IPL மதிப்புமிக்க அணிகள் பட்டியலில் மும்பை முதலிடம் .சென்னை 2ஆம் இடம்

ஐபிஎல் 15-வது போட்டித்தொடர் கடந்த மாதம் ஆரம்பமானகி, தற்போது நடைபெற்றுவருகிறது. சென்னைஇ மும்பை அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. குறிப்பாக, மும்பை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் அணிகளின் விலை மதிப்பு பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: மும்பை இந்தியன்ஸ் 9,962 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், சென்னை அணி 8,811 கோடி ரூபாயுடன் 2-வது இடத்திலும் உள்ளது. கொல்கத்தா 8,428 கோடி ருபாயுடன் 3-வது … Read more

பிரதமரின் பதவி விலகல் குறித்து முக்கிய கடிதத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயம் (Video)

சகல கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியில் முழுமையாக இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். அதன்படி பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வ கட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் ஊடாக தெரியப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் கலந்துரையாட நாளை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ள … Read more

இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பங்கு சந்தை நடவடிக்கைகள்

இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பங்கு கொள்வனவாளர்களின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில்,நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகள் நேற்று (27) புது உத்வேகத்துடன் நிறைவடைந்தது. எஸ் & பி.எஸ்.எல் 20 இன் பங்கு சுட்டெண் 3.5 வீதமாக உயர்வடைந்ததுடன் பெஞ்ச் மார்க்கின் அனைத்து பங்குகளின் விலைச் சுட்டெண் 5 வீதத்தை விட அதிகரித்தது. 14.4 மில்லியன் பங்குகள் 2.18 பில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி:இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அலுவலகங்களில் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து தேசிய மின் வலைப்பின்னலுடன் இணைத்துக் கொள்வதற்கான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க மற்றும் kapital crop international pvt ltd, orb touch cc pvt ltd ஆகிய நிறுவனங்களின் … Read more

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு – செய்திகளின் தொகுப்பு

நாட்டில் குறைவடைந்த வெளிநாட்டு நாணய ஒதுக்குகள் இலங்கையர்களுக்கு அத்தியாவசியமான மருந்து பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவு போன்ற நாளாந்த தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு பாரியளவான இடர்பாடுகளைத் தோற்றுவித்ததன் காரணமாக அனைத்து இலங்கையர்களும் தற்போது சமூக, பொருளாதார மற்றும் நிதியியல் போன்ற இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எனவே இலங்கை மக்களால் முகங்கொடுக்கப்படும் இன்னல்களை இலகு படுத்த உதவுவதற்காக வெளிநாட்டில் வதிகின்ற அனைத்து இலங்கையர்கள் மற்றும் எந்தவொரு தேசத்தையும் சேர்ந்த அனைத்து நலன் விரும்பிகளின் … Read more

அபேக்ஷா வைத்தியசாலையில் வழமையான மரண வீதங்களே

வழமைக்கு மாறாக உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாக வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று அபேக்ஷா வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை என்பது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெறும் வைத்தியசாலையாகும். இதனை உணர்வுபூர்வமாக பயன்படுத்தி, சிலர் நிதி திரட்டல் போன்ற முறைகேடுகளிலும் ஈடுபடலாம் . மருந்து வகைகள் இன்றி, அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் சிறுவர்கள் உயிரிழப்பதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் விஜித் குணசேகர தெரிவித்துள்ளார். வழமையாக இடம்பெறும் மரண … Read more

'கொவிட் பரவுவதில் நாம் 'பார்வையற்றவர்களாக' இருக்கிறோம் ' WHO' தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோயை தொடர்ந்தும் கண்காணிக்குமாறு ,உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நாயகம் ,உலக நாடுகளை அறிவுறுத்தியுள்ளார். தற்பொழுது பரிசோதனை நடவடிக்கை குறைந்துள்ளதிளால் வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதில் உலகம் ‘பார்வையற்றவர்கள் ‘ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் அமைப்பின் தலைமையகமான ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர மாநாட்டில்  செயலாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் Tedros Adhanom Ghebreyesus கூறுகையில், ‘உலகளவில் பல நாடுகள் கொரோனா பரிசோதனை செய்வதை குறைத்திருப்பதனால் உலக சுகாதார நிறுவனம் கொரோனா தொற்று பற்றிய … Read more

கொழும்பில் பிரதான வீதியில் சாப்பிடுவதற்காக கஞ்சி சமைக்கும் மக்கள் (Video)

கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து பாரிய ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மகிந்த மற்றும் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலக வேண்டும் என தெரிவித்து, கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் மக்கள் அனைவரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மக்கள் பிரதான வீதியில் விறகடுப்பில் சோற்றுக் கஞ்சி சமைத்து வருவதுடன், இதனை மாத்திரமே தற்போது உண்ண வேண்டிய நிலையில் மக்கள் இருப்பதாகவும், தற்போது சமைக்கப்படும் கஞ்சியையே … Read more

2021 (2022) க.பொ.த உயர்தர செய்முறை பரீட்சை

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் நாடகம் மற்றும் அரங்கியல் ஆகிய பாடங்களுக்குரிய செய்முறை பரீட்சை நாளை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளதுடன், அது தொடர்பாக விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:  

HIV வீட்டிலேயே பரிசோதனை செய்வதற்கான வசதி

HIV நோய் தொடர்பான பரிசோதனைகள் தற்போது  நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த பரிசோதனைக்காக இணையத்தளத்தின் மூலம் அதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் என்று தேசிய பாலியல் நோய் ஒழிப்பு மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டம் மற்றும் சுகாதார மேம்பாட்டு பணயகம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் HIV யினால் பாதிக்பப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் இருந்த போதிலும் புதிதாக அடையாளம் காணப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்பொழுது … Read more