இன்று முதல் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று (21) முதல் மீண்டும் கட்டாயப்படுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை நீக்க கடந்த 18 ஆம் திகதி (2022.04.18) சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இருந்தபோதிலும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாடாளாவிய ரீதியில் பெருமளவிலான மக்கள் ஒன்று கூடுவதன் காரணத்தினால் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயப்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் … Read more

இலங்கையில் இன்று முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை! வெளியானது அறிவிப்பு (Photo)

இலங்கையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது இன்று முதல் நடைமுறையாகும் வகையில் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல் நீக்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த நிலையிலேயே மீண்டும் குறித்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  … Read more

சுவீகரிக்கப்படவேண்டிய சொத்துக்கள் இருக்குமாயின் வழக்கு தாக்கல் செய்யுங்கள்

தமது சொத்துக்களை கணக்காய்வு செய்து அதன் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (21) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். தாம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த 12 வருட காலப்பகுயில் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ கூறினார். தனது அல்லது குடும்பத்தை சேர்ந்தவர்கள் முறைகேடாக திரட்டிய சொத்துக்கள் உலக நாடுகளில் இருக்குமாயின் அது தொடர்பில் வழக்கு பதிவு செய்யுமாறும், 2015 ஆம் ஆண்டும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் … Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் :பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து  இன்று (21)  காலை பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று, இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில், கிறிஸ்தவ கத்தோலிக்க தேவாலயங்களில் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் 200 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித் பொலிஸ் சார்ஜண்ட் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.   போராட்ட களத்துக்கு சீருடையுடன்சென்று அதற்கு ஆதரவு தெரிவித்த  நிலையில் குறித்த பொலிஸ்  சார்ஜண்ட் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குட்டிகல காவல்நிலையத்தில் பணியாற்றிவந்த  சார்ஜன்ட் டப்ளியூ.எம்.அமரதாசவை (30158) என்ற குறித்த அதிகாரி கடந்த 14 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட களத்திற்கு சென்றிருந்தார். இதுதொடர்பில் அவர் அன்றைய தினம் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு,  தடுத்து … Read more

இராஜாங்க அமைச்சர் எஸ்.எம்.எம் முஷர்ரப் தனது கடமையைப் பொறுப்பேற்றார்

புடவைக் கைத்தொழில், உள்ளூர் உற்பத்தி மேம்படுத்தல் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷர்ரப்நேற்று (20) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், கிராமிய பொருளாதார பயிர்ச் செய்கை மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நோத்சீ வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மீண்டும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை – கடற்றொழில் அமைச்சர்

நோத்சீ எனப்படும் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மீண்டும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றது. வடகடல் நிறுவனத்தின் உற்பத்தி செயற்பாடுகளுக்கு தேவையான சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான  உபகரணங்கள் மற்றும் மூலப் பொருட்களை இந்திய கடன் திட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள நிலையில் இன்றைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாரம்பரிய கைத்தொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா செயற்பட்ட … Read more

அதிக அவதானத்துடன் செயற்படுங்கள்: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்

இலங்கை வாழ் மக்கள் தற்போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நாட்டில் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அன்றாட நடவடிக்கைகளில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் துறையினர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மருத்துவ சிகிச்சை தேவையில்லை என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.   Source … Read more

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சென்ற ஒரு கடிதம்

ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர். இந்த குழுவில் சுமார் 13 பேர் உள்ளடங்குவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “சர்வகட்சி” அரசாங்கத்தை அமைக்குமாறு கோரி இந்த கடிதம் ஜனாதிபதியிடம்  கையளிக்கப்பட்டது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (21) காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாக கடிதத்தில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  Source link

றம்புக்கணை பொலிஸ் ஊரடங்கு நீக்கம்

றம்புக்கனை பொலிஸ் பிரிவில், அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று (21) அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.. ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எரிபொருள் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை றம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதயடுத்து பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.