உக்ரைனின் டோனெட்ஸ்க் – லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகாரித்த ரஷ்யா

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலின் முக்கிய புள்ளி டான்பாஸ் பகுதி. இந்த எல்லைப் பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பகுதியின் முக்கியத்துவம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.  ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடின் உக்ரைனின் கிழக்கு மாகாண பகுதிகளான, டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு எனப்படும் இரண்டு பிரிவினைவாத பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்துள்ளார் என உக்ரைனில் இருந்து வரும் சமீபத்திய செய்திகள் கூறுகின்றன. ரஷ்யத் தலைவரும் இந்தப் பகுதியில் தனது படைகளை … Read more

Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள்

கிழக்கு உக்ரைனில் சமீபத்திய ரஷ்ய நடவடிக்கைக்குப் பிறகு ரஷ்யா உக்ரைன் இடையிலான நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த நிலையில், செவ்வாயன்று கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அமெரிக்க பங்குச் சந்தையில் ஸ்டாக் ஃப்யூசர்சில் சரிவு காணப்பட்டது.  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ‘டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுகளை’ ‘சுயாதீனமாக’ அங்கீகரிப்பதற்கான ஆணைகளில் கையெழுத்திட்டதை அடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மாஸ்கோவும் இந்த பகுதிகளுக்கு படைகளை அனுப்பியுள்ளது. ப்ரெண்ட் க்ரூட் ஃப்யூச்சர்ஸ் சுமார் 4% … Read more

பேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கியது டொனால்ட் ட்ரம்ப் ஆப்!

கடந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்து, ஜோ பைடன் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சில சர்ச்சைக்குரிய அவதூறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சில சமூக ஊடங்கள் அவரது கணக்கிற்கு தடை விதித்தது.  இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு போட்டியாக செயலி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அவரது டிரம்ப் மீடியா & டெக்னாலஜி க்ரூப் உடன் இணைந்து … Read more

Ukraine Crisis: ‘இப்ப பேச்சுவார்த்தை தேவையா?’ நீட்டி முழக்கும் ரஷ்யா

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், டொனெட்ஸ்க் நகரின் மையத்தில் திங்கள்கிழமை அதிகாலை குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நகரம் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் பிடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை, குண்டுவெடிப்பு குறித்த முழுமையாக தகவல் எதுவும் வெளிவரவில்லை.  அறிக்கைகளின்படி, மாஸ்கோ ஆதரவில் உள்ள டொனெட்ஸ்கில் இருந்து வெளியேறிய மக்கள், தென்மேற்கு ரஷ்ய நகரமான தாகன்ரோக்கில் இரயில்களுக்காகக் காத்திருந்தனர். அவர்கள் பாதுகாப்பான மற்ற இடங்களுக்கு செல்ல … Read more

அகழ்வாராய்ச்சி: 5300 ஆண்டு பழமையான மண்டை ஓட்டின் மூலம் வெளியான அதிசய தகவல்!

அறுவை சிகிச்சை என்பது நவீன காலத்தின் பரிசாக கருதப்பட்டாலும், அது முழுமையாக உண்மையல்ல. அகழ்வாராய்ச்சியில் வெளி வந்துள்ள சான்றுகள்,  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதைக் காட்டுகிறது. காது கல்லறையில் இருந்து 5,300 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு மூலம் அறுவை சிகிச்சைக்கான ஆதாரங்கள்  வெளிவந்துள்ளது. காது அறுவை சிகிச்சையின் ஆரம்ப சான்றுகள் தொடர்பான  தகவல்கள் ஜீ குழுமத்தின் WION செய்தி அறிக்கையில் வெளியாகியுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு ஸ்பெயினில் உள்ள ஒரு கல்லறையில் … Read more

Mother Language Day: 23-ஆவது உலக தாய்மொழி நாள் இன்று! தாய்த்தமிழைப் போற்றுவோம்

தாய்மொழியின் பெருமையையும், ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு அந்நாட்டில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் உலக தாய்மொழி நாள் இன்று.  23-ஆவது பன்னாட்டு தாய்மொழி நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக தாய்மொழி தினத்துக்கான கருப்பொருள் ‘பன்மொழி கற்றலுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்று ஐ.நா அறிவித்துள்ளது. கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள தாக்கஙக்ள், அதிலும் குறிப்பாக கல்வித் துறையில் தொலைதூரக் கல்விக்கு தொழில்நுட்பம் எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. … Read more

எச்சரிக்கை! கொரோனா இன்னும் போகவில்லை, புதிய ஆபத்து வருது

வாஷிங்டன்: கொரோனா நெருக்கடி இன்னும் முடிவடையவில்லை, இதற்கிடையில் உலகம் மற்றொரு தொற்றுநோய் அபாயத்தில் உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், விரைவில் கொரோனா போன்ற மற்றொரு தொற்றுநோய் உலகைத் தாக்கும் என்று எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை மக்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. கோவிட்-19 இலிருந்து கடுமையாக நோய்வாய்ப்படும் ஆபத்து வியத்தகு அளவில் குறைந்துள்ளது என்று பில் கேட்ஸ் கூறினார். ஏனென்றால், இந்த வைரஸுக்கு எதிராக மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக அதிகரித்து உள்ளது. புதிய எச்சரிக்கை சிஎன்பிசிக்கு அளித்த … Read more

ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க ஜோ பைடன் ஒப்புதல்; உக்ரைனில் போர் மேகங்கள் விலகுமா!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை தவிர்க்க உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.  இந்நிலையில், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை நடத்தாமல் இருந்தால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கொள்கை அடிப்படையில் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. “படையெடுப்பு தொடங்கும் தருணம் வரை, அதனை தடுக்க இராஜீய நிலையிலான நடவடிக்கையை தொடர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்பதில் பைடன் நிர்வாகம் தெளிவாக உள்ளது என்று வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் ஜென் சாகி … Read more

உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்; இந்திய குடிமக்கள் தற்காலிமாக வெளிபேற இந்தியா அறிவுறுத்தல்

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை தவிர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சம் நிலவுவதால், கியேவில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 20) உக்ரைனில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லாத இந்திய குடிமக்களும், இந்திய மாணவர்களும், உக்ரைனை விட்டு தற்காலிகமாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது. பதற்றம் நிறைந்திருக்கும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் கவலைகளை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் உக்ரைன் இடையே மூன்று வந்தே பாரத் மிஷன் விமானங்களை இயக்குவதாக … Read more

Unique experiment: சூப்பர் ஐடியா! நீர் சேமிப்பு + மின்சார உற்பத்தி = சோலார் பேனல்கள்

Unique experiment: கால்வாய்களில் சோலார் பேனல்களை வைத்து, 63 பில்லியன் கேலன் தண்ணீர் சேமிப்பதுடன், 13 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சூப்பர் திட்டம்… 4,000 மைல்கள் (6437 கிமீ) அளவிற்கு கால்வாய்களின் இரண்டு பக்கங்களிலும் சோலார் பேனல்கள் வைக்கப்பட்டு இந்த அற்புதமான இயற்கையை மேம்படுத்தி, நவீன வசதிகளை பெறும் திட்டம் கலிபோர்னியாவில் செயல்படுத்தப்படுகிறது. நெவாடா மலைகள் மற்றும் கலிபோர்னியாவின் வடக்குப் பகுதிகளிலிருந்து மாகாணத்தின் பிற பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்லும் கால்வாய்களின் இருபுறமும் சூரியசக்தி பேனல்கள் … Read more