பிரதமரின் அழைப்பிற்கு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பதில் (Video)

பிரதமர் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ள போதும் எமது பிரதான கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நடத்தப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் எவ்வித பயனும் இல்லை என காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.  இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், மக்கள் அனைவரும் இங்கு வீதிக்கு இறங்கி போராடுவதற்க்கான முக்கிய காரணம் பிரதமருக்கு தெரிந்திருந்தால் இவ்வாறான பேச்சுவார்த்தைள் தேவைப்படாது என நாம் நினைக்கின்றோம். எங்களுடைய பிரதான நோக்கம் பிரதமர் மற்றும் ஜனாதிபதி உட்பட இந்த ஊழல் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதுதான். … Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: 365 பில்லியன் ரூபா சொத்துக்கள் அரசுடைமை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கைதுசெய்யப்பட்டவர்களின் 365 பில்லியன் ரூபா சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டிருப்பதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று ,இலங்கையில் இடம்பெற்ற இந்த குண்டு தாக்குதல் சம்பவத்தில் 39 வெளிநாட்டவர்கள், 3 காவல்துறையினர் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான உண்மை … Read more

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தயார் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக காலி முகத்திடலில் தற்போது ஒன்று கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் என்ற ரீதியில் கலந்துரையாடுவதற்கு தயார் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் அறிவித்துள்ளார். அதற்கமைய, நாடு எதிர்நோக்கியிருக்கும் தற்போதைய சவாலை வெற்றி கொள்வதற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கும் பெறுமதியான கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கலந்துரையாடலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராக இருந்தால் அவர்களின் பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். பிரதமர் … Read more

இலங்கை பிரச்சினை குறித்து விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் சமூகம் பொய்ப் பிரச்சாரம்: சிங்கள ஊடகம் தகவல்

இலங்கையில் தற்பொழுது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் சமூகம் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்காமை மற்றும் வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றாமை ஆகியனவே நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு காரணம் என புலம்பெயர் தமிழர்கள் பிரச்சாரம் செய்து வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இராணுவத்திற்கு சம்பளங்களை அதிகரிக்கவும், முன்னாள் படையதிகாரிகளின் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்கவும் … Read more

இரண்டு தினங்களுக்கு மின் துண்டிப்பு இடம்பெறாது

நாட்டில் இன்று(13) ம் நாளை(14) யும் மின்சாரத் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் நோக்கோடு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் முதல் மின்சாரத் துண்டிப்பு இடம்பெறும் காலப்பகுதியைக் குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: 25, 653 குற்றச்சாட்டுகளின் கீழ் 79 சந்தேக நபர்களுக்கு எதிராக 27 வழக்குகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்டவர்களுள் 196 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 493 பேர் பிணையில விடுதலை செய்யப்ட்டுளள்னர். 81 பேருக்கு எதிராக பல் வேறு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 79 சந்தேக நபர்களுக்கு எதிராக 27 வழக்குகள் 25, 653 குற்றச்சாட்டுகளின் … Read more

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள மஹிந்த

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அழைப்பு விடுத்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் குழுவினருடன் அரசாங்கம் கலந்துரையாடுவதற்கு தயார் என அவர் கூறியுள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இளைஞர் யுவதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக இன்று ஐந்தாவது நாளாகவும் மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  Source link

கிழக்கு,ஊவா,வடக்கு மாகாணங்களில் 75  மி.மீ. க்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 13ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாட்டை விட்டு விலகி நகர்ந்து கொண்டிருக்கின்றது. நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு , ஊவா … Read more

அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

அமைச்சர்கள் இல்லாவிட்டாலும் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று (12ம் திகதி)இடம்பெற்ற அமைச்சரவை மற்றும் அரச அமைச்சுக்களின் செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடுகையில், எரிவாயு, எரிபொருள், மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு … Read more