புதிய சுபீட்சமான நாடு உருவாகுமென எதிர்பார்க்கிறோம்: உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தம்மிக்க பிரசாத் தெரிவிப்பு

மிக விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென நம்புவதாகவும், ஒரு புதிய சுபீட்சமான நாடு உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இவர் தனது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உண்மையாகவே நான் இதில் கலந்து கொள்ள தீர்மானித்ததற்கான காரணம், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் அமைதியான … Read more

காலி முகத்திடலில் சற்று முன்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் (Video)

இரண்டாம் இணைப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை காலிமுகத்திடலில் சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளார். முதல் இணைப்பு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க பிரசாத் நாளை (15) கொழும்பு காலி முகத்திடலில் 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார். நாளை காலை காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுடன் இணைந்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கும் நீதி வழங்குமாறு இந்த நாட்டின் தலைவர்களை வலியுறுத்தி … Read more

ஜனாதிபதிக்கு எதிராக மலர்வளையத்துடன் காலி முகத்திடலில் போராட்டம் (PHOTOS)

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுபெற்றுள்ளதுடன், நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக ஏழாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள், உணவுப் பொருள், எரிவாயு, மருந்து பொருட்களை வாங்க … Read more

சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்

பண்டிகைக் காலப்பகுதியில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் சாரதிகள் வாகனங்களை செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. சட்டத்தை மதித்தல் , வாகனங்களை செலுத்தும் போது வேக கட்டுப்படு , ஆத்திரப்படாமல் இருத்தல் மற்றும் மதுபோதையில் வாகனங்களை செலுத்துவதை தவிர்த்தல் முதலானவற்றை கவனத்திற்கொள்வதன் மூலம் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதி பயிற்சி பிரிவு தாதி அதிகாரி புஸ்பா ரம்யானி டி சொய்சா தெரிவித்தார். தமிழ் … Read more

கொழுப்பை குறைக்க உடற்பயிற்சி சிறந்தது

தற்போது எண்ணெயினால் தயாரிக்கப்பட்ட இனிப்பு உணவு வகைகள் அதிகளவில் உணவில் சேர்க்கப்படுவதால், நாம் உண்ணும் மற்ற உணவுகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எண்ணெய் உணவுகளில் இருந்து கிடைக்கும் கொழுப்பை குறைக்க உடற்பயிற்சி செய்வது சிறந்தது என போஷாக்கு மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாழ்க்கையில் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு மத்தியில், சரியான போஷாக்கு மிகுந்து உணவுவகைகளை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பது தொடர்பில் பொது … Read more

மக்களிடம் இலங்கை மின்சார சபை விடுத்துள்ள முக்கிய கோரிக்கை! செய்திகளின் தொகுப்பு (Video)

நாடளாவிய ரீதியில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் தொடர் மின் தடை நெருக்கடி காரணமாக புத்தாண்டு காலத்தில் மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு காலத்தில் வீட்டு மின்சார பாவனை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோர் தமது அன்றாட மின் பாவனையை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் … Read more

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை கடல் நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் … Read more

இலங்கைக்கு மேலும் 8 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயு

இலங்கைக்கு விரைவில் 8 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் காஸ் கிடைக்க இருப்பதாக லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக வங்கியின் உதவியோடு காஸை இறக்குமதி செய்வதற்கென 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவிருக்கின்றன. இதற்கமைய இலங்கையில் காஸ் விநியோக நடவடிக்கை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என்று லிற்றோ நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த மாதத்தில், இதுவரை 8 இலட்சம் வீட்டுப் பாவனைக்கான காஸ் சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், ஹோட்டல்கள் அடங்கலாக இதுவரை … Read more

விடுமுறையில் ஊருக்கு சென்றவர்களுக்கான தகவல்: இன்று முதல் விசேட திட்டம்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் பணிகளுக்கு திரும்ப விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. இன்றைய தினம் முதல் இந்த விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. சுமார் 200 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்னஹன்ச தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அளவில் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் வழமைக்கு திரும்பும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், புத்தாண்டுக்காக … Read more

சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் திரும்ப விசேட போக்குவரத்து வசதி

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச்சென்ற மக்கள் ,மீண்டும் பிரதான நகரங்களுக்குத் திரும்புவதற்காக மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இன்று (15) முதல் இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை பிரதி பொது முகாமையாளர் பண்டுக்க ஸ்வர்ணஹங்ச தெரிவித்தார். மேலதிக பஸ்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தூரப் பிரதேசங்களில் இருந்து கொழும்பு வருவதற்கான தேவையான பஸ் சேவைகளை இன்று தொடக்கம் மேற்கொள்ளுமாறு பிராந்திய முகாமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் … Read more