2.2 மில்லியன் அமெரிக் டொலர் மதிப்புள்ள மருந்துப் பொருட்கள்

2.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்களை பங்களாதேஷ் அரசாங்கம் இலங்கை சுகாதாரத் துறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. பங்காளதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் எம்.டி அரிபுல் இஸ்லாம் மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சுகாதார அமைச்சில் நேற்று (31) இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது பங்காளதேஷ் உயர்ஸ்தானிகரினால்  மருந்துப்பொருட்கள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. நுண்ணுயிர் எதிர்ப்பிகள், புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், வலிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான 79 அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் … Read more

மீண்டும் தீவிரமடையும் ரஷ்ய – உக்ரைன் போர்க்களம்! அமெரிக்காவின் முடிவு தொடர்பில் பைடன் அறிவிப்பு

உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையிலான மோதல் நிலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமான இந்த போர் இதுவரையில் எவ்வித முடிவும் இன்றி தொடர்ந்து வருகின்றது.  இந்த நிலையில், உக்ரைனுக்கு இன்னும் மேம்பட்ட ரொக்கெட் அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகளின் கோர தாக்குதல் தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அப்பகுதிகளை … Read more

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (01)  மாலை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்   துமிந்த சில்வாவை சிறைச்சாலை காவலில் வைக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (01) இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு  உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், … Read more

எரிபொருள் நிரப்பு நிலையம் மீது தாக்குதல் : ஒருவர் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்ள வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் அலுவலகம் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணை கைதுசெய்யப்பட்ட நபரை இன்று 01.06.2022 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்புபொலிசார் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளார்கள். சம்பவம் தொடர்பில் வெளியான கருத்து  இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பலநோக்கு … Read more

பொருளாதார நெருக்கடி: குழந்தைகள் பெற்றோரின் கவனத்தை இழக்கும் அபாயம்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் ஆபத்தான நிலை காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சமீப காலமாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், பெற்றோரின் கவனத்தில் இருந்து விலகும் வாய்ப்புகள் அதிகம் காணக்கூடியதாக இருப்பதாக அதிகாரசபையின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் ஏற்படக்கூடிய மன அழுத்தங்களை பெரியவர்கள் சிறுவர்கள் ஊடாக வெளிப்படுத்த முற்படும் நிலையொன்று காணப்படுகின்றது. இதன் காரணமாக … Read more

எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் ,எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு..

3,500 மெற்றிக் டொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. இதேவேளை, இன்றும் 50,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கூட 50,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கே விநியோகிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள், எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய வரும்போது, விற்பனை முகவர் நிலையங்களில் சிலிண்டர்கள் இருக்கின்றதா என்பதை உறுதி செய்துகொண்டு வருமாறு லிட்ரோ நிறுவனம் … Read more

தமிழின அழிப்பு அறிவூட்டல் வார சட்டம் ஒன்ராரியோ அரசியல் யாப்பை மீறவில்லை: ஒன்ராரியோ அரசுதரப்பு(Photo)

தமிழின அழிப்பு அறிவூட்டல் வார சட்டம் எந்த வகையிலும் ஒன்ராரியோ அரசியல் யாப்பை மீறவில்லை என்ற தமது ஆணித்தரமான வாதத்தை ஒன்ராரியோ அரசுதரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடைய நீதிக்கான போராட்டத்தை தாய் மண்ணிலும் புலத்திலும் மூழ்கடிப்பதற்காக மிகவும் கடினமாக உழைத்து வருவது நாம் அனைவரும் அறிந்த உண்மை. ‘Tamil Genocide Education Week Act’ சட்டம் இலங்கை அரசாங்கம் அதனது ஆதரவாளர்களுக்கூடாக ஒன்ராரியோ மாகாணத்தில் விஜய் தணிகாசலத்தின் கடும் முயற்சிகளுக்கு மத்தியில் ஒன்ராரியோ … Read more

உயிரணு தானத்தால் 15 பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர்: அவருக்கிருந்த நோயால் அதிர்ந்த தாய்மார்கள்

பிரித்தானியாவில் உயிரணு தானத்தால் 15 பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர் ஒருவர் தமக்கிருந்த குணப்படுத்த முடியாத மரபணு நோயை மறைத்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். குறித்த நபருக்கு மரபணு நோயானது குணப்படுத்த முடியாது என்பதுடன், அவரால் பிறக்கும் குழந்தைகள் கற்றல் திறன் பாதிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. டெர்பி பகுதியை சேர்ந்த 37 வயது ஜேம்ஸ் மெக்டோகல் என்பவரே தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கிறார். இவரது சமூக ஊடக விளம்பரத்தை நம்பி தன்பாலின ஈர்ப்பு பெண்கள் … Read more

அட்டுலுகம சிறுமி விவகாரம்! சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பண்டாரகம, அட்டாலுகமவில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாணந்துறை பிரதான நீதவான் ஜெயருவன் திஸாநாயக்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரின் தனிப்பட்ட வாக்குமூலம்  தனிப்பட்ட வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.   Source link