இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி! (Photo)

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 2019 முதல் 2021 வரை 79 வீதம் குறைந்துள்ளதாக PublicFinance.lk தெரிவித்துள்ளது. பிராந்திய நாடுகள் வளர்ச்சியை கண்டுவரும் நிலையில், இலங்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக PublicFinance தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இலங்கையில் இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தமைக்கு கோவிட் தொற்று நோய் பரவலை காரணமாக கூறமுடியாது எனவும் PublicFinance குறிப்பிட்டுள்ளது. ஏனெனில் மற்ற ஆசிய நாடுகளும் இதே சரிவை சந்தித்திருக்க வேண்டும் என்று PublicFinance மேலும் தெரிவித்துள்ளது.   Source link

நாட்டை கைப்பற்ற பசில் போடும் திட்டம்! – கோட்டாபயவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறார் என பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று சற்று செயலற்ற நிலையில் செயற்படுகின்றார். இந்நிலையில், நாட்டில் நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவார் என பசில் ராஜபக்ச கணித்துள்ளதாக விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது பசில் ராஜபக்ச … Read more

இலங்கையில் மீளவும் எரிபொருள் விலை உயர்வு! – சற்று முன்னர் வெளியான அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் பெற்றோலின் விலை 77 ரூபாவினாலும், ஒரு லிட்டர் டீசலின் விலை 55 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில், சுப்பர் டீசலின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 254 ரூபாவாகும். ஒக்டேன் 92 ரக பெற்றோல் லிட்டர் ஒன்றுக்கு 77 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய 254 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக … Read more

தேசிய அரசாங்கத்தின் பிரதமர் ரணில்: மிரட்டும் இந்தியாவும் மேற்குலக சக்திகளும்!

சர்வக் கட்சி மாநாட்டின் ஊடாக முன்வைக்கப்படும் யோசனைக்கு அமைய தேசிய அரசாங்கத்தை அமைக்கும் தயார் நிலைகள் காணப்படுவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படலாம் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக முன்னணி ஊடகம் ஒன்றில் முன்வரிசை அரசியல்வாதிகள் சிலருடன் நடத்திய விவாதத்திற்கு இடையில், இந்த விடயம் சம்பந்தமாக வினவப்பட்டதுடன் அவர்கள் அதனை ஏற்கவோ மறுக்கவோ இல்லை. இது சம்பந்தமாக கொழும்பில் நடைபெற்ற சிங்கள தேசிய அமைப்புகள் … Read more

இலங்கையில் விலையுயரும் பட்டியலில் இடம்பிடித்த மற்றுமொரு பொருள்

இலங்கையில் ஒரே நாளில் பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், கையடக்க தொலைபேசிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை கையடக்க தொலை​பேசி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில், தொடர்ச்சியாக டொலரின் விலை அதிகரிக்கும் நிலையில் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கின்றமை வழமையான விடயமாக மாறியுள்ளது. அந்தவரிசையில் கையடக்க தொலைபேசிகள் … Read more

நடிகை வரலட்சுமி சரத்குமாரா இது, பீச்சில் மாடர்ன் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படம்- செம வைரல்

நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியலர் வரலட்சுமி.  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தவர் வரலட்சுமி. நடிகையின் திரைப்பயணம் அப்படத்தில் நடித்த தொடங்கிய வரலட்சுமி மலையாளம், கன்னடம், தெலுங்கு என 4 மொழிகளிலும் அடுத்தடுத்து படங்கள் நடித்து அசத்தி வருகிறார்.  பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, லகாம், யசோதா, ஹனுமான் மற்றும் கோபிசந்த் மலினேனி படம் என தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கில் … Read more

கடந்த 24 மணிநேரத்தில் ராஜபக்ஷ ரெஜிமென்டின் அதிரடி மாற்றங்கள்! திணறும் பொது மக்கள்

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவதாக சபதம் எடுத்த ராஜபக்ஷ ரெஜிமென்ட் அணி இன்று நாட்டு மக்களுக்கு வரலாறு காணாத அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கத்தின் போதும் இல்லாத வகையில் மக்களின் வாழ்க்கை செலவு சமகாலத்தில் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிப் பீடம் ஏறிய ராஜபக்ஷ சகோதரர்களை இலங்கையின் பொருளாதார நிலைமை படாதபாடு படுத்தி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்றினால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி … Read more

இலங்கையர்களுக்கு தொடரும் பேரிடி! மருந்துகளின் விலைகளை உயர்த்த அனுமதி

மருந்துகளின் விலையை உயர்த்த மருந்து விலைக் கட்டுப்பாட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவருகிறது.  அதன்படி மருந்துப் பொருட்களின் விலைகள் 29 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.  தொடர்புடைய செய்தி… இன்று நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை உயர்வு!  இலங்கையில் விமான பயணச் சீட்டு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு  இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு! இலங்கையர்களுக்கு விழுந்த மற்றொரு அடி  இலங்கை வரலாற்றில் … Read more

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிகரித்த தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கொழும்பு செட்டித்தெருவில் தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின் படி தங்கத்தின் விலை இன்று எதிர்பார்க்காத அளவு அதிகரித்துள்ளது. அதற்கமைய 24 கெரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ.141,000 ஆக காணப்படுகிறது. 22 கெரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 130,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. தங்க விற்பனை வரலாற்றில் பதிவான அதிகபட்ச விலையென்பது குறிப்பிடத்தக்கது.   Source link

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 4ஆயிரத்து 911 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் 10 ஆயிரத்து 688 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து309 ஆகும். அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, … Read more