மன்னார் கடல் நிலப்படுகையில் காணப்படும் எரிபொருள் – இயற்கை எரிவாயு குறித்த….

மன்னார் கடல் நிலப்படுகையில் காணப்படும் எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்கு வேலைத்திட்டம் தயாரிக்கப்படாமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கவனம் செலுத்தியது. வலுக்தி அமைச்சு தொடர்பான 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் நேற்று (05) கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. … Read more

ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது! வெளியானது அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை தளர்த்தப்படவுள்ளது.  நாளை காலை 7 மணிக்கு இவ்வாறு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.   Source link

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிமையை கவனத்திற்கொண்டு உடன் அமுலுக்கு வரும் வகையில், இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரையில்  பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பொது மக்களிடம் சவால் விட்ட மகிந்த விசுவாசியின் பரிதாப நிலை

குருணாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீட்டை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து கொழுத்தியுள்ளனர். காலி முகத்திடலில் மகிந்தவின் குண்டர்களால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை அடுத்து நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமுடி கூட எவராலும் பிடிக்க முடியாது. முடிந்தால் வந்து மோதிப் பார் என பகிரங்க சவால் விட்ட மேயரின் வீடு இன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. வீட்டுக்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்கார்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளமையால் அந்தப் பகுதியில் … Read more

பிரதமர் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

பிரதமர் மகிந்த ராஜபக் ஷ தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரதமர் ஊடக பிரிவு சற்று முன்னர் இதனை  அறிவித்துள்ளது

மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அனுமதிப் பத்திரங்களைக்கொண்ட மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுவதாக கலால் திணைக்களம் இன்று (09) அறிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் முடியும் வரை மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று   கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இலங்கையில் அசாதாரண சூழ்நிலை! வெளிநாடு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தமது கடவுச்சீட்டு, பயணச்சீட்டை என்பவற்றை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.  கொழும்பில் இன்று காலை முதல் பதற்ற நிலை நிலவி வருகிறது. இன்று காலை அலரி மாளிகைக்கு முன்பாக அரசாங்கம் மற்றம் … Read more

பொலிஸாருக்கு உதவியாக முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

பொலிஸாருக்கு உதவியாக முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ஊடக அறிக்கை கொழும்பு, காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்போது நிலவும் நிலைமையைக் கட்டுப்படுத்தல் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பைப் உறுதி செய்யும் நோக்குடன் பொலிஸாருக்கு உதவியாக முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே முப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி அமைதியாகவும் நிதானமாகவும் செயட்படுமாறு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகிந்த ஆதரவாளர்களை தாக்கி நீருக்குள் தள்ளிய பொது மக்கள்(photo)

கொழும்பு  – காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரத்தின் போது  பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களை பொதுமக்கள் தாக்கியதோடு பெஹீர வாவிக்குள் தள்ளியுள்ளனர்.   கொழும்பு காலி முகத்திடலில் கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்டு வந்த  அமைதி வழியான போராட்டம் இன்று குழுப்பப்பட்டது.  பிரமர் மகிந்தவின் ஆதரவாளர்கள் என்றும் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் என்றும் தெரிவித்து பொல்லுகளுடனும் தடிகளுடனும் சென்ற குழுவினர் போராட்டக் களத்தில் உள்ள கூடாரங்களை எரித்தும் அடித்து உடைத்தும் அராஜக செயலில் ஈடுபட்டிருந்தனர்.  இதன் காரணமாக … Read more