“நாங்கள் சொந்த படையினரால் சுட்டுக்கொல்லப்படுவோம்” -சரணடைந்த ரஸ்ய படையினர்! (காணொளி)

உக்ரைனிய படையினரிடம் சரணடைந்த தம்மை, தமது நாடான ரஷ்யாவில் இறந்து விட்டதாகவே கருதுவதாக, உக்ரைனில் இடம்பெற்ற மோதல்களின்போது உக்ரைன் படையினரிடம் சரணடைந்த ரஷ்ய படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் போர் முடிந்ததும் கைதிகள் பரிமாற்ற அடிப்படையில் தாம், ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டால் அங்கு தம்மை படையினர் சுட்டுக்கொன்று விடுவார்கள் என்றும் சரணடைந்த உக்ரைனிய படையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர். தாம் ரஷ்யாவில் உள்ள தமது பெற்றோரை அழைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது தமக்கு ஏற்கனவே இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பெற்றோர் … Read more

உங்கள் பிள்ளைகளை போர்க்களத்துக்கு அனுப்பாதீர்கள்! ரஷ்ய தாய்மாரிடம் கோரும் உக்ரைன் ஜனாதிபதி

தமது பிள்ளைகளை உக்ரைன் போர்க் களத்துக்கு அனுப்பவேண்டாம் என்று ரஷ்ய தாய்மாரிடம் உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனிய ஜனாதிபதி வோலாடிமிர் ஸெலன்ஸ்கி தமது பிந்திய காணொளி பதிவில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் தமது பிள்ளைகளை போர்க்களத்திற்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர்கள் இருக்கும் இடத்தில் விழிப்புடன் செயல்படுமாறும் உக்ரைனிய ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். “ரஷ்ய தாய்மார்களுக்கு, குறிப்பாக கட்டாயப்படுத்தப்பட்டு பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்ட பிள்ளைகளின் தாய்மார்களுக்கு இதை மீண்டும் ஒருமுறை கூற விரும்புகிறேன். உங்கள் குழந்தைகளை வெளிநாட்டு போருக்கு … Read more

ராஜபக்சவின் முகவர் சுமந்திரனே வெளியேறு! தமிழகத்தில் வெடித்தது போராட்டம் (Video)

ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்ச அரசின் கைக்கூலி சுமந்திரனை தமிழகத் தலைவர்கள் சந்திக்கக்கூடாது என வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இப் போராட்டத்தின் போது சுமந்திரனுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.  இலங்கை அரசை அனைத்துலக விசாரணையில் இருந்து காப்பாற்றும் துரோகி சுமந்திரனே தமிழகத்தை விட்டு வெளியேறு, ஐ.நா மனிதவுரிமை ஆணையத்தில் இலங்கைக்கு மூன்று தடவைகள் கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்த சிங்களத்தின் கைக்கூலி சுமந்திரனுக்கு தமிழகத்தில் என்ன வேலை?, விடுதலைப் புலிகள் மீதும் விசாரணை வேண்டும் என்று சிங்களத்துக்கு … Read more

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி மக்கள் ஆணையைப் பெற அரசு தீர்மானம்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அவசர தீர்மானமொன்றை எடுத்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இவ்வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கே அரசு முன்னதாக திட்டமிட்டிருந்தது. இதனால் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டது. எனினும், மேற்படி முடிவை தற்போது மாற்றியுள்ள அரசு, முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தயாராகியுள்ளது. இவ்வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடருக்கு முன்னர், தேர்தலை நடத்தி மக்கள் … Read more

இன்று வெளியாகவுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

கடந்த வருட 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுவதற்கு கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு 5ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை, கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதியன்று நடைபெற்றது. இப் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் 85,446 மாணவர்களும், சிங்கள மொழி மூலத்தில் 255,062 மாணவர்களும், மொத்தமாக 340,508 மாணவர்கள் … Read more

பதவி விலக தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய – பரபரப்பு தகவலை வெளியிட்ட தென்னிலங்கை அரசியல்வாதி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில் செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலகுவார் என பசில் ராஜபக்ச கணக்கிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அந்த சந்தர்ப்பத்தில் அரச ஆட்சியை தனது கையில் எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதா என பசில் ராஜபக்ஷ யோசனை செய்து வருகின்றார். அதன் பின்னர் அமெரிக்காவின் மூலோபாயத்திற்கமைய … Read more

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு (Photos)

யாழ்ப்பாணம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.  ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ஆரம்பமானது. இதன்போது சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. இத்திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நிகழ்வில் வடமாகாண கடற்படை தளபதி … Read more

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி! நாட்டு மக்களின் தங்க நகைகள் பறி போகும் அபாயம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் தங்கள் தங்க நகைகளை இழக்க வேண்டிய நிலை வரலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கொரிய நாட்டு மக்களை போன்று இலங்கை மக்களும் நாட்டிற்காக உதவ வேண்டும் என அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வரும் போது நன்மை ஏற்படும் என்று இல்லை. பாதகமான நிலையில் மக்களும் உதவ முன்வர வேண்டும். கொரியாவில் பொருளாதார ரீதியில் வங்குரோத்தடைந்த போது மக்கள் எப்படி உதவினார்கள் என்பதனை … Read more

ரணில் நல்ல நண்பர், ஆனால் அவருக்கு பிரதமர் பதவி இல்லை! – மகிந்த ராஜபக்ச

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவராகவும், ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராகவும் தெரிவு செய்யும் தேசிய அரசாங்கம் தொடர்பில் ராஜபக்ச சகோதரர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக எழுந்துள்ள செய்திகளுக்கு மத்தியில், பிரதமர் மகிந்த ராஜபக்ச அதனை மறுத்துள்ளார். அலரிமாளிகையில் மூத்த ஊடகவியலாளர்கள் சிலருடனான சந்திப்பில் பிரதமர் ராஜபக்ச, விக்கிரமசிங்கவும் தானும் மிகவும் நல்ல நண்பர்களாக இருந்தபோதும் அவர்களது கொள்கைகள் மற்றும் அரசியல் சித்தாந்தங்கள் வேறுபட்டிருப்பதாக கூட்டு அரசாங்கத்தில் இணைந்து … Read more

IMF உடனான சந்திப்பு கடன் மறுசீரமைப்பு நோக்கத்திற்கானதல்ல! – மத்திய வங்கி ஆளுநர்

அடுத்த சில வாரங்களில் இடம்பெறவுள்ள இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புகள் கடன் மறுசீரமைப்பு நோக்கத்திற்காக அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு மற்றும் அதன் அந்நிய செலாவணி பற்றாக்குறையை நிர்வகிப்பதற்கான உதவும் திட்டம் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை கலந்துரையாடல்களை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக … Read more