ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு சிஐடியில் முன்னிலையாகுமாறு அழைப்பு

மே மாதம் 09ம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (24) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியைச் சேர்ந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் 21 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் கடந்த வாரம் (16) உத்தரவிட்டார். இதன்படி, … Read more

மீண்டும் வலுவடையும் காலி முகத்திடல் போராட்டம்

நாட்டில் இடம்பெற்றுள்ள அசாதாராண சூழ்நிலைக்கு காரணமான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி கொழும்பு- காலிமுகத்திடலில், பொதுமக்கள் தொடர்ந்தும்  45ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டமானது கடந்த ஏப்ரல் 09ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.   இதேவேளை கடந்த மே-09ம் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டகாரர்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட இடத்தில் அரச ஆதரவாளர்களால் வன்முறைகள் தோற்றுவிக்கப்பட்டதை அடுத்து   முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச  பதவி விலகியிருந்தார்.   இதேவேளை மகிந்த ராஜபக்ச பதவி … Read more

நாளை மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தல் – வெளியாகியுள்ள தகவல்

அரச சேவையின் அத்தியாவசிய கடமைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்களை மாத்திரம் அழைக்குமாறு அறிவிக்கும் அரச நிர்வாக அமைச்சின் விசேட (24) வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட உள்ளார். சேவைக்கு அழைக்கப்பட வேண்டிய அத்தியவசிய உத்தியோகத்தர்களை தீர்மானித்தல் மற்றும் அதனை நிறுவன தலைவருக்கு வழங்குதல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   … Read more

பயன்படுத்தப்படாத அனைத்து காணிகளையும் பயிர் செய்கைக்காக பயன்படுத்த உத்தரவு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத அனைத்து காணிகளையும் பயிர் செய்கைக்காக பயன்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கு தீர்வாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு நிறுவனத்திற்கும் வெற்று நிலம் இருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். முதலீட்டிற்காக ஒதுக்கப்பட்ட காணிகள் இதுவரையிலும் பயன்படுத்தப்படாவிடின் காணிகளை உடனடியாக மீளப் பெற்று புதிய முதலீட்டாளர்களிடம் கையளிக்க … Read more

புதிய அமைச்சரவை பேச்சாளரும், இணைப் பேச்சாளர்களும் நியமனம்

புதிய அமைச்சரவை பேச்சாளர் ஒருவர் மற்றும் இணை அமைச்சரவை பேச்சாளர்கள் மூவர் இன்று (23) கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சரவை பேச்சாளராக வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் பெயரிடப்பட்டுள்ளார். விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இணை அமைச்சரவை பேச்சாளர்களாவர். மொஹான் … Read more

தேசபந்து தென்னகோனுக்கு இடமாற்றம்! சட்டமா அதிபர், பொலிஸ் அதிபருக்கு பணிப்பு

 மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தின் மீது கடந்த மே 9ஆம் திகதியன்று நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையில் இடையூறுகள் விளைவிக்கப்படுவதை தடுப்பதற்காகவே இந்த இடமாற்ற பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. Source link

மட்டக்களப்பு மாநகர சபையினால் சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தை பெறும் திட்டம்

மட்டக்களப்பு மாநகர சபையினால் சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தை  (Solar panel) பெறும் திட்டம் உலகவங்கி அனுசரணையுடன் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. மட்டக்களப்பு மாநகர சபை சந்தைக் கட்டிடத் தொகுதியின் மேல் கூரையில் இந்த சூரிய மின் பிறப்பாக்கி தகடுகள் (Solar panel) பொருத்துவதற்கான கள ஆய்வு இன்று இடம்பெற்றது. சுமார் 08 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் இந்த சூரிய மின் திட்டத்தின் மூலம் 40 கிலோ வாட்ஸ் அளவிலான மின்சாரத்தினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தற்சமயம் ஏற்பட்டுள்ள மின்சார … Read more

விஜித ஹேரத்தை தாக்க முயற்சித்த சனத் நிஷாந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை தாக்க முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. அலரி மாளிகைக்கு எதிரிலும் காலிமுகத் திடலிலும் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சனத் நிஷாந்த, சிறைச்சாலை அதிகாரிகளால் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். அரசியல்வாதிகளின் வீடுகள், சொத்துக்கள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விவாதத்தின் … Read more

பயன்படுத்தப்படாத அனைத்து காணிகளையும் பயிர் செய்கைக்காக பயன்படுத உத்தரவு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள பயன்படுத்தப்படாத அனைத்து காணிகளையும் பயிர் செய்கைக்காக பயன்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கு தீர்வாக இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு நிறுவனத்திற்கும் வெற்று நிலம் இருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். முதலீட்டிற்காக ஒதுக்கப்பட்ட காணிகள் இதுவரையிலும் பயன்படுத்தப்படாவிடின் காணிகளை உடனடியாக மீளப் பெற்று புதிய முதலீட்டாளர்களிடம் கையளிக்க … Read more

புதிய வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன் புதிய வெகுசன ஊடக அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள், அதற்கு சிறிது நேரத்தின் பின்னர் பொல்ஹேன்கொட வெகுசன ஊடக அமைச்சிற்கு வருகை தந்து உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னரும் வெகுசன ஊடக அமைச்சராக பதவி வகித்த கலாநிதி குணவர்தன, வெகுசன ஊடக அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ … Read more