அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரச ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதனை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரிடம், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன் சந்திர இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் வரவழைத்து நிறுவன தலைவர்களின் விருப்பத்திற்கேற்ப செயற்பட அனுமதிக்குமாறு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொலைதூரத்தில் … Read more

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இன்றைய தினத்திற்கான நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 364.73 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 354.76 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. அத்துடன் அனுமதி பெற்ற பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் பெறுமதியானது 365 ரூபாவாக பதிவாகியுள்ளது.  ரூபாவின் பெறுமதி உயர்ந்தது! மத்திய வங்கி அறிவிப்பு  Source link

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இன்றாகும். முதலாவது இன்னிங்க்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி சற்று முன்னர் 2 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்களை எடுத்திருந்தது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ,இலங்கை அணி 397 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளது. பங்களாதேஷ்க்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி  டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று முன்தினம் (15) சட்டோகிராமில் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் … Read more

வரலாற்றில் முதல் தடவையாக ஆளும் கட்சி வரிசையில் ரணில்,மகிந்த

வரலாற்றில் முதல் தடவையாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், முன்னாள் பிரதமர் மகிந்தவும் நாடாளுமன்றில் ஆளும் கட்சி முன்வரிசையில் அமர்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றம் இன்றைய தினம் முற்பகல் 10.00 மணிக்கு கூடவுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு நாடாளுமன்ற செயற்குழுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இதுவரையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்துக்கொள்வார். முன்னாள் பிரதமரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவிற்கு ஆளும் … Read more

புதிய பிரதி சபாநாயகராக திரு.அஜித் ராஜபக்ஷ தெரிவு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் திரு.அஜித் ராஜபக் ஷ மேலதிக  32 வாக்குகளால் இன்று (17) தெரிவுசெய்யப்பட்டார். திரு. சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியை ,இரண்டாவது முறையாக இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்காக இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் இவர் தெரிவுசெய்யப்பட்டார்.

நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த மர்ம நபர்கள்…! அச்சத்தில் அரசியல்வாதிகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத குழுவொன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத நபர்கள் சிலர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளதாகவும் தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் தற்போது குழு கூட்டம் நடத்தினோம். ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவ்விடத்திற்கு வந்தார்கள். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. … Read more

பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு 

பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டதினால்பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடைபெறுகிறது.  

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது! அவ்வழியே செல்லும் சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றதன் பின்னர் இன்றையதினம் முதலாவது தடவையாக நாடாளுமன்றம் கூடுகின்றது.  இதற்கமைய இன்றையதினம் முற்பகல் 10 மணியளவில நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.   இதுவரையில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆளும் தரப்பின் பக்கம் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் காரணமாக … Read more

சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. பொதுவான வானிலை முன்னறிவிப்பு2022 மே 17ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. நாட்டின்மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, … Read more