எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவும் – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

பண்டிகைக் காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார். தேவையான அளவு எரிபொருள் நாட்டிற்கு கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 2 லட்சத்து 65 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை இந்த மாதத்தில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேவையற்ற வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடிநிற்க வேண்டாம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் கொள்கலன்களில் எரிபொருள் விநியோகிப்பது பற்றி எதிர்காலத்தில் ஒழுங்கு விதி ஒன்று ஏற்படுத்தப்படும் … Read more

சதொசவில் பொருட்கள் இல்லை: பொதுமக்கள் எதிர்நோக்கப்போகும் சிக்கல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரசியல் போராட்டத்திற்கு மத்தியில் பொதுமக்கள் உண்மையான பிரச்சினைகளை மறக்கின்றனர் என மக்கள் உரிமை பாதுகாப்பு மன்றத்தின் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். பண்டிகை காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மக்களின் போராட்டங்கள் எரிபொருள் மருந்து எரிவாயு பற்றாக்குறை பிரச்சினைகளை மறக்கச்செய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   சதொசவில் ஏற்கனவே பொருட்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது அரசாங்கம் கண்மூடித்தனமாக பொருளாதாரத்தை கையாண்டதால் பொதுமக்கள் அதிகரித்துள்ள பணவீக்கத்தின் சுமைகளை சுமக்கவேண்டியுள்ளது என அசேல சம்பத் … Read more

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் விடுக்கும் செய்தி

இலங்கை மத்திய வங்கியின் புதிதாக பதவியேற்ற ஆளுநர் என்ற வகையில், நாணயச் சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களான சனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்த்தன அவர்களும் முனைவர் (திருமதி) ராணி ஜயமகா அவர்களும் எப்போதும் மிகவும் சுயாதீனமாகவும் தொழில்சார்பண்புடனும் விடாமுயற்சியுடனும் செயற்படுவதனாலும் இலங்கை மத்திய வங்கியின் அனைத்து முயற்சிகளுக்கும் மிகவும் சாதகமாகப் பங்களித்துள்ளமையினாலும் நாணயச் சபையில் அவர்கள் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு இணங்கியுள்ளதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன். அவர்களது முழுமையான தொழில்சார்பண்பில் நான் முழுமையான நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பதனால் தேசத்திற்கும், நாணயச் சபைக்கும் … Read more

கோட்டாபயவின் நம்பிக்கைக்குரிய நபர் இவர் தான்….! பின்னடைவை நோக்கி நகரும் பசில்

இலங்கையின் நெருக்கடி அரசியல் களத்தில் பசிலை காட்டிலும் கோட்டாபயவின் நம்பிக்கை வென்றவராக நிதியமைச்சர் அலி சப்ரி விளங்குகிறார் என்று அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளன. ஆளும் கட்சிக்குள்ளேயே பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ள நிலை பாரதூரமானது என்றும் கருதப்படுகிறது. ஏழு மூளைகளை கொண்டிருக்கிறார் என்று கூறப்பட்ட பசில் ராஜபக்ச, இறுதியில் நிதி விடயங்களில் தோல்வியை தழுவியுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது. இது அவரின் கட்சி மட்ட செல்வாக்கை பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டுக்கு முன்னால் … Read more

Message by the Governor of the Central Bank of Sri Lanka

“As the newly incumbent Governor of the Central Bank of Sri Lanka (CBSL), I am delighted that Mr. Sanjeeva Jayawardena, President’s Counsel and Dr. (Mrs.) Ranee Jayamaha, appointed members of the Monetary Board, have acceded to continue to serve on the Monetary Board, as they have always acted very independently, impartially, professionally and diligently, and … Read more

பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு –

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றுவளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி இடம்பெறக்கூடும் வளிமண்டளவியல் திணைக்கள அதிகாரி பிரிகா ஜயகொடி தெரிவித்தார். இதேவேளை ,காலை 8.30மணியுடனான 24 மணித்தியாளங்களில் ஆகக்கூடிய மழை வீழ்ச்சி பாதுக்கை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.இங்கு 157 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை பல நீர்;தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இராஜாங்கனை மற்றும் தெதுறு ஓயா நீர்த்தேக்கங்களின் … Read more

லிட்ரோ நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு! நீங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யலாம்

லிட்ரோ நிறுவனத்தினால் இதுவரையில் எரிவாயு விலை அதிகரிக்கப்படாத நிலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் பொலிஸாரிடம்  முறைப்பாடளிக்குமாறு அந்த நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் 1311 என்ற இலக்கத்தை அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, 3,900 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று மாலைத்தீவில் இருந்து நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது. அதிலுள்ள எரிவாயுவை தரையிறக்கும் செயற்பாடுகள் … Read more

நீரேந்தும் பகுதிகளில் கன மழை

மௌசாக்கலை, காசல்ரீ நீரேந்து பிரதேசங்களில் கன மழை பெய்து வருகிறது. மௌசாக்கலை, சிவனொளிபாதமலை, நல்லதண்ணி, சாமிமலை பிரதேசங்களில் நேற்றிரவு (09) முதல் அடைமழை பெய்து வருவதாக எமது ஊடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய மலைநாட்டின் நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. காசல்ரீ, கன்னியோன், கொத்மலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

இலங்கையுடன் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு பங்களாதேஷ் நிறுவனத் துறை ஆயத்தம்

பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் ஆழமான வரலாற்று மற்றும் கலாசார உறவுகள் நீடித்து வருவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான நேரம் இது என்றும் தெரிவித்தார். உயர்ஸ்தானிகர் பேராசிரியர் சுதர்சன் செனவிரத்ன 2022 ஏப்ரல் 03ஆந் திகதி டாக்காவில் பங்களாதேஷ் வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜாஷிம் உதீனுடன் நடைபெற்ற சந்திப்பில் இந்த யோசனையை எடுத்துரைத்தார். உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி இருவரும் இரு நாடுகளின் ஏற்றுமதி கூடைகளை பல்வகைப்படுத்துவதன் … Read more

எரிபொருளுக்காக காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு

தங்கொடுவையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று இரவு டீசல் எடுப்பதற்காக வரிசையில் நின்றிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடைய பன்னல, கோனவில பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய சடலம் மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. Source link