நுவரெலியா மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

நுவரெலியா மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. தற்போது நிலவும் நிலைமைகள் காரணமாக அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடலில் பொலிஸ் அதிகாரிகள், சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், விவசாயத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கடனை அடைக்க முடியாத நிலையில் இலங்கை – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 5.5 பில்லியன் டொலர்கள் அடுத்த 12 மாதங்களில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், பிரதமரிடம் உள்ள திட்டங்கள் என்னவென்றும் கேள்வியெழுப்பினார். இந்நிலையில், குழுக்கள் ஊடாக தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும், அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் நாடாளுமன்ற … Read more

இலங்கை அரசியல்வாதிகள் யாருக்கும் சர்வதேச சமூகம் அடைக்களம் கொடுக்க கூடாது – யஸ்மின் சூக்கா

இலங்கையில் முழுமையான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்படும் கோரிக்கைகள் வெறுமனே அதிகாரவர்க்கத்தால் மேற்கொள்ளப்படும் ஊழலையும் பொருளாதாரக் குற்றங்களையும் மட்டுமே கையாழ்வதற்கானதாக அல்லாமல் பெரும் வன்கொடுமைக்குற்றங்களிலில் ஈடுபட்டு தண்டனை பெறாமல் தப்பியிருப்போர் தொடர்பிலும் தமிழர்களது நீதிக்கும் பொறுப்புக்கூறலுக்குமான நீண்ட போராட்டத்திற்கும் தீர்வுவழங்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என இலங்கையில் நடைபெற்றுவரும் பாரிய மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்திவரும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அமைப்பானது கூறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட 2009 இறுதிப்போரின் இந்தச் சோகமான ஆண்டுதினத்தை நினைவுகூரும் … Read more

இலங்கை போன்று தோற்றமளிக்கும் இந்தியா – ராகுல் காந்தி எச்சரிக்கை

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பாஜக அரசாங்கத்தை தாக்கி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா இலங்கை போன்று தோற்றமளிக்கிறது என்று எச்சரித்துள்ளார். அந்தவகையில், வேலையின்மை, எரிபொருள் விலை மற்றும் வகுப்புவாத வன்முறையின் வரைபடங்களைப் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார். “மக்களை திசை திருப்புவது உண்மைகளை மாற்றாது. இந்தியா இலங்கையைப் போன்றே தோற்றமளிக்கிறது,” என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பாஜக அரசு தனது தோல்விகளையும், … Read more

அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள முடிவு – மைத்திரியின் தீர்மானத்தை மீறும் சிரேஷ்ட உறுப்பினர்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கட்சிக்குள் கடும் போராட்டத்தை முன்னெடுத்துளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, ஜகத் புஷ்ப குமார, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பலர் இந்த குழுவில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளும் மூன்று பிரதி அமைச்சுப் பதவிகளும் மாத்திரமே … Read more

புத்த ஜெயந்தி நன்னாளில் பிரதமர் நரேந்திர மோடி லும்பினிக்கு விஜயம்

புனித புத்த ஜெயந்தி தினமான 2022  மே மாதம்  16ஆம் திகதி புத்த பெருமானின் பிறப்பிடமான லும்பினிக்கு  மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விஜயம் மேற்கொண்டார். நேபாள பிரதமர் மாண்புமிகு ஷேர் பகதூர் தூபாவின் அழைப்பை ஏற்று இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 2.      பிரதமர் மோடி  அவர்கள்,  பிரதமராக லும்பினிக்கு மேற்கொண்ட தனது முதல் விஜயத்தை, புத்த பெருமான் பிறந்த இடத்தில் அமைந்திருக்கும் புனித மாயாதேவி கோயிலில் இடம்பெற்ற சிறப்பு பிரார்த்தனையுடன் ஆரம்பித்தார். புத்தர் பிறந்த இடம் லும்பினி என்பதற்கான முதல் கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அசோகத் தூணையும் இந்திய மற்றும் … Read more

நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சர்வகட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கம் அவசியம்

கடந்த 9ம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் இரண்டாவது தினமாக இன்றும் நடைபெற்றது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சர்வகட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தின் அவசியத்தை பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா வலியுறுத்தினார். சகல சந்தர்ப்பங்களிலும் மக்களின் பக்கம் நின்று பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார். சட்டத்தை அமுல்படுத்துவதில் பொலிசார் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென்று விவாதத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரஜனாதிபதி, பதவியிலிருந்து … Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! இலங்கை நாடாளுமன்றில் ஒரு நிமிட அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நினைவுக்கூறும் வகையில் இன்று நாடாளுமன்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், இன்று தமது நாடாளுமன்ற உரையின்போது, இந்த அஞ்சலி நிகழ்வுக்கான அனுமதியை, சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம் கோரிய நிலையில் அஞ்சலி நிகழ்வு நிகழ்த்தப்பட்டது, இந்த நிகழ்வு நிறைவடைந்த பின்னர், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுந்து தமிழ்தேசியக்கூட்டமைப்பினர், முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக இந்த ஒரு நிமிட அஞ்சலி செலுத்தியதாக குறிப்பிட்டார். எனவே … Read more

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை வெற்றிகரமாக நடாத்துவதற்கான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன

நெருக்கடியான சூழலிலும் கூட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 23(திங்கட்கிழமை) தொடக்கம் யூன் மாதம் 01 ஆம் திகதி வரை நடாத்துவதற்குத் தேவையான அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன அவர்கள் தெரிவித்துள்ளார். ஆணையாளர் இதுதொடர்பாக இன்றைய தினம் (18) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடாத்துதல் தொடர்பாக மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர்களைத் தெளிவுபடுத்தும் ஊடகக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார். பாடசாலை … Read more