உக்ரைன் மருத்துவ கல்லூரிகள் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியது!

ரஷ்ய ராணுவத்தின் கடுமையான தாக்குதலுக்கு மத்தியில் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரேனை விட்டு வெளியேறிய மாணவர்கள், எதிர்காலம் என்ன ஆகுமோ என்று கவலை கொண்டிருந்த நிலையில்,  இந்திய மாணவர்களுக்கு  நிம்மதி அளிக்கும் வகையில், பல உக்ரைனிய மருத்துவ பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. இருப்பினும் சில மாணவர்கள் நடைமுறை வகுப்புகளுக்குச் செல்ல முடியாமல் உள்ளதை எண்ணி கவலையடைந்துள்ளனர். பல மருத்துவப் பல்கலைக்கழகங்கள், பெரும்பாலும் மேற்கு உக்ரைனில் அமைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை (மார்ச் 14) முதல் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. … Read more

வெடிகுண்டை தண்ணீர் மூலம் செயலிழக்க வைத்த உக்ரைன் வீரர்கள்..! திக் திக் நிமிடங்கள்..!

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், தினந்தோறும் போர் தொடர்பான பல்வேறு வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், இன்று இரண்டு அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. Ukrainian emergency services defuse an unexploded Russian bomb using bottled water pic.twitter.com/JLhz0wgfA0 — The Sun (@TheSun) March 15, 2022 மேலும் படிக்க | பாஸ்பரஸ் குண்டு என்றால் என்ன? அந்த வெடிகுண்டை ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது … Read more

இந்தியாவிற்கு 20-25% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கும் ரஷ்யா..!!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை. போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கிய பிறகு, தற்போது வரை கச்சா எண்ணெய் விலை 40% வரை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கூட எரிபொருள் விலை உயர்வின் காரணமாக, … Read more

ரஷ்யா – உக்ரைன் போர்: கிவ் நகரில் மார்ச் 17ம் தேதி வரை ஊரங்கு உத்தரவு அமல்

ரஷ்யா – உக்ரைன் போர்  மூன்று வார காலமாக தொடரும் நிலையில், ரஷ்யப் படைகளால் நகருக்கு வெளியே உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் தாக்கப்பட்டதை அடுத்து, கிவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ செவ்வாயன்று மார்ச் 17 வரை 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஊரடங்கு காலத்தில், வெடிகுண்டு தாக்குதலில்  இருந்து பாதுகாக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு செல்வதற்கு மட்டுமே மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கிவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோவை மேற்கோள் காட்டி தி … Read more

சீனாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா: பல இடங்களில் மீண்டும் ஊரடங்கு

சுமார் இரண்டு ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று இன்னும் நம்மை விட்டபாடில்லை. இந்த வைரசின் பிறப்பிடமான சீனா இன்னும் இந்த தொற்றின் வீரியத்தை அனுபவித்து வருகிறது. செவ்வாய்கிழமை (மார்ச் 15, 2022) அன்று வெளியிடப்பட்ட சீனாவின் தொற்று அளவு இன்னும் அந்த நாடு அபாயகரமான நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டியது. தொற்று துவங்கியதிலிருந்து சீனா தனது அதிகபட்ச தினசரி தொற்று எண்ணிக்கையை தற்போது பதிவு செய்துள்ளது. சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,280 பேர் … Read more

பாஸ்பரஸ் குண்டு என்றால் என்ன? அந்த வெடிகுண்டை ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது உண்மையா?

Russia Ukraine War: உக்ரைனில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.  பாஸ்பரஸ் குண்டு என்றால் என்ன? அந்த வெடிகுண்டை ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது, அது எவ்வளவு அழிவை ஏற்படுத்தும்? ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் (Russia Ukraine War) ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகிறது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நகரங்களை குறிவைத்து வருகிறது.  இதில், ஏவுகணை தாக்குதல்களுடன், ரஷ்யா … Read more

ஒரு நாளைக்கு 40 வீரர்களை சுட்டுத்தள்ளும் மென்பொறியாளர் – யார் இந்த உக்ரைன் அசுரன்?

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உலகின் அபாயகரமான துப்பாக்கிச்சுடும் வீரராக கருதப்படும் ‛ஸ்னைப்பர் வாலி’(sniper Wali) உக்ரைனுக்கு ஆதரவாக களமாடி வருகிறார்.  உக்ரைன் மீதான ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதல் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தாக்குதலின் வேகம் அதிகரித்துள்ளது. உக்ரைன் அரசுக்கு சொந்தமான கட்டடங்கள், காவல் நிலையங்கள், விமான நிலையங்களை மட்டுமே குறிவைத்து தாக்கிய ரஷ்ய ராணுவம் தற்போது குடியிருப்புகள், மருத்துவமனைகளையும் தாக்க தொடங்கியுள்ளன.  உக்ரைனின் … Read more

மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும்? ஒரு மருத்துவரின் பகீர் அனுபவம்..!!

மரணத்திற்குப் பின் வாழ்வு உண்டா? உடல் இறக்கும் போது ஆன்மாவுக்கு என்ன நடக்கும்? இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலை அறிய பல நூறு ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இறந்த பிறகு என்ன நடக்கும் என்பது குறித்த மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை,  ஆழ்ந்த கோமாவிலிருந்து தப்பிய நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார். வேறொரு உலகத்தை அடையும் ஆன்மா  ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மரணத்திற்குப் பின் வாழ்க்கை குறித்த அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். … Read more

ரஷ்யாவில் இன்று முதல் இன்ஸ்டாகிராமுக்குத் தடை…பதிலுக்கு பதில் கொடுத்த புடின்

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 19-வது நாளாக தொடர்கிறது. ரஷ்ய மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி, சோனி போன்ற பொழுதுபோக்கு நிறுவனங்கள் ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்தியுள்ளன. சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் வன்முறை மற்றும் வெறுப்பைத் தூண்டும் விதத்திலான பதிவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டுக்கு எதிரான வெறுப்புப்பதிவுகளுக்கு  ஃபேஸ்புக் நிறுவனம் தற்காலிக அனுமதி வழங்கியது. ரஷ்ய … Read more

Canada Accident: கனடா சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் பலி! படுகாயமடைந்த இருவருக்கு சிகிச்சை

ஒட்டாவா: கனடாவில் நடந்த சாலை விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் சனிக்கிழமையன்று நெடுஞ்சாலை 401 இல் பயணிகள் வேனில் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 3:45 மணியளவில் டிராக்டர்-டிரெய்லர் மீது மோதினர். 5 Indian students passed away in an auto accident near Toronto on Saturday, March 13. Two others in hospital. Team of Consulate General of India in … Read more