ரூபாவின் பெறுமதி உயர்ந்தது! மத்திய வங்கி அறிவிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.   இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தலின்படி,  அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.98 ரூபாவாக பதிவாகியுள்ளது.  இது நேற்றைய விலையில் இருந்து 12.51 ரூபாய் குறைவாகும் என்பதுடன் நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை  விலை 377.49 ரூபாவாக பதிவாகியிருந்தது.  இதேவேளை, அவுஸ்திரேலியா மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுகளுக்கு  நிகரான ரூபாவின் பெறுமதியும் உயர்வடைந்துள்ளதாக … Read more

மழையுடனான வானிலை சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 13ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் வீசும் பலத்த காற்றும் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

அமைதியான பொதுமக்கள் படையினரின் ரோந்து வாகனங்கள் தொடர்பில் அச்சப்பட அவசியமில்லை

கடந்த புதன்கிழமை (11) திகதி மாலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்துள்ள பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், நாட்டில் ஏற்பட்டிருக்கும் இயல்பு மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகின்றமையினால் இராணுவத்திற்கு குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களை தவிர்த்து ஒரே நேரத்தில் பெரும் எண்ணிக்கையிலான படையினரை அழைத்துச் … Read more

ரணிலுடன் இணைவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! முடிவை அறிவித்த முக்கியஸ்தர் (Photo)

10 கட்சிகளின் புதிய குழு பிரதமர்  ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணையாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  எனினும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டங்களுக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  Group of 10 Parties (G10) will not join @RW_UNP led government. Nevertheless, we will support the Government for its economic recovery … Read more

Statement by High Commission of India

High Commission categorically denies that it or the Indian Consulates General or the Assistant High Commission of India in Sri Lanka have stopped issuing visas. 2.     In the past few days, there were operational difficulties due to the inability of our Visa Wing staff, most of whom are Sri Lankan nationals, to attend office. … Read more

ரக்பி தொடர்பில் முன்னாள் நாமல் வெளியிட்டிருந்த வர்த்தமானி: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

இலங்கை ரக்பியை (SLR) தற்காலிகமாக இடைநிறுத்தி முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச வெளியிட்ட வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை ரக்பி கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகளின் செயற்பாடுகளை முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இடைநிறுத்தியுள்ளார். இவ்வாறு இடைநிறுத்தி அவர் வெளியிட்ட வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளமை … Read more

ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி – பல பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

அதாள பாதாளத்திற்கு வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் நேற்றைய தினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக்கொண்டதன் அடுத்த நிமிடமே இலங்கையில் பல சாதக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. முதற்கட்டமாக பெரும் பின்னடைவை சந்தித்திருந்த பங்குச் சந்தை திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதேவேளை இன்றையதினம் இலங்கை ரூபாவின் பெறுமதியிலும் சாதக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய விடயமாக அந்நிய செலாவணி இருப்பை அதிகரிப்பதே முக்கிய விடயமாக … Read more

அரசியல் மாற்றத்தால் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவின் பெறுமதியில் சற்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அரச அங்கீகாரம் பெற்ற வர்த்தக வங்களில் இன்றைய தினம் ஒரு டொர் 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் 375 முதல் 380 ரூபாவுக்கு டொலர் ஒன்று விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றையதினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர், இலங்கை ரூபாவின் பெறுமதியில் சற்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை பங்கு சந்தையும் நேற்றைய தினம் திடீரென வளர்ச்சி … Read more