ரஷ்யாவில் இன்று முதல் இன்ஸ்டாகிராமுக்குத் தடை…பதிலுக்கு பதில் கொடுத்த புடின்

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 19-வது நாளாக தொடர்கிறது. ரஷ்ய மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி, சோனி போன்ற பொழுதுபோக்கு நிறுவனங்கள் ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்தியுள்ளன. சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் வன்முறை மற்றும் வெறுப்பைத் தூண்டும் விதத்திலான பதிவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுக்கு எதிரான வெறுப்புப்பதிவுகளுக்கு  ஃபேஸ்புக் நிறுவனம் தற்காலிக அனுமதி வழங்கியது. ரஷ்ய … Read more

Canada Accident: கனடா சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் பலி! படுகாயமடைந்த இருவருக்கு சிகிச்சை

ஒட்டாவா: கனடாவில் நடந்த சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் சனிக்கிழமையன்று நெடுஞ்சாலை 401 இல் பயணிகள் வேனில் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 3:45 மணியளவில் டிராக்டர்-டிரெய்லர் மீது மோதினர். 5 Indian students passed away in an auto accident near Toronto on Saturday, March 13. Two others in hospital. Team of Consulate General of India in … Read more

உக்ரைனில் ரஷ்ய தாக்குதல்! அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் பலி மற்றொருவர் காயம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர் பலியாகிவிட்டதாகவும், மற்றொரு அமெரிக்கர் படுகாயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. உக்ரேனிய அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு ரஷ்யப் படைகளைக் குற்றம் சாட்டினர், ஆனால் இந்த தகவல் உறுதிபடுத்தப்படவில்லை, சூழ்நிலைகளும் தெளிவாக இல்லை. AFP செய்தியாளர்கள் அப்பகுதியில் சிறிய ஆயுதங்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களைக் கேட்டதாக கூறுகின்றனர். உக்ரைனின் இர்பினில், காரில் சென்றுக் கொண்டிருந்தபோது ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும்,  மற்றொருவர் காயமடைந்தார் என்று மருத்துவர்கள் மற்றும் சாட்சிகளை மேற்கோள் … Read more

அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ! ஜன்னல் வழியே குழந்தையை தூக்கி எறிந்த தந்தை!!

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தின் தெற்கு ப்ரவுண்ஸ்விக் நகரில் உள்ள 24 குடியிருப்புகளைக் கொண்ட அடுக்கு மாடிக்குடியிருப்பு ஒன்றில் கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது.  2-வது மாடியிலுள்ள குடியிருப்பில் வசித்து  வந்த நபரும், அவரது 3 வயது குழந்தையும் தீயில் சிக்கினர். வீடு முழுவதும் தீப்பிடித்த நிலையில், அவர்கள் பூட்டிய அறைக்குள் இருந்ததால் தீயில் சிக்கவில்லை. எனினும், சிறிது நேரத்திற்குள் அறைக்குள்ளும் தீ பரவிவிடும் என்பதால் விரைந்து இருவரையும் மீட்க அதிகாரிகள் திட்டமிட்டனர். அதற்கு அறையின் ஜன்னல் … Read more

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா! 2 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகம் முழுவதும் பரவியது. முழு அடைப்பு, பயணக்கட்டுப்பாடு, அதிக பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் சீனா கொரோனா  தாக்குதலை கட்டுப்படுத்தியது. தற்போது டெல்டா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 393 பேருக்கு கொரோனா … Read more

அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – மூள்கிறதா மூன்றாம் உலகப்போர்?

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இன்றுடன் 18-வது நாளாக நீடித்து வருகிறது. ரஷ்யாவுடனான போரில் தங்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களமிறங்கும் என உக்ரைன் அரசு எதிர்பார்த்தது. அப்படி நடந்தால் அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்த மேற்குலக நாடுகள் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்குவதோடு நிறுத்திக்கொண்டன. மறுபக்கம் ரஷ்யா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை தொடர்ந்து அந்நாடுகள் விதித்து வருகின்றன.  உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கினால், அந்த நாடுகள் நேரடியாக போரில் பங்கெடுத்ததாகவே கருதப்பட்டு தக்க … Read more

22 வருடங்களாக சிப்ஸ் மட்டும் சாப்பிட்டு உயிர் வாழும் பெண்!

சிப்ஸ், சிக்கன் நக்கெட்ஸ் போன்ற துரித உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்றும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு நன்மை பயக்கும் என்று தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம்.  துரித உணவுகள் உண்பதை பெரும்பாலும் தவிர்க்க சொல்லித்தான் நாம் கேட்டிருப்போம்.  ஆனால் இங்கு ஒரு பெண் கிட்டத்தட்ட 22 வருடங்களாக இதுபோன்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார்.  லண்டனின் கேம்பிரிட்ஜ் மாகாணத்தை சேர்ந்தவர் சம்மர் மோன்ரோ.  25 வயதான இந்த பெண் ஒரு தீவிர … Read more

Russia-Ukraine conflict: மரியுபோல் மீது கடும் தாக்குதல்! கீவ் அருகே மோதல் தொடர்கிறது

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில், கியேவின் புறநகர்ப் பகுதியில் சண்டை கடுமையாகியுள்ளது. தலைநகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் தொடரும் நிலையில், மக்கள் பதுங்கிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.   ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கிய்வ் முழுவதும் வெடிகுண்டுகளை விதைக்க ஆசைப்படுகிறது என்ரும், நகரத்தை கைப்பற்ற அதன் குடியிருப்பாளர்களைக் கொல்ல வேண்டும் என்று சனிக்கிழமையன்று உக்ரைன் அதிபர் Zelenskyy தெரிவித்தார். “நம்மையெல்லாம் கொன்றால்தான் இங்கு வரமுடியும். அதுதான் அவர்களின் இலக்கு என்றால் வரட்டும்” என்றார். துறைமுக நகரமான … Read more

Execution: ஒரே நாளில் 81 பேருக்கு மரணதண்டனை! சவூதி அரேபியாவின் கடுமையான தண்டனை…

ஒரே நாளில் 81 பேருக்கு மரணதண்டனை வழங்கியது சவுதி அரேபியா. இது அந்நாடு, 2021 ஆண்டு முழுவதும் நிறைவேற்றிய மரணதண்டனையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.   சவூதி அரேபியாவில் 2021 ஆம் ஆண்டு முழுவதும் நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக ஒரே நாளில் 81 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. Saudi Arabia executes 81 people in one day for terror offences, reports AFP News Agency quoting state media — … Read more

அதிசயம், ஆனால் உண்மை! காற்றில் உள்ள கார்பனில் இருந்து தயாரிக்கப்பட்ட வைரம்..!!

சமீபத்தில் நியூயார்க்கை சேர்ந்த ஆடம்பர நகை நிறுவனம் காற்றில் இருந்து வைரங்களை தயார் செய்துள்ளது. ஏதர் என்ற நிறுவனம் இதனை ஆய்வகத்தில் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த வைரம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வைரம் ஏன் சிறப்பு வாய்ந்தது மற்றும் எப்படி தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். காற்றில் இருந்து விலைமதிப்பற்ற வைரம்   வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு (CO2) உதவியுடன் இந்த வைரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ‘டெய்லிமெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது. காற்று … Read more