புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் எந்தத் தடையும் கிடையாது

புலம்பெயர் அமைப்புக்கள்  இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. முதலிடுவதற்கான வாய்ப்புக்களைப் வழங்க சமகால அரசாங்கம் தயாராகவுள்ளது என்று வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு உரிமைகள் இல்லை என்று கூறுபவர்கள் அதற்கான விடயங்கள் தெளிவாக முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் ,புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்தால் அதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படும் என்று ‘சவால்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்புடன் வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தல்’ … Read more

வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இன்று தொடக்கம் பைசர் டோஸ் தடுப்பூசி

இதுவரையில் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாமல் வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ள நபர்களுக்கு இன்று தொடக்கம் பைசர் டோஸ் 3 பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பைசர் 3 ஆவது டோஸாக பெற்றுக்கொள்ள முடிகின்றமை பூஸ்டர் மருந்தே ஆகும். இதற்கமைவாக தொழில் காப்புறுதியுடன் அல்லது கல்வி நடவடிக்கைகளுக்காக வெளியேறும் எந்தவொரு நபரும் இந்த தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதேவேளை அவுஸ்ரேலியா செல்லும் நபர்களுக்காக 4 … Read more

மாபெரும் முற்றுகை! கொழும்பில் மக்களுடன் இணைந்த சஜித் (நேரலை)

கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகிலிருந்தும், பி.டி.சிரிசேன மைதானத்திற்கு அருகிலிருந்துமென இரு இடங்களில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணிகள் ஆரம்பமாகியிருந்தன. இந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மக்களுடன் ஆர்ப்பாட்டப் பேரணியில் இணைந்துள்ளார்.  இதன்போது மக்கள் சவப்பெட்டியை சுமந்து வருவதை காணக்கூடியதாக இருப்பதுடன், பலர் நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச போன்று வேடமிட்டு இந்த பேரணியில் … Read more

ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் இலங்கைப் பிரதிநிதிகள் பங்கேற்பு

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில், நீதி அமைச்சர் அலி சப்ரி, உற்பத்தி வழங்கல் மற்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திரு. நெரின் புள்ளே ஆகியோரை உள்ளடக்கிய தூதுக்குழுவொன்று கொழும்பிலிருந்து கலந்துகொண்டது. மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரானது, 2021 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின்படி, … Read more

கொக்குவில் மாணவனுக்கு வெகுஜன ஊடக அமைச்சர் நல் வாழ்த்து

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மற்றும் சித்தி எய்தாத மாணவர்கள் என்ற ரீதியில் ஊடகத்தின் மூலம் விரிவை ஏற்படுத்த வேண்டாம் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கேட்டுக்கொண்டார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்ததுடன் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள்  … Read more

இலங்கையை தலிபான்களிடம் ஒப்படைத்தாலும் சிறப்பாக ஆட்சி நடக்கும்! கோட்டாபய அரசாங்கத்திற்கு பகிரங்க தகவல்

இலங்கையை தலிபான்களிடம் ஒப்படைத்தாலும் சிறப்பாக ஆட்சி செய்வார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், மிக மோசமான திருடர்களுடன் உலக நிதி நிறுவனங்கள் கொடுக்கல் வாங்கல் செய்யாது. எனவே மக்களிடம் நாம் கூறுகின்றோம் தற்பொழுது பொறுமை காத்தது போதும். இந்த அரசாங்கத்தின் சாபத்தை முடிவுக்குக் கொண்டு வர நாம் வீதிக்கு இறங்க வேண்டும். நாட்டுக்கு இந்த … Read more

குழந்தைகளுக்கான தரமற்ற பால் போத்தல்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

குழந்தைகளுக்கு பால் வழங்க பயன்படுத்தப்படும் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையால் அங்கீகரிக்கப்படாத போதிலும், பொலிகார்பனேட்டினால் (Polycarbonates) தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பால் போத்தல்கள் இலங்கையில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.மேலும் தரமான பால் போத்தல்களை தயாரிப்பவர்களுக்கு அனுமதி வழங்கும் வசதிகள் இலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் கொண்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார். தேசிய … Read more

மீன்பிடிப் படகுகளில் மீள் புதுப்பிக்கத்தக்க கலப்பு மின் பிறப்பாக்கி – இந்தியத் தனியார் முதலீட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடல்

மீன்பிடிப் படகுகளில் மீள் புதுப்பிக்கத்தக்க கலப்பு மின் பிறப்பாக்கி பொறிமுறையினை பொருத்துவது தொடர்பாக இந்தியத் தனியார் முதலீட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சூரியக் கலம் மற்றும் காற்றைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யக்கூடிய கலப்பு பொறிமுறையினை மீன்பிடிப் படகுகளில் பொருத்துவன் மூலம் எரிபொருள் செலவீனத்தினை  கட்டுப்படுத்தி பெருமளவு பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன்,  சூழல் மாசடைதலை தவிர்த்து, சுற்றுச்சூழல் நன்மைகளையும் பெற்றுக் கொள்ளமுடியும். இது தொடர்பாக தொடர்ந்து கலந்துரையாடி கடற்றொழிலாளர்களுக்கு நன்மை … Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழுடன் ஒரு லட்சம் பணம்! அதிரடி அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 100,000 ரூபாய் இழப்பீடு மற்றும் காணியையும் வழங்குவதற்கு இதன்போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இந்த விடயத்தை பாதிக்கப்பட்ட தரப்பினர் வன்மையாக கண்டித்திருந்தனர். என்ற போதும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  … Read more

மாலைதீவில் இடம்பெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாடு, 5வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட கூட்டம் நிறைவு

ஐந்தாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட கூட்டம் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் ஸ்தாபக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் 2022 மார்ச் 09 மற்றும் 10ம் திகதி மாலைதீவுக் குடியரசில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் மாலைதீவு, இந்தியா, இலங்கை மற்றும் மாநாட்டின் புதிய உறுப்பு நாடான மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட அதேவேளை, பங்களாதேஷ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத் தொடரில் 4வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட … Read more