Russia-Ukraine: பேஸ்புக், ட்விட்டரைத் தொடர்ந்து கூகுள் நியூஸிற்கும் ரஷ்யாவில் தடை..!!

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர்  சுமார் ஒரு மாத காலமாக தொடர்கிறது. ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடக்கிய பிறகு ரஷ்யா மீது உலகின் பல நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இருப்பினும், ரஷ்யா போரில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை.  உக்ரேனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கை குறித்த போலிச் செய்திகள் மற்றும் ரஷ்யாவில் ஆர்ப்பாட்டங்கள தூண்டு செய்திகளை அகற்றுவதற்கான ரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கைகளை புறக்கணிப்பதாக சமூக ஊடக  … Read more

Alina Kabaeva: இவர் தான் ரஷ்ய அதிபர் புடினின் ரகசிய காதலியா; அதிர வைக்கும் தகவல்கள்!

உக்ரைன் மீதான ரஷ்யா தொடங்கிய ராணுவ நடவடிக்கைகள் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவும், அதன்  நட்பு நாடுகளும் ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகின்றன. எனினும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லாமல் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த பதற்றமான சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என கூறப்படும், முன்னாள் ஒலிம்பிக் … Read more

ஐ.நா-வில் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானம்: வாக்களிக்காமல் ஒதுங்கி நின்ற இந்தியா

ஐக்கிய நாடுகள் சபை: உக்ரைனில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பான ரஷ்யாவின் தீர்மானத்தில் 12 ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் சேர்ந்து இந்தியாவும் எந்த பக்கமும் சாராமல் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. சிரியா, வட கொரியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் ரஷ்யாவின் வரைவு தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளித்தன. புதன் கிழமையன்று, ஐ.நா சபையில் நிறைவேற்றப்படுவதற்குத் தேவையான ஒன்பது வாக்குகளைப் பெறாததால், இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ரஷ்யாவும் சீனாவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன, எந்த நாடுகளும் எதிராக … Read more

இலங்கையில் கடும் நெருக்கடி; வங்கிகளின் வெளிநாடு நாணய இருப்பை கைப்பற்றும் அரசு!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,  வங்கிகளில் இருந்து வெளிநாட்டு நாணய கையிருப்பை இலங்கை அரசு கைப்பற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.  இலங்கையில் சில காலங்களாகவே கடுமையான பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு வரும் நிலையில், கடுமையான மின்வெட்டு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், இலங்கை நாட்டு மக்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் … Read more

பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட ஆஃப்கான் நிதியமைச்சர்! கால் டாக்சி ஓட்டும் காலித் பயெண்டா!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து, முந்தைய அரசின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் உயிர் பயத்தில் குடும்பத்தோடு நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. அவர்களில் சிலர் தங்களின் வாழ்வாதரத்துக்காக பல்வேறு சிறிய வேலைகளைப் பார்த்து வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் படிக்க | ரஷ்ய தாக்குதலில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் வருவதற்கு … Read more

Ukraine under Threat: உக்ரைனில் செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகே பரவியது காட்டுத் தீயா?

உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகே பல இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செர்னோபில் அணு உலைக்கு அருகே காட்டுத் தீ பரவியுள்ளதாக உக்ரைனின் அதிகாரப்பூர்வ அறிக்கையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. செர்னோபில் அணு உலை அருகே காட்டுத் தீ ரஷ்யா-உக்ரைன் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், செர்னோபில் அணு உலைக்கு அருகே காட்டுத் தீ வெடித்துள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் அதிகாரப்பூர்வ அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. செயற்கைக்கோள் … Read more

பாகிஸ்தானில் ஆட்டம் காணும் இம்ரான்கானின் நாற்காலி; விரைவில் ஆட்சி கவிழ்ப்பு?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. இம்ரான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், மார்ச் 28ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாகவே இம்ரான் பதவியை விட்டு விலகலாம் என நம்பப்படுகிறது. ராணுவத் தளபதி அவரைபதவி விலகுமாறு கேட்டுக் கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் இருந்து மற்றொரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. இம்ரான் கானின் நெருங்கிய நண்பர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. … Read more

அணு ஆயுதத்தை பயன்படுத்த விரும்பவில்லை… ஆனால்… எச்சரிக்கை விடுக்கும் ரஷ்யா..!!

மாஸ்கோ: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 28 நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், ரஷ்ய தாக்குதலால் உக்ரைனின் பல நகரங்கள் அழிந்துள்ளன.  ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் போருக்கு மத்தியில் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகில்  ஒரு வித பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து என்று டிமிட்ரி பெஸ்கோவ் அளித்துள்ள எச்சரிக்கை மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.  விளாடிமிர் புடின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் … Read more

ராணுவக் கண்காணிப்பில் பெட்ரோல் டீசல் விற்பனை ! மோசமாகும் பொருளாதாரம்! தள்ளாடும் நாடு…

இலங்கையில், எண்ணெய் உட்பட அனைத்து பொருட்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் இங்கு ஒவ்வொரு நாளும் சாதனை உச்சத்தை எட்டுகிறது. இதற்கு அரசின் தவறான முடிவுகள் உட்பட பல காரணங்கள் உள்ளன. எரிபொருள் விற்பனையின்போது கும்பல் வன்முறை ஏற்படாமல் தடுக்கும் விதமாக, இந்த நாட்டின் அனைத்து பெட்ரோல் பம்புகளிலும் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், ராணுவத்தின் கண்காணிப்பில் பெட்ரோல்-டீசல் விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.  … Read more

சீனா விமானம் விபத்து: விமானம் செங்குத்தாக விழுந்தது ஏன் என குழம்பும் விஞ்ஞானிகள்

நேற்று, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன் விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷனால் இயக்கப்படும் ஜெட் வுஜோ நகருக்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் விழுந்து சிதைந்த பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என சீனாவின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் கூறியது.  எனினும் விமானம் செங்குத்தாக விழுந்து விபத்திற்குள்ளானது நிபுணர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். விமானம் ஒரு உயரத்தில் நிலையாக சென்று கொண்டிருக்கும் போது, … Read more