தவறான  செய்திகளை வெளியிட்டு பாராளுமன்றம் , உறுப்பினர்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் செயற்பாடுக்கு எதிராக நடவடிக்கை

உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் செயற்பாடு இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களின் நற்பெயருக்கு சதி செய்து சீர் குலைப்பதாயின் அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியரை அழைத்து கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கொட்டகொட சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். பேச்சு சுதந்திரம் மற்றும் செய்திகளை வெளியிடும் … Read more

இடி மழையுடன் பலத்த காற்று

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்10ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின், சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

உக்ரைன் தலைநகர் கீவை நெருங்கிய ரஷ்ய ராணுவம்! பீதியில் மக்கள்

ரஷ்யா – உக்ரைனுக்கு இடையிலான போர் இரண்டு வாரங்களாக நீடித்து வருகின்ற நிலையில் நாளுக்கு நாள் போர் நிலை உக்கிரமடைகின்றது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளையும் உடைமைகளையும் பறிகொடுத்து தவித்து வருகின்றனர். இந்த சூழலில் ரஷ்ய படைகள்  உக்ரைன் தலைநகர் கீவை நெருங்கி இருக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் கீவை நோக்கி 80 கி.மீ தொலைவு வரை ரஷ்ய படைகள் முன்னேறி இருக்கின்றன. எப்போது குண்டு விழும்? … Read more

இந்தியாவில் புதிதாக 4 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 4ஆயிரத்து 184 பேர் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 104 பேர் இறந்துள்ளனர். இதில் இந்திய மாநிலமான கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 88 பேர் அடங்குவர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 இலட்சத்து 15ஆயிரம்து 459 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4Mapuj;J 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளdu;. இதில் … Read more

வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது மற்றும் ஒரு வருட காலத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றை வழங்குவது தொடர்பான அறிவித்தலொன்றை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022 ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் 2022 ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2022 ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் 2022 … Read more

இலங்கையில் வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் பாரிய நெருக்கடி

பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 1,600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்ற போதிலும், இலங்கையில் தற்போது 700 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவான தொகையே இருப்பதாக மக்களுக்கான அறிவுசார் மன்றம் தெரிவித்துள்ளது.   வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் பாரிய நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.   கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் எஞ்சிய கையிருப்பு யுவானில் இருப்பதாகவும், யுவான் நாணயத்தில் ஜேர்மனி மற்றும் இந்தியாவிலிருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய … Read more

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸூடன் சந்திப்பு

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 09ஆந் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். தூதுவர் சுங்கை அன்புடன் வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இலங்கையிலான அவரது பதவிக் காலத்தின் போது தூதுவருடன் நெருக்கமாகப் பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்தார். அமெரிக்காவை ஒரு முக்கிய பங்காளியாக இலங்கை கருதுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் … Read more

கச்சத்தீவு திருவிழா நாளை ஆரம்பம்

கச்சத்தீவு திருவிழா நாளை (11) ஆரம்பம் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இந்திய பக்தர்கள் 100 பேர் கலந்து கொள்யவுள்ளனர். இந்திய-இலங்கை இடையே கடல் எல்லையான கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் இந்திய-இலங்கை பக்தர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது வழக்கம். இந்திய-இலங்கை பக்தர்களிடையே இணக்கமான உறவை மேம்படுத்த பாரம்பரியமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலால் இந்த திருவிழாவில் பக்தர்கள் அதிகமாக … Read more

இலங்கைக்கு கிடைக்கவுள்ள கோடிக்கணக்கான அமெரிக்க டொலர்

 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.. 600 இற்கும் மேற்பட்ட பொருட்களின் பட்டியலில் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி யோசனை முன்வைத்திருந்தது. எனினும் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்கள் மாத்திரமே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இறக்குமதி கட்டுப்பாட்டிற்காக மத்திய வங்கி முன்வைத்த பொருட்களின் பட்டியலிற்கமைய, ஒவ்வொரு மாதமும் … Read more

பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு  பிணை

இந்தியாவின் முன்னள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு  பிணையில் செல்ல இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதித்துள்ளது ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளன் தனக்கு பிணை வழங்க வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த வந்த நீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை வழங்குவதில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்தது. இதற்கு இந்திய  அரசு வழக்கறிஞர் சிபிஐ … Read more