சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்

சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பா தகவல்களை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்ளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 118, 119 மற்றும் 1997 ஆகிய தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இவ்வாறு சட்டவிரோதமாக எரிபொருட்களை சேகரித்து வீடுகளில் சேமித்து வைப்பது ஆபத்தானது. இதனால்;, சிறு தவரொன்று ஏற்பட்டால் கூட அதனை வைத்திருப்பவருக்கும் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்கும் … Read more

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான உண்மைத் தகவல்! பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இது தொடர்பில் விளக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை. வரவிருக்கும் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை தவிர அனைத்து அமைச்சகங்களுக்கும் ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சம்பள உயர்வு குறித்து … Read more

தமிழக நிவாரணப்பொதிகள்: மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமையடிப்படையில் குடும்பம் ஒன்றிற்கு தலா ஒரு பொதி வீதம் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட நிவாரணப்பொதி வழங்கப்படவிருப்பதாக அந்த மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் பொதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் கூறினார். இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நிவாரண பொருட்களை; வறுமையில் வாடும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தொடர்பாக மாவட்ட … Read more

எரிவாயு விநியோகிக்கும் திகதியை அறிவித்தது லிட்ரோ நிறுவனம்

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.  எரிவாயுவை தாங்கி கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவனத் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.   கப்பல் வருகையில் தாமதம் நேற்றையதினம் இலங்கைக்கு வரவிருந்த 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல், நாட்டுக்கு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம்  நேற்று அறிவித்திருந்தது. குறித்த கப்பல் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக  இந்தியாவுக்கு … Read more

கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை எடுப்பதில் சிக்கல் நிலை

கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை எடுப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள மென்பொருள் உரிய முறையில் செயற்படாமையினால், கடவுச்சீட்டுக்காக ஒன்லைன் முறையில் புகைப்படங்களை எடுக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மென்பொருளின் தொழிற்பாடு 95 வீதம் செயலிழந்துள்ளதாக புகைப்பட நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதனால் புகைப்பட நிறுவனங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது … Read more

சதோச மூலம் நுகர்வோருக்கு தேவையான பொருட்கள்

நுகர்வோருக்குத் தேவையான பொருட்களை ,சதோச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை ,சதோச விற்பனை நிலையங்களில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து நுகர்வோர் அதிகார சபை கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நுகர்வோருக்குத் தேவையான பொருட்களை குறையின்றி வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னான்டோ மேலும் தெரிவித்தார்.

மகிந்தவிடம் நான்கரை மணிநேரம் இரகசியமாக விசாரணை – வெளியான தகவல்

காலிமுகத்திடல் அமைதிப் போராட்டம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் நான்கரை மணிநேரம் இரகசியமாக விசாரணை செய்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24ம் திகதி மாலையே விசாரணை நடைபெற்ற போதிலும் விசேடமாக எதுவும் வெளியாகவில்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வசிக்கும் நுகேகொட விஜயராம மாவத்தையில் உள்ள … Read more

தேசிய கட்டமைப்பிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க உதவுங்கள் … மின்சாரத்துறை நிபுணர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

தேசிய மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், மின்துறை நிபுணர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மொத்த மின் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்வது அரசாங்கத்தின் இலக்கு ஆகும். இதுவரை சூரிய சக்தியில் இருந்து கிட்டத்தட்ட 700 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆனால், இலங்கை மின்சார சபை பொறியாளர்களின் எதிர்ப்பினால் அது சாத்தியமாகவில்லை என்பது பொதுமக்களின் கருத்து ஆகும். அதனை சரிசெய்து … Read more

21வது திருத்தத்தை தடுக்க பசில் கடும் முயற்சி

முன்னாள் நிதியமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச 21வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தடுக்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21வது திருத்தத்தை எதிர்ப்பதற்கு ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலரின் ஆதரவைப் பெற்றுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த வரைவு முன்மொழிவு வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, ​​அதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன … Read more