எதிர்வரும் சில வாரங்கள், நாட்டிற்கு மிகவும் சிரமமான காலம் – பிரதமர் ரணில்
எதிர்வரும் சில வாரங்கள், நாட்டிற்கு மிகவும் சிரமமான காலமாக அமையுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிலைமை தொடர்பாக தாம் பல நாடுகளின் தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருப்பதாகவும் இந்தக் கலந்துரையாடல் பயனுள்ளதாக அமைந்திருப்பதாகவும் பிரதமர் கூறினார். இந்தியாவுடனான வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கு மேலும் 3 மாதங்கள் செல்லும். அதன் பின்னர் நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார். அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் … Read more