4 ஆயிரத்து 643 ஆசிரியர் பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம்

2018 ஆம் ஆண்டின் தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று  முன்தினம் (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர்  கலாநிதி சுரேன் ராகவன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.  2018 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிலுனர்களின் நிரந்தர நியமனங்கள் தொடர்பாக கேட்ட கேள்விக்கு … Read more

பதவி விலகுமாறு கடும் அழுத்தம் – அபயராம விகாரைக்குச் சென்றார் மகிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்ச நாரஹேன்பிட்டி அபராமய விகாரைக்கு சென்று முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்துள்ளார். பிரதமர் மற்றும் அமைச்சரவையை இராஜினாமா செய்யுமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த ஆனந்த தேரர், இந்த கலந்துரையாடல் ஒன்றும் புதிதல்ல எனவும், பிரதமர் அபயராமய விகாரைக்கு வழமையாக வருகை தருபவர் எனவும் தெரிவித்தார். “அவர் ஒரு நன்றியுள்ள தலைவர்,” என்று ஆனந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.   … Read more

பணவீக்கம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் முதன்மைப் பணவீக்கம், 2022 மார்ச் 18.7 சதவீதத்திலிருந்து 2022 ஏப்ரலில் 29.8 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு  இதனை குறிப்பிட்டுள்ளது. உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2022 மார்ச் 30.2 சதவீதத்திலிருந்து 2022 ஏப்ரலில் 46.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேவேளை, உணவில்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 மாச்சின் 13.4 சதவீதத்திலிருந்து 2022 ஏப்ரலில் 22.0 சதவீதத்திற்கு அதிகரித்ததுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. … Read more

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழ் அகதிகள்: இந்திய உள்துறை அமைச்சகம்

தமிழ் நாட்டில் உள்ள 108 அகதி முகாம்களில் 58,843 இலங்கைத் தமிழ் அகதிகளும் முகாமிற்கு வெளியே 34,135 இலங்கை அகதிகளும் ஒடிசாவில் 54 இலங்கை அகதிகளும் வாழ்ந்து வருவதாக இந்திய உள்துறை அமைச்சகம் 2020-21 ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவில் 72,312 திபெத்திய அகதிகள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, ஜூலை 1983 முதல் ஆகஸ்ட் 2012 வரையிலான 3,04,269 இலங்கை அகதிகள் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கின்றனர். அவ்வாறு இந்தியாவுக்குள் வரும் இலங்கை அகதிகளை … Read more

அடுத்த மாத இறுதிக்குள் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு

எரிவாயு தட்டுப்பாடு அடுத்த மாத இறுதிக்குள் முடிவுக்கு வரும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் லிட்ரோ மற்றும் லாவ்ப் நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவி வழங்குவதாக கூறியுள்ளது. இந்திய அரசின் தலையீட்டுடன் மேலும் பல விநியோகஸ்தர்களை தெரிவு செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அத்துடன், எரிவாயு கொள்வனவுக்காக உலக வங்கி 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. லிட்ரோ மற்றும் லாவ்ப் எரிவாயு தொடர்பாக சந்தையில் உள்ள நிலைவரத்திற்கு … Read more

தமன்னா பொது இடத்திற்கு இப்படி ஒரு உடையிலா வருவது? வீடியோ வைரல்

நடிகை தமன்னா தென்னிந்தியாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவர் படங்களில் தேவையான அளவுக்கு தாராளமாகவே கிளாமராக நடிக்க கூடியவர். அவ்வப்போது அவர் கிளாமராக நடத்தும் போட்டோஷூட் ஸ்ட்லகளும் இணையத்தில் வைரல் ஆவதுண்டு. இந்நிலையில் தற்போது தமன்னா மிக கவர்ச்சியான உடையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.   View this post on Instagram A post shared by Viral Bhayani (@viralbhayani) Source … Read more

தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி கேரருகிறார்- தமிழக முதல்வர்

தமிழகத்தில் இருந்து இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை எடுத்துச்செல்ல அனுமதி வழங்க உத்தரவிடவேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதி வழங்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடக்கோரி ,பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று … Read more

ரம்புக்கணை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

ரம்புக்கணை சம்பவத்தின் போது துப்பாக்கி சூட்டை நடத்த உத்தரவு பிறப்பித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்னவை அடுத்த மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் உத்தரவு பிறப்பித்தார். சந்தேக நபர் கொழும்பு பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். அவருடன் மேலும் 3 கான்ஸ்டபிள்களையும் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. இதன்படி 3 கான்ஸ்டபிள்களும் அடுத்த மாதம் … Read more

நெருக்கடியில் தவிக்கும் இலங்கை! உதவிக்கரம் நீட்டும் தமிழகம் – சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரும் தனித் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் இன்று (29) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் தேசிய நெருக்கடி குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் குறித்து பேரவையில் விளக்கமளித்த ஸ்டாலின், அத்தியாவசிய மருந்துகள், எரிபொருள் மற்றும் உரங்களுக்கு … Read more

சர்வகட்சி அரசாங்கத்திற்கான எதிர்கால வேலைத்திட்டம் ஆரம்பம்…

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர், ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய, தற்போது சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று, (29) முற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக, தேசிய ஒருமித்த அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், … Read more