வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் 2021ஆம் ஆண்டில் ரூபா. 3,221 மில்லியன்கள் திரட்டல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்பான செலவுகள் குறித்து 2022 மே 20ஆந் திகதி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, செலவீனங்களைக் குறைப்பதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பல்வேநு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில், வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் ஊழியர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமை மற்றும் இடைநிறுத்தம் செய்யப்பட்டமை ஆகியன உள்ளடங்கும். இதன் விளைவாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு 2021ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்த வரவு செலவுத் … Read more

இலங்கையின் நிலை தொடர்பில் சர்வதேச ஊடகத்திடம் பிரதமர் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் இலங்கை உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச செய்தி சேவை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னர் இலங்கைக்கு இவ்வாறு நடந்ததில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். எங்களிடம் டொலர்கள் இல்லை, ரூபாய் இல்லை, இனி மக்கள் சுமையைத் தாங்க முடியாது என அவர் கூறியுள்ளார். இதேவேளை, இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு ஜப்பான் நிதி … Read more

கொழும்பில் வீதியை மறித்து போராட்டத்தில் இறங்கிய மக்கள் (Video)

கொழும்பு – பேஸ்லைன் வீதியில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எரிவாயு பிரச்சினை காரணமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் வீதி மறிக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  Source link

மட்டக்களப்பில் டெங்கு: இருவர் உயிரிழப்பு

டெங்கு நோயால் இரு இளம் குடும்பஸ்தர்கள் ,மட்டக்களப்பு மாநகர பகுதியில் உயிரிழந்தனர் என்று மண்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் நேற்றுவரை சுமார் 240 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இதனிடையே, நாட்டில் டெங்கு தாக்கம் அதிகமுள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்ட மட்டக்களப்புமாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நேற்று முன்தினம் தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் … Read more

மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் ,அதிகாரிகள் அடுத்த வாரம் அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் அழைப்பு

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை அடுத்தவாரம் அழைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நேற்று (19) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், 1969ஆம் ஆண்டு 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 2022.04.08ஆம் திகதிய 2274/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் … Read more

இன்று பதவியேற்ற அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது! பிரதமர் ரணில் அறிவிப்பு

இன்று பதவியேற்றுள்ள புதிய அமைச்சரவைக்கு சம்பளம் வழங்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் சிறப்புரிமைகளை குறைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதமர் தனது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் பதிவொன்றை இட்டு  குறிப்பிட்டுள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தின் ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளும் குறைக்கப்படும் எனவும் … Read more

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உதவிகளை வழங்க இலங்கைக்கு ஐப்பான் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உதவிகளை வழங்க இலங்கைக்கு ஐப்பான் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி  

நீண்ட வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வெற்று எரிவாயு கொள்கலன்கள் (Video)

ஹட்டன் நகரிலுள்ள சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்கள் முன்பாக பல நாட்களாக நீண்ட வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வெற்று எரிவாயு கொள்கலன்களால் பாதசாரிகள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். ஹட்டன் நகரில் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், ஹட்டன் நகரிலுள்ள ஹோட்டல்களின் உரிமையாளர்கள், சமையல் எரிவாயு கொள்கலன்களை நடைபாதையில் நீண்ட தூரத்துக்கு வைத்து, ஒன்றுடன் ஒன்றை கயிற்றால் பிணைத்து கட்டி வைத்துள்ளனர். இதனால் நடைபாதையில் பயணிப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக முதியவர்கள் … Read more

இலங்கையின் தேசிய மலர் ‘அல்லி மலர்’ என உரிய முறையில் விழிப்புணர்வூட்டும் அவசியத்தை கோபா குழு சுட்டிக்காட்டல்

‘அல்லி மலர்’ இலங்கையின் தேசிய மலர் என்பதை தேசிய கல்வி நிறுவகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஏனைய உரிய நிறுவனங்களைப் போன்று செய்தித்தாள் விளம்பரங்கள் ஊடாகவும் பொதுமக்களை உரிய முறையில் விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழு சுற்றாடல் அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியிருந்தது. இது தொடர்பில் சுற்றாடல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகளில் தேசிய மலர் தொடர்பில் பாடசாலை, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை விழிப்புணர்வூட்டினாலும் அது போதியளவு … Read more