அவுஸ்திரேலியப் பிரதமருக்கு, இலங்கை ஜனாதிபதி வாழ்த்து

அவுஸ்திரேலிய நாட்டின் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள Anthony Albanese  க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை மிக விருப்பத்துடன் இருப்பதாக ஜனாதிபதி தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவுகளை முன்னெடுப்பதற்கு அதனை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அதில் மேலும் தெரிவித்துள்ளார். 

பெருந்தொகையான டொலர்களோடு வசமாக சிக்கினார்

 50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ராஜகிரிய வெலிக்கடை பகுதியில்,மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சட்டவிரோத உண்டியல் மற்றும் ஹவாலா பணப்பரிமாற்ற முறைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த வாரம், இலங்கை மத்திய வங்கி, இலங்கையர் ஒருவர் வைத்திருக்கும் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தின் சட்ட வரம்பு குறித்த ஏற்பாடுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது. … Read more

உலக நாடுகளில் கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவின் வுஹான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.72 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52 கோடியே 72 இலட்சத்து 33 ஆயிரத்து 817 ஆக அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டபாயவின் திடீர் முடிவு – தென்னிலங்கை அரசியலில் ஏற்படும் மாற்றங்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து விலக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளார். 15 வருடங்களிற்கு மேல் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட நிலையில், அதனை இன்னுமொருவருக்கு கையளிக்க ஜனாதிபதி இணங்கியுள்ளார். கடந்த வியாழக்கிழமை புதிய அமைச்சரவை குறித்து பிரதமருடன் ஆராய்ந்தவேளை ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 21வது திருத்தமாக 19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மைத்திரிபால சிறிசேனவிற்கு பின்னர் ஜனாதிபதியொருவர் எந்த அமைச்சரவை பதவியையும் வகிக்க முடியாது. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சர் … Read more

பசிலின் விருப்பத்திற்கமைய ரணில் எடுக்கும் முக்கிய தீர்மானங்கள்

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவின் விருப்பத்திற்கமையவே புதிய  அரசாங்கம் முக்கிய தீர்மானங்களை முன்னெடுக்கிறது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதில் தடைவிதிக்கப்படாவிடின் நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தீவிரமடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் பொருளாதார நெருக்கடியும்,அரசியல் நெருக்கடியும் தீவிரமடைவதற்கு முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பொறுப்புக்கூற வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் … Read more

தயார் நிலையில் இராணுவம்: கோட்டாபய வெளியிட்ட விசேட அறிவித்தல் – செய்திகளின் தொகுப்பு

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் வெளியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானி பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் (அத்தியாயம் 40) வெளியிடப்பட்டுள்ளது. பொது அமைதியைப் பேணுவதற்கு ஆயுதப்படைகளைத் தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் ஜனாதிபதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,  … Read more

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை! இலங்கை வைத்தியரின் தகவல்

தற்போது உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவல் அடைந்துள்ளதன் காரணமாக அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய மற்றும் மேற்கு  ஆப்பிரிக்க நாடுகளில் இந்தக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில்  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ள  நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவகத்தில்,  பல நாடுகளில் பரவி வரும் இந்த குரங்கம்மை நோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வசதிகள் உள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் பரிசோதனைக்கு தேவையான ரசாயனங்கள் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். … Read more

பொலிஸ் மா அதிபர் பதவியில் மாற்றம் செய்யப்படலாம்: தெற்கு ஊடகம் தகவல்

பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவிகளில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என அமைச்சு வட்டாரத் தகவல்களை ஆதாரம் காட்டி தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன மற்றும் பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் ஆகியோரின் பதவிகளில் இவ்வாறு மாற்றம் செய்யப்பட உள்ளது. அண்மையில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் அடிப்படையில் இவர்களின் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. தங்களது சொத்துக்களை … Read more

போலியான கடிதங்களைச் சமர்ப்பித்து எரிபொருள் பெறுவதற்கு முயற்சி

சிலர் அத்தியாவசிய சேவையெனத் தெரிவித்து போலியான கடிதங்களைச் சமர்ப்பித்து எரிபொருள் பெறுவதற்கு முயற்சிக்கும் ,மோசடி சம்பவங்கள் தெரியவந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறு அமைச்சர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதேவேளை,அம்புலன்ஸ் சேவை அத்தியாவசிய சேவை என்பதனால் அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருள் வழங்கும் விடயத்தில் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் அமைச்சர்  மக்களிடம் கேட்டுக்கொண்டார். அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருள் பெறுவதற்கு முயற்சித்த சந்தர்ப்பங்களில் மக்கள் அதற்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் … Read more

க.பொ.தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை நாளை – போக்குவரத்து வசதி

கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை, நாடளாவிய ரீதியில் 3 ஆயிரத்து 844 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.பரீட்சை அடுத்த மாதம் முதலாம் திகதி நிறைவடையும். ஐந்து லட்சத்து 17 ஆயிரத்து 496 பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இதில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 129 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகளாவர். பரீட்சை அனுமதி … Read more