கொழும்பில் குப்பையில் சிக்கிய நாமல் – கடும் கோபத்தில் சிங்கள மக்கள்

சமகால ஆட்சியிலுள்ள ராஜபக்ஷ சகோதர்கள் மீது சிங்கள மக்கள் மிகவும் வெறுப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் கொழும்பில் நேற்றையதினம் குப்பையில் அரசியல் தேடிய அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சிங்கள மக்கள் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்றையதினம் எதிரணியினரால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட எதிரணியினர் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த நிலையில், அந்தப் பகுதியில் வீசப்பட்டிருந்த குப்பைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கையை நாமல் ராஜபக்ஷ … Read more

'பாராளுமன்றத்திலிருந்து நூலகம் வரை' வேலைத்திட்டம் பொது நூலகத்திலிருந்து ஆரம்பம்

இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பான சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘பாராளுமன்றத்திலிருந்து நூலகம் வரை’ நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது. பாராளுமன்றம் தொடர்பான நூல்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை நாடளாவிய ரீதியில் உள்ள பொது  நூலகங்கள் மற்றும் பாடசாலை நூலகங்களுக்கு வழங்குவதே இந்நிகழ்வின் நோக்கமாகும். இதன் ஓர் அங்கமாக பாராளுமன்ற முறைமைகள் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி பாராளுமன்ற உயர் அதிகாரிகள் மற்றும் பொது நூலக அதிகாரிகளின் … Read more

பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு

பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு கிட்டும் என்று தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கொட்டகலை பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் மகளிர் தின விழா, 15.03.2022 அன்று கொட்டகலை ரிஷிகேஷ் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,’இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு … Read more

தயது செய்து இதனை செய்யாதீர்கள்! இலங்கை மக்களிடம் அரசு வலியுறுத்தல்

நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துவது என்பது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்படும் காலங்களில் மின்சார உபகரணங்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துமாறு இலங்கை நிலையான வளசக்தி அதிகாரசபை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மின்சார பயன்பாடு அதிகமாக உள்ள மாலை 6.30 – 9.30 மணி வரையான காலப்பகுதியில் மின்சார உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். சலவை இயந்திரங்கள், நீர் … Read more

நிகழ் நிலை (Online) ஊடாக தொழில் திணைக்களத்தில் முறைப்பாடுளை முன்வைக்க சந்தர்ப்பம்

அரச சார்பு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை, இன்று முதல் நிகழ் நிலை (Online) ஊடாக தொழில் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் முறைப்பாடு செய்யக்கூடிய முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் திணைக்கள  ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 பெப்ரவரி

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2022 பெப்ரவரியிலும் விரிவடைந்தன. தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2022 பெப்புருவரியில் 52.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து தொடர்ந்தும் விரிவடைந்தது. புதிய கட்டளைகளில் தொடர்ச்சியான விரிவடைதல் இம்மேம்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனினும், உற்பத்தி, கொள்வனவுகளின் இருப்பு, தொழில்நிலை என்பன வீழ்ச்சியடைந்த அதேவேளை வழங்குநர் விநியோக நேரம் மாதத்திற்கு மாதம் அடிப்படையில் நீட்சியடைந்தது. பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது, 2022 பெப்புருவரியில் 51.8 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து பணிகள் … Read more

இலங்கையில் முழுமையாக ஸ்தம்பிக்கப்போகிறதா பேருந்து சேவை? மூன்று நாட்களில் முக்கிய அறிவிப்பு

தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணம் போதுமானதல்ல என்பதால் மூன்று நாட்கள் சேவையில் ஈடுபட்டு, அதனால் ஏற்படும் நட்டத்தை சுமக்க முடியாது போனால் எமது தீர்மானத்தை எதிர்வரும் 3 தினங்களில் அரசாங்கத்துக்கு அறிவிப்போம் என அகில இலங்கை பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் செயலாளர் அன்ஜன பிரயன்ஜித் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடிப்படையாக் கொண்டு பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் கட்டணம் மூலம் நாங்கள் நாளாந்தம் எரிபொருளுக்காக செலவிடும் தொகையை … Read more

தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள 55வது இராஜதந்திர செஞ்சிலுவைச் சந்தையில் இலங்கையின் தனித்துவமான பாரம்பரியத் தயாரிப்புக்களுக்கு அதிக தேவை

சர்வதேச சந்தையில் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரை எளிதாக்கி, மேம்படுத்துவதற்காக, தாய்லாந்து இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, சுவையூட்டி மற்றும் அது சார்ந்த தயாரிப்பு சந்தைப்படுத்தல் சபை மற்றும் இலங்கையின் தேசிய கைவினை சபை ஆகியவற்றுடன் இணைந்து முதன்முறையாக 55வது இராஜதந்திர செஞ்சிலுவைச் சங்க சந்தையில் இலங்கைத் தயாரிப்புக்களை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. தாய்லாந்திலுள்ள தூதுவர்கள் தமது வாழ்க்கைத் துணைவர்களுடன் கலந்து கொண்ட இந்நிகழ்வு, தாய் செஞ்சிலுவைச் சங்கத்தால் dpcredcrossbazaar.com ஊடாக ஹைப்ரிட் … Read more

மாலை 4.00 மணிக்குப்பின்னர்  சில இடங்களில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச் 16 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 16 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது  நாட்டின் தெற்கு ,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.ஊவா மாகாணத்தில் ஓரளவு மழை பெய்யக்கூடும் சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களிலும் களுக்துறை மாவட்டத்திலும் மாலை 4.00 மணிக்குப்பின்னர்  சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய … Read more

ஒரே நாளில் இலங்கையில் அச்சிடப்பட்ட பெருந்தொகையான பணம்

இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பணம் அச்சிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியிடம் நேற்றுமுன்தினம் திறைசேரி உண்டியல் பத்திரங்களின் தொகை ஆயிரத்து 543.97 பில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தொகை கடந்த 11ஆம் திகதி ஆயிரத்து 521.69 பில்லியன் ரூபாவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் வசம் உள்ள திறைசேரி உண்டியல் பத்திரங்களின் தொகை நேற்றுமுன்தினம் 22.27 பில்லியன் ரூபாவால் அதாவது 2,227 கோடி ரூபாவால் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி … Read more