வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்ட 68 பேருக்கு விளக்கமறியல்
கடந்த 9ஆம் திகதி கொள்ளுபிட்டி மற்றும் காலி முகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற 707 வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய 230 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். இதேவேளை கொள்ளுபிட்டி மற்றும் காலி முகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் நிட்டம்புவவில் இடம்பெற்ற கலவரம் … Read more