ஒரே மாதத்தில் 226 மில்லியன் ரூபாய் செலவிட்ட பிரதமர் – ரணில் எடுத்த அதிரடி நடவடிக்கை

எதிர்வரும் ஜுன் மாதம் முதல் செலவினங்களை 50 சதவீதமாக குறைக்க பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.   நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  பிரதமர் அலுவலக பராமரிப்புக்காக ஜனவரி மாதம் 92 மில்லியன் ரூபாய், பெப்ரவரி மாதம் 99 மில்லியன் ரூபாய், மார்ச் மாதம் 226 மில்லியன் ரூபாய், ஏப்ரல் மாதம் 75 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளன.   அத்துடன், பிரதமர் அலுவலகத்தின் சேவைக்காக வேறு … Read more

எரிவாயுக்காக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு

இன்று (18) இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கொடுப்பனவாக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய,3700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாகவும் மற்றொரு கப்பல் நாளைய தினம்  நாட்டை வந்தடையவுள்ளதாகவும்,  இரண்டு கப்பல்களுக்கும் பணம் இன்று செலுத்தப்படும் என்றும் லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் (18) தினந்தோறும் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ … Read more

சொத்துக்களை இழந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதி

கடந்த நாட்களில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக 74 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துகள் சேதம் அடைந்துள்ளன. வன்முறைகளினால் வீடு மற்றும் சொத்துக்களை இழந்த அனைவருக்கும் நீதி வழங்குவதே தனது முதல் பணி என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், அந்த வன்முறைச் செயற்பாடுகளை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் அரசாங்க பிரதம கொறடாவாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன சிவகார்த்திகேயனின் மனைவி – அதிர்ச்சி புகைப்படம்!

 தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிவாகார்த்திகேயன். அண்மையில், இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இவர், திரையுலகிற்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆராதனா என்ற மகளும் இருக்கிறார். இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது குழந்தை பிறந்தது. அதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சிவா இவருக்கு ஆராதனா என்ற மகளும் இருக்கிறார். 18 வருடங்களுக்குப் பிறகு இன்று … Read more

மட்டக்களப்பில் டெங்கு அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்துள்ள நிலையில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பினை ஒழிப்பதற்கான சிரமதான வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது. கொரோனா மற்றும் டெங்கு நோய்களினைக் கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்கள் சுகாதாரவழிகாட்டி ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுவதற்கும், விசேட விழிப்புணர்வு செயற்றிட்டங்களை மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மேற்கொண்டுள்ளார். அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய பொது இடங்களில் … Read more

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் விசாரணை மேற்கொள்ள பொலிஸார் திட்டம் – செய்திகளின் தொகுப்பு

காலிமுகத்திடல் அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாகச் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சபாநாயகருக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேர் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நேற்று பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல … Read more

இந்தியாவில் இருந்து 40 மில்லியன் உலர் உணவுப் பொதிகள்

குறைந்த வருமானத்தைக்கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக, ஒரு வாரத்திற்கு போதுமான, பால் உள்ளிட்ட அத்தியயாவசிய பொருட்களைக்கொண்ட , 40 மில்லியன் உலர் உணவுப் பொதிகளை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த நன்கொடையின் முதற்கட்டமாக ஒரு மில்லியன் உணவுப் பொதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று நாளை (18) இலங்கைக்கு வரவுள்ளதாக அத்தியாவசிய உணவு விநியோக நெருக்கடி குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணம், பதுளை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள குறைந்த வருமானத்தைக்கொண்ட … Read more

பிரதமர் நியமித்த விசேட குழுக்களின் பிரதிபலன்கள்: குறுகிய காலத்தில் மக்களுக்கு கிடைக்கும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றதன் பின்னர்இ விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டமை, மக்களின் நன்மைகளை கருத்திற் கொண்டே என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கையொன்றை அவர் விடுத்துள்ளார் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை விரைவுபடுத்துவதற்காக இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டதன் நோக்கமாகும். இதற்காக, அரசாங்கத்தின் எந்த நிதியும் செலவிடப்படவில்லை. இதனூடாக, மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் அதிகரிக்கப்படும். இதன் பிரதிபலன்கள் குறுகிய காலத்தில் மக்களுக்கு கிடைக்கும் என … Read more

அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரச ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதனை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரிடம், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன் சந்திர இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் வரவழைத்து நிறுவன தலைவர்களின் விருப்பத்திற்கேற்ப செயற்பட அனுமதிக்குமாறு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொலைதூரத்தில் … Read more