சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா! – அமைச்சர் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நடவடிக்கையானது வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிப்பது மட்டுமன்றி, இலங்கையில் முதலீடு செய்வதற்கும், வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை ஊக்குவிக்கும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். On the request of HE … Read more

ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியர்களுக்கும் கௌரவ பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியர்களுக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) பிற்பகல் தங்காலை தனியார் ஹோட்டலொன்றில் இடம்பெற்றது. இதன்போது ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்து வைத்தியர்கள் கௌரவ பிரதமருக்கு தெளிவுபடுத்தினர. தங்காலை வைத்தியசாலையை மத்திய அரசுக்கு கையகப்படுத்தும் நடவடிக்கையை முறையான மற்றும் விரைவான வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவது குறித்து இதன்போது கௌரவ பிரதமர் கவனம் செலுத்தினார். குறித்த சந்திப்பில் கௌரவ அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ, மாவட்ட சுகாதார சேவைகள் … Read more

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை நாணயத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியை 230 ரூபாவாக குறைக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.  உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி  இது தொடர்பான அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில்,  வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பக்கத்தில் அண்மைக்கால அபிவிருத்திகளினையும் பரிசீலனையிற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்றினை 2022 மார்ச்சு 04 இல் அறிவித்திருந்தது. தோற்றம்பெற்றுவரும் பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல் … Read more

பாரியளவிலான பேரண்டபொருளாதார உறுதிப்பாட்டுக்கு ஆதரவளிப்பதற்கான கொள்கைசார்ந்த திட்டம் : செலாவணி வீதத்தில் நெகிழ்ச்சித்தன்மையை அனுமதித்தல்

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பக்கத்தில் அண்மைக்கால அபிவிருத்திகளினையும் பரிசீலனையிற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்றினை 2022 மார்ச்சு 04 இல் அறிவித்திருந்தது. தோற்றம்பெற்றுவரும் பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளை உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியில் உன்னிப்பாக கண்காணிக்கும் என்பதுடன் பணவீக்கம், வெளிநாட்டுத் துறை மற்றும் நிதியியல் துறை மற்றும் உண்மைப் பொருளாதார நடவடிக்கையில் உறுதிப்பாட்டினை அடையும் இலக்குடன் பொருத்தமானவாறு மேலதிக வழிமுறைகளை மேற்கொள்வதற்குத் … Read more

கோவிட் தொற்றுக்குள்ளான இளைஞர்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு

கோவிட்  தொற்றுக்கு உள்ளான இளைஞர்களுக்கு பாலியல் பிரச்சினைகள் அல்லது பிரசவத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது என வைத்தியர் பிரியங்கர ஜெயவர்தன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பூஸ்டர் தடுப்பூசி தொடர்பான வதந்திகள் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரியங்கர ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். Source link

பசிலின் அதிரடி அறிவிப்பால் கொந்தளிக்கும் சிங்கள மக்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள பிரதேசங்களில் வீதி விளக்குகளை அனைத்து வைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை இந்த நடவடிக்கை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆளும் கட்சியின் கீழுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், குழுத் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் பசில் இதனை தெரிவித்துள்ளார். போதிய மழையின்மையினால் நாட்டின் நீர் மின்சார உற்பத்தி … Read more

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்08ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022மார்ச் 07ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் ,சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் பதற்றம்

கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. திடீரென ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்த சந்தர்ப்பத்தில் அங்கு சேவை பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.  அமைச்சு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இந்த பதற்றமான சூழல் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு கொழும்பில் உள்ள செலிங்கோ கட்டடத்தில் அமைந்துள்ள நிலையில் குறித்த கட்டடம் பல உரிமையாளர்களைக் கொண்டது … Read more