கோறளைப்பற்று மத்தியில் சமுர்த்தி திணைக்களத்தின் பல்வேறு வேலைத்திட்டங்கள்

ஜனாதிபதியின் சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி திணைக்களத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் சமுதாய அடிப்படை அமைப்பு அலுவலகத்திறப்பு, சௌபாக்கியா வீடு கையளிப்பு, வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உதவிகள், சமுதாய அடிப்படை அமைப்பினருக்கு அலுவலகப்பைகள் வழங்கும் நிகழ்வு என்பன செயலகத்தில் இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸ்ஸமில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், செயலக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சி.றமீசா, … Read more

சகல பாடசாலைகளும் நாளை முதல் வழமைபோன்று நடைபெறும்

சகல பாடசாலைகளும் நாளை முதல் வழமைபோன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். இதற்கமைவாக மாணவர்களை வழமை போன்று பாடசாலைக்கு அழைக்க முடியும். கொவிட் தொற்றுடன் தொடர்புடைய ஏதாவது பிரச்சினைகள் எழுமாயின், வலய கல்விப் பணிப்பாளரின் தீர்மானத்தின்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

இலங்கை மக்களை ஏமாற்றும் அரசின் மோசமான செயல்! ரகசியங்களை அம்பலப்படுத்தும் பிரமுகர்

இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்துவதற்காக கடந்த சில வாரங்களாக எரிபொருட்களை மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 20,000 மெற்றிக் டன் பெற்றோல், 7,000 மெற்றிக் டன் சுப்பர் டீசல், 6,000 மெற்றிக் டன் சுப்பர் பெற்றோலைக் கிடங்குகளில் மறைத்து வைத்து, விலை அதிகரித்ததாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெற்றோலிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். ஒரு கறுப்புச் சந்தை வியாபாரி கூட இவ்வாறான சட்டவிரோத … Read more

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்றும் (12) திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களது ஒருங்கிணைப்பில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா அவர்களது தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா கேட்போர் மண்டபத்தில் நேற்று காலை மிகவும் இடம்பெற்றது.  பொதுப்பட்டமளிப்புவிழாவின்போது இம்முறை 1958 உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரி மாணவர்களும், பட்டப்பின் தகைமை பெறுபவர்களும், கௌரவப் பட்டம் பெறுபவர்களும் தமக்கான பட்டத்தினை பெறவுள்ளனர். இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பல்கலைக்கழக மானியங்கள் … Read more

மக்களுக்கு பெரும் நெருக்கடி – நாளை முதல் தனியார் பஸ்சேவை பணி புறக்கணிப்பு

நாட்டில் நாளை முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். டீசல் விலை அதிகரிப்புக்கு நிகராக பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிடின் அல்லது டீசலுக்கு மானியம் வழங்கப்படாவிட்டால் நாளை முதல் பஸ்கள் சேவையில் ஈடுபடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். டீசல் லீற்றர் ஒன்றிற்கு 55 ரூபா அதிகரிப்பானது 45 சதவீத அதிகரிப்பாகும். பஸ் கட்டணக் கொள்கையின் பிரகாரம் பஸ் கட்டணத்தில் 15 வீத அதிகரிப்பு தவிர்க்க … Read more

இலங்கையின்15 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (PHOTO)

சப்ரகமுவ, மேற்கு, தெற்கு, மத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் தாக்கங்கள் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை மத்திய, தெற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை வீழ்ச்சியின் போது சில பகுதிகளில் காற்றும் பலமானதாக வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் மின்னல் … Read more

11.03.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு

11.03.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு    

பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் வெளியிட்ட தகவல்

பேருந்து கட்டணங்களை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இருப்பினும், பேருந்து உரிமையாளர்களுக்கு, டீசல் மானியத்தை வழங்க முடியுமா என்பது குறித்து, நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில்,இதன்போது எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக நாளை முதல் முச்சக்கரவண்டிகளின் பயணக்கட்டணங்களை அதிகரிப்பதற்கு அந்த சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ஆரம்ப கிலோமீற்றர் தூரத்திற்கு 70 ரூபாவாகவும், ஏனைய கிலோமீற்றருக்கு … Read more