பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு: இம்ரான் கட்சியின் மாற்று திட்டங்கள் என்ன?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ராக் கானின் அரசியல் கட்சியான பாகிஸ்ஹான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) ஆட்சியை தக்க வைக்கும் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. எனினும், இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் வெற்றி அடைந்துவிட்டால், அதை சமாளிப்பதற்கான ஒரு மாற்று திட்டத்தையும் இம்ரான் கானின் கட்சி வகுத்துள்ளது.  பி.டி.ஐ நாட்டில் வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவும், உடனடியாகவும் தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனிடம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் மின்னணு வாக்களிப்பு … Read more

கொரோனாவே இன்னும் முடியல, அடுத்து இதுவாம்: WHO கொடுத்த பகீர் தகவல்

வாஷிங்டன்: கொரோனா தொற்று உலகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. இதனால் உலகெங்கிலும் ஏராளமான உயிர், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், சில பகுதிகளில் இன்னும் புதிய கொரோனா தொற்று பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கிடையில், மக்கள் மற்றொரு தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது. பூச்சிகள் மூலம் தொற்றுநோய் பரவலாம் எங்கள் கூட்டாளர் வலைத்தளமான வியானின் அறிக்கையின்படி, … Read more

நீங்கள் பிரதமராகாமல் இருந்திருந்தால்?..இம்ரான் கானை சாடிய முன்னாள் மனைவி

பாகிஸ்தானில் பணவீக்கம் , கடுமையாக உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் இம்ரான் கானின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான முத்தாஹிதா குவாமி இயக்கம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து இம்ரான் கான் அரசு பெரும்பான்மை இழந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 342 எம்.பி.க்கள் உள்ள நிலையில் இம்ரான் கானுக்கு ஆதரவாக 164 எம்.பிக்கள் உள்ளனர். ஆட்சியைத் தக்க வைக்க 172 எம்.பி.க்களின் ஆதரவு தேவை கடந்த … Read more

கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்

இலங்கை அதிபர் இல்லத்திற்கு முன்பாக கலவரம் கட்டுப்பாட்டுக்குள் – 54 பேர் வரை கைது – 35க்கும் மேற்பட்டோர் காயம் – போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் செயற்பட்டதாக அதிபர் குற்றச்சாட்டு. இதனையடுத்து கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பின்னர்  கொழும்பு நுகேகொடை மிரிஹான பகுதியில் அதிபரின் இல்லத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. போலீஸ், இராணுவம், சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக … Read more

சீனாவில் தொடர்ந்து கொரோனா…ஷாங்காயில் தீவிர ஊரடங்கு

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் உலக நாடுகளுக்கும் பரவியது. உலக நாடுகள் கொரோனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறிய நிலையில், தீவிர ஊரடங்கு விதிகளால் சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது சீனாவுக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. சீனாவின் துறைமுக நகரான ஷாங்காயில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஷாங்காயின் தினசரி கொரோனா … Read more

இலங்கை பெரும் பதற்றம்; அதிபர் இல்லத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

இலங்கையில் ஏற்பாட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியினால், மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள நுகேகொட மிரிஹானயில் நேற்று இரவு நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தில், அதிபரின் இல்லத்துக்கு செல்லும் சாலையை மறித்து போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் மிரிஹானவில் அதிக அளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பதற்ற நிலை உருவானது. அதிபரின் இல்லத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.  மேலும், இலங்கை அதிபர் இல்லம் நோக்கி செல்லும் போராட்டக்காரர்களை போலீசார் … Read more

தோல்வியை ஏற்காமல், என் வாழ்நாள் முழுவதும் போராடினேன்: இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை (மார்ச் 31) தனது பிடிஐ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தான் தோல்வியை ஏற்காமல் இறுதிவரை போராடுவேன் என்று கூறினார். நாட்டு மக்களிடையே உரையாற்றிய இம்ரான் கான், “நான் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியபோது, நான் கடைசி பந்து வரை விளையாடும் வரை விளையாடியதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். வாழ்க்கையில் தோல்வியை ஏற்றுக்கொண்டதில்லை. நான் துவண்டு விடுவேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் … Read more

வில்ஸ் ஸ்மித்தின் மன்னிப்பும், கிறிஸ் ராக்கின் பதிலும்.!

ஆஸ்கர் விழா எப்போதும் போலவே இனிமையாக முடிந்தாலும், இந்தாண்டு ஒரு ‘அறை’ மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்ற 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, ‘கிங் ரிச்சர்ட்’ என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். ஆஸ்கர் விருதை வில் ஸ்மித் பெறுவது இதுவே முதல்முறையாகும். விழாவை கிறிஸ் ராக் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் மொட்டைத் தலை குறித்துக் … Read more

Viral News: பறவைக்காக கூந்தலில் கூடு கட்டி தந்த வள்ளல்; 3 மாதம் வசித்த பறவை

மனிதர்களுக்கு இடையிலான ஆழமான நட்பு பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஒரு பெண்ணிற்கும் பறவைக்கும் உள்ள ஆழமான நட்பை அறிந்தால் வியப்பீர்கள். ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு ஒரு பறவையை தன் கூந்தலில் கூடு கட்ட அனுமதித்த்துள்ள நிலையில், ஒரு அசாதாரண நட்பின் கதை இணையத்தில் பரவலாகப் பகிரப்படுகிறது.  ஒரு ட்விட்டர் பதிவில், Hannah Bourne-Taylor என்ற பெண், தன் கூட்டத்தில் இருந்து தனித்து விடப்பட்ட ஒரு பறவைக்கு, 84 நாட்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறினார். லண்டனில் வசிக்கும் … Read more

நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு உண்மையானால் உலக வரைபடமே 2022இல் மாறும்

Nostradamus Predictions for 2022: பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் பிரபலமானவை. அவற்றில் பல உண்மையாக நடந்துள்ளன.  2022ஆம் ஆண்டில் ரஷ்ய – உக்ரைன் போர் குறித்து அவர் வெளியிட்ட தகவல்கள் இப்போது பேசுபொருளாகியுள்ளன. நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள் 2022: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஒரு மாத காலமாக போர் நடந்து வருகிறது. இந்தப் போரின் விளைவுகள் உலகம் முழுவதும் உணரப்படுகின்றன. போர் காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ரஷ்ய-உக்ரேனியப் போர் மூன்றாம் உலகப் போராக மாறக்கூடும் … Read more