறது என்றாலும் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. கோவிட் தடுப்பூசி, கொரோனா தொடர்பான விழிப்புணர்வு என பல காரணிகள் கொரோனாவின் தாக்கத்தையும் பலி எண்ணிக்கையையும் குறைத்துள்ளது. ஆனால் உண்மையில் உலகில் கோவிட் இறப்பு எண்ணிக்கை பதிவாகியதை விட மூன்று மடங்கு அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு (World … Read more

ஏலியன்களை கவர நிர்வாண புகைப்படங்களை அனுப்பும் நாசா!

பல ஆண்டு காலமாகவே விஞ்ஞானிகள் பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் உயிரினங்கள் எதுவும் வாழ்கின்றதா என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  ஏலியன்கள் இருப்பதாக அடிக்கடி சில செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றனர், ஏலியன்கள் இருக்கிறதா இல்லையா என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.  சில இடங்களில் பறக்கும் தட்டை பார்த்ததாகவும், சில இடத்தில் ஏலியன் வந்து இறங்கியதாகவும் பல செய்திகள் இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கிறது.  ஆனால் இவை பற்றிய உண்மையான தகவல்கள் எதுவும் இன்றளவும் உறுதிப்படுத்தப்படவில்லை.  இருப்பினும் விஞ்ஞானிகள் … Read more

கட்டாயப்படுத்தி கொரோனா பரிசோதனை…அதிர்ச்சியூட்டும் காணொலி

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதோடு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டை விட்டு வெளியே வர முடியாததால் ஏராளமானோர் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்றித் தவிப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.  ஷாங்காயைப் போல பெய்ஜிங் நகரிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெய்ஜிங்கிலும் 40க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள், … Read more

ரஷ்யா ஏவுகணை பயங்கரவாத உத்தியை பயன்படுத்துகிறது: உக்ரைன்

https://zeenews.india.com/tamil/topics/Ukraineலிவிவ்: ரஷ்யா உக்ரைன் மீது இரு மாத காலங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மேலை நாடுகள் உக்ரேனிற்கு, ஆயுதங்களை பெருமளவு வழங்கி வருவதாக புகார் கூறிய ரஷ்யா, உக்ரைன் முழுவதும் உள்ள இரயில் நிலையங்கள் மற்றும் பிற சப்ளை-லைன் இலக்குகளை குண்டுவீசித் தாக்கியது. ஐரோப்பிய ஒன்றியம் புதன் கிழமை ரஷ்யாவிடம் இருந்து செய்யப்படும் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்து குறிப்பிடத்தக்கது. உக்ரைனில் உள்ள ஐந்து ரயில் நிலையங்களில் உள்ள மின்சார வசதிகளை அழிக்க கடல் … Read more

ரஷ்யா-உக்ரைன் போர்: தோல்வியில் முடிந்த போப்பின் ராஜீய முயற்சி

ரஷ்யா-உக்ரைன் போர்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த, போப் பிரான்சிஸ் மேற்கொண்ட ராஜீய முயற்சி தோல்வி அடைந்தது. ஈஸ்டர் அன்று போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற அவரது வேண்டுகோள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவருடனான அவரது திட்டமிடப்பட்ட சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. எனவே அவர் மாஸ்கோ … Read more