இலங்கையின் தேசிய மலர் ‘அல்லி மலர்’ என உரிய முறையில் விழிப்புணர்வூட்டும் அவசியத்தை கோபா குழு சுட்டிக்காட்டல்

‘அல்லி மலர்’ இலங்கையின் தேசிய மலர் என்பதை தேசிய கல்வி நிறுவகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஏனைய உரிய நிறுவனங்களைப் போன்று செய்தித்தாள் விளம்பரங்கள் ஊடாகவும் பொதுமக்களை உரிய முறையில் விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழு சுற்றாடல் அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியிருந்தது. இது தொடர்பில் சுற்றாடல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகளில் தேசிய மலர் தொடர்பில் பாடசாலை, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை விழிப்புணர்வூட்டினாலும் அது போதியளவு … Read more

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வு

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது.   இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 354.48 ரூபாவாக பதிவாகியுள்ளது.  அதேசமயம் டொலரொன்றின் விற்பனை பெறுமதி  364.45 ரூபாவாக பதிவாகியுள்ளது. Source link

நிலையியற் கட்டளைத் திருத்தம்: சகல பாராளுமன்றக் குழுக்களின் அதிகாரங்களைப் பலப்படுத்துவதற்கான பிரேரணை முன்வைக்கப்படும் 

நிலையியற் கட்டளைகளைத் திருத்தம் செய்வதன் மூலம் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) உள்ளிட்ட சகல பாராளுமன்றக் குழுக்களின் அதிகாரங்களையும் பலப்படுத்துவதற்கான பிரேரணை இன்று அல்லது அடுத்தவாரம் முன்வைக்கப்படும் என சபை முதல்வரும், அமைச்சருமான கௌரவ தினேஷ் குணவர்தன இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் சபை முதல்வர் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன சபையில் தெரிவித்ததாவது, “அரசாங்கம் என்ற ரீதியில் இன்றையதினம் அல்லது … Read more

சர்வகட்சி அரசாங்கத்தில் 09 புதிய அமைச்சரவை அமைச்சர்கள், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

சர்வகட்சி அரசாங்கத்தின் 09 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று, (20) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 01. திரு.நிமல் சிறிபால டி சில்வா            –  துறைமுகங்கள், கப்பற்துறை                                                … Read more

தொடர்ந்து உயரும் பாணின் விலை

கோதுமை மாவின் விலை அதிகரிப்புடன் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 170 ரூபாவாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கோதுமை மாவை இறக்குமதி செய்யும் உள்ளூர் நிறுவனமான செரண்டிப், கோதுமை மாவின் விலையை கிலோகிராம் ஒன்றின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதுடன், பிரிமா நிறுவனமும் கோதுமை மாவின் விலையை கிலோகிராம் ஒன்றின் விலையை 40 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி … Read more

இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவிற்கு பௌத்த , இந்து மதகுருமார்கள் முதன்முறையாக விஜயம்

சவூதி அரேபியாவின் மக்காவை தளமாகக் கொண்ட ஒரு சர்வதேச இஸ்லாமிய அரச சாரா, மதத் தலைவர்கள் மற்றும் மூத்த அறிஞர்களுக்கான அமைப்பான முஸ்லீம் வேர்ல்ட் லீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே பொதுவான மதிப்புக்களை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற மன்றத்தில் பங்கேற்பதற்காக, முஸ்லீம் உலக லீக்கின் பொதுச் செயலாளரும், முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பின் தலைவருமான ஷேக் கலாநிதி. முஹமத் பின் அப்துல்கரீம் அல்-இஸ்ஸாவின் அழைப்பின் பேரில், இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவரும், ஜப்பானுக்கான பிரதம சங்க … Read more

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மாலைதீவில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் இரத்த தானம்

இலங்கை சமூகத்தின் பங்கேற்புடன், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை வங்கியின் அனுசரணையுடன் இலங்கைத் தூதரகத்தால் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம், முதலாவது இரத்த தானம் வழங்கும் முன்முயற்சியாகும். மாலைதீவின் தலைநகர் மாலேயில் உள்ள மாலைதீவு இரத்த சேவையில் (தலசீமியா மையம்) மாலைதீவு சுகாதார இராஜாங்க அமைச்சர் கலாநிதி. ஷா அப்துல்லா மஹிர் அவர்களின் தலைமையில், தூதரக ஊழியர்கள், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் நாட்டு முகாமையாளர் ஃபவ்ஸான் ஃபரீட், இலங்கை வங்கியின் நாட்டு முகாமையாளர் கோவிந்த ஆரம்பத் மற்றும் இலங்கை … Read more