தென்னிலங்கை அரசியல்வாதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பிரபல பெண்

தென்னிலங்கை அரசியல்வாதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்ணாக மந்திரவாதி ஒருவர் செயற்பட்டு வருகிறார். அனுராதபுரத்தில் இருந்து செயற்படும் ஞானக்காவை சந்திக்க ஜனாதிபதி கோட்டபாய உட்பட பலரும் அங்கு சென்று வருகின்றனர். தமது அரசியல் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல ஞானக்காவின் ஆலோசனை பெறுவது இவர்களின் பிரதான கடமையாக உள்ளது. ஞானக்காவை அரசியல்வாதிகள் மட்டுமன்றி இராணுவ உயர் அதிகாரிகளும் முழுமையாக நம்புவதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சு பதவியில் இருந்து தான் நீக்கப்பட்ட பின்னர் ஞானக்காவை … Read more

பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு

உள்நாட்டு சந்தையில் நிலவும் பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அடுத்த மாத ஆரம்ப பகுதியிலிருந்து குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை பகிர்ந்தளிக்க மில்கோ நிறுவனம் தயார் நிலையில் இருப்பதாக,கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் ரி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் திரவ பால் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதால் சந்தையில் பால் மாவிற்கு தட்டுப்பாடு நிலவியது. அடுத்த மாதம் முதல் திரவ பாலையும் பால் மாவையும் சந்தைக்கு விநியோகிக்குமாறு … Read more

மூன்று இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு

இந்த வருடத்தில் வெளிநாட்டு வேலைவாய்புகளுக்காக மூன்று இலட்சம் இலங்கையர்களை அனுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கமைவாக டோஹா கட்டாரில் தொழில் வாய்ப்புக்காக கூடுதலான இலங்கையர்களை அனுப்பி வைக்கும் வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது . இதற்காக இலங்கை தூதுக்குழுவொன்று தற்போது கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜயரட்ன, டீ.வி.சானக்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மேஜர் ஜென்ரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் இந்த தூதுக்குழுவில் உள்ளடங்குகின்றனர். இவர்கள் அண்மையில் … Read more

பாரியளவில் அதிகரிக்கப்போகிறதா மின் கட்டணம்? அமைச்சரவை வழங்கிய ஆலோசனை

மின்சாரக் கட்டணங்களை உடனடியாக உயர்த்த வேண்டுமென மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. பணிப்பாளர் சபையின் தீர்மானம் குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு, அமைச்சரவை ஆலோசனை வழங்கியுள்ளது. மின்சாரக் கட்டணத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்த அறிக்கையை இலங்கை மின்சார சபை தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இரண்டு ரூபா ஐம்பது சதமாக காணப்படும் அலகு ஒன்றின் விலையை 15 ரூபாவாக அதிகரிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மின் … Read more

அரசாங்கத்திற்கு எதிராக இன்று பாரிய போராட்டம்! – சஜித் அணியின் திட்டம்

அழிவில் இருந்து நாட்டை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இன்று அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், குறித்து போராட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு திசைகளிலும் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 300,000 க்கும் அதிகமான மக்கள் பங்கேற்பார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று … Read more

பதவியிலிருந்து விலகிய மற்றுமொரு அரசாங்க உறுப்பினர்!

கொத்மலை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக செயற்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 6.9 மில்லியன் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றத் தவறிய அரசாங்கத்தின் கீழ் பதவியை வகிக்கத் தயாராக இல்லாததால் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராகவும், அரசாங்கத்தில் உள்ள அனைத்து சக்திகளையும் ஓரங்கட்டுவதற்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தான் இராஜினாமா செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். … Read more

WeAreWithGota!- ஜனாதிபதிக்கு பெரும் ஆதரவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வலர்கள் ‘நாங்கள் கோட்டாபயவுடன் இருக்கிறோம்’ WeAreWithGota என்ற தொனிப்பொருளில் பாரிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் தற்போது பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டொலர் பற்றாக்குறை, எரிபொருள் விலையேற்றம், உணவுப் பொருள் விலையேற்றம், பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு என நாட்டில் நாளுக்கு நாள் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. இது போக நாடு முழுவதும் தொடர் மின் வெட்டும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனால் மக்கள் அரசாங்கம் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில், … Read more

நான்கு வெளிநாட்டு கடற்படைக் கப்பல்கள் இலங்கை வருகை

பிரான்ஸ், பங்களாதேஷ் மற்றும் இந்திய நாட்டு கடற்படைகளுக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் இம்மாதம் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களை வந்தடைந்தன. பிரான்ஸ் கடற்படையின் ஆதரவு மற்றும் உதவிக் கப்பல் ‘லோயர்’ செவ்வாய்க்கிழமை (08) கொழும்பை வந்தடைந்த அதேவேளை, பங்களாதேஷ் கடற்படையின் கொர்வெட் பிஎன்ஸ் ‘புரோட்டாஸா’ மற்றும் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்களான ‘தல்வார்’ மற்றும் ‘பிரம்மபுத்ரா’ ஆகியவை புதன்கிழமை (09) அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தாக கடற்படை … Read more

2022 மாச்சு 09 தொடக்கம் 14 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற இலங்கை அபிவிருத்தி முறிகளின் ஏலம்

2022 மாச்சு 09 தொடக்கம் 14 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற இலங்கை அபிவிருத்தி முறிகளின் ஏலம்

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டது! – போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் மூன்று ரூபாவால் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஏனைய வகைப் பேருந்து கட்டணங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இன்று (14) நள்ளிரவு … Read more