2.2 மில்லியன் அமெரிக் டொலர் மதிப்புள்ள மருந்துப் பொருட்கள்
2.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்களை பங்களாதேஷ் அரசாங்கம் இலங்கை சுகாதாரத் துறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. பங்காளதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் எம்.டி அரிபுல் இஸ்லாம் மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சுகாதார அமைச்சில் நேற்று (31) இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது பங்காளதேஷ் உயர்ஸ்தானிகரினால் மருந்துப்பொருட்கள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. நுண்ணுயிர் எதிர்ப்பிகள், புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், வலிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான 79 அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் … Read more