பசில் எடுத்துள்ள அதிரடி தீர்மானம் – தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

சமகால அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள பங்காளி கட்சிகளை வெளியேற்ற நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ திட்டமிடுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுன கட்சியை அல்லாத ஏனைய அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளையும் நீக்கிவிட்டு தனித்து ஆட்சியமைக்க பசில் திட்டமிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு ஆதரவான 11 கட்சிகளின் தலைவர்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் பசில் ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுன கட்சியில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் பசில் ராஜபக்ஷ … Read more

இலங்கை மக்களிடம் மாற்றம் ஏற்பட்டால் அரசாங்கத்திற்கு கிடைக்கும் நன்மை

தனியார் வாகனங்களில் பயணிக்கும் 10 சதவீதமானோர் பொது போக்குவரத்தினை பயன்படுத்தினால் 26 பில்லியன் ரூபாவை அரசாங்கத்தினால் சேமிக்க முடியும் என இலங்கை நிலையான வளசக்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். விசேடமாக மேல் மாகாணத்தில் மேலும் 10 வீதமான மக்களை பொதுப் போக்குவரத்தில் இணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் 7 பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுப் போக்குவரத்து அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் … Read more

இலங்கையின் செயற்பாடு பாராட்டத்தக்கது! – உலக சுகாதார அமைப்பு

கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதில் இலங்கை பின்பற்றும் முறையைப் உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO)பணிப்பாளர் நாயகம், டாக்டர் டெட்ரோஸ் அதானோம் பாராட்டினார். இது உலகிற்கு முன்மாதிரியாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். கோவிட் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசிகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட ஈடுபாடு வைரஸைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவியதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவைச் சந்தித்த டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார். இலங்கையில் சுகாதாரம் மற்றும் மருந்து உற்பத்தியை மேம்படுத்துதல் தொடர்பான விடயங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர். … Read more

இலங்கையும் உலக வங்கியும் மீனவத் துறைக்கான நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பாதையை ஆராய்கின்றன

கொழும்பு, 2022 மார்ச் 3 ஆம் திகதி, – இலங்கையின் கடல்சார் மீனவத்துறை, கரையோர நீர்வாழ் உயிரின வளங்கள் மற்றும் அவற்றை ஆதரிக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளை நிலையான முறையில் நிர்வகிப்பதற்கான முன்னுரிமைகள் என்ற தலைப்பிலான அறிக்கையின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் உயர்மட்ட கொள்கைக் கலந்துரையாடலைக் கூட்டின. இலங்கையில் வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு மீன்வளம் கணிசமான பங்களிப்பை வழங்குகிறது. இலங்கையர்கள் மீன்களிலிருந்து 50 சதவீத விலங்குப் புரதத்தைப் பெறுகிறார்கள், … Read more

இனி இலங்கைக்கு கடன்கள் இல்லை! – சீன அரசாங்கம் திடீர் முடிவு?

இலங்கைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது குறித்து சீன அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தற்போது கொழும்பில் இருக்கும் சீன அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று, அரசாங்கத்தின் சில உயர்மட்ட அதிகாரிகளுக்கு இந்தத் தீர்மானத்தை தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு காரணங்களுக்காக கொழும்பிற்கு கடன்கள் அல்லது உதவிகளை வழங்குவதிலிருந்து விலகியிருக்க பெய்ஜிங் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் முக்கிய … Read more

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை நிலையினை மேலும் இறுக்கமடையச் செய்கின்றது

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைக்கான தொடர்ச்சியான இடையூறுகளையும் பரிசீலனையிற்கொண்டு, அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீது தாக்கத்தைக் கொண்டுள்ள ஏனைய முயற்சிகளுடன் இணைத்து மரபுசார்ந்த மற்றும் மரபுசாராத வழிமுறைகள் இரண்டையும் உள்ளடக்குகின்ற அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்று அத்தியாவசியமானது என நாணயச் சபை அபிப்பிராயப்பட்டது. அதற்கமைய, உலகளாவிய மற்றும் உள்நாட்டு ரீதியாகவும் தற்போதுள்ள மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டபொருளாதார அபிவிருத்திகளை கவனமாக பரிசீலனையிற்கொண்டதன் பின்னர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 மாச்சு … Read more

அசிங்கமான அமெரிக்கன்! – பசிலை விமர்சித்த கம்மன்பில

பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர் உதய கம்மன்பில இன்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை ‘அசிங்கமான அமெரிக்கன்’ என்று கூறியதுடன், நாடு எதிர்நோக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கு அவரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றார். ஒரு அமெரிக்க குடிமகன் நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பதாக இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார், நாட்டை இந்த நெருக்கடிக்குள் தள்ளியது யார் என்பதை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டை இந்த நிலைக்கு தள்ளியது யார் என்பதற்கான அனைத்து உண்மைகளையும் எழுத்துப்பூர்வ … Read more

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முழுமையான பெறுபேறுகள்

2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களின் பெறுபேறுகள் உட்பட முழுமையான பெறுபேறுளும் வெளியிடப்பட்டுள்ளன. 2021 செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட பெறுபேறுகளுடன், அப்போது வெளியிடப்படாத செயன்முறைப் பரீட்சைகள் உட்பட அழகியல் பாடங்களின் பெறுபேறுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அல்லது http://www.results.exams.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாகவோ பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். ஏம. டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.

ஐநாவில் இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையர் வெளியிட்ட சிறப்பு அறிக்கை!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் உரிமைகளை அங்கீகரித்து, பாதிக்கப்பட்டவர்களின் நிலை அல்லது இருப்பிடத்தை அவசரமாக நிர்ணயம் செய்து, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், இழப்பீடு வழங்கவும் இலங்கை அரசாங்கத்தை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார். ஜெனீவாவில் இன்று நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வில் இலங்கை தொடர்பான விவாதத்தின் போது தனது அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை குறித்து ஐக்கியநாடுகள் … Read more

மார்ச் மாதம் முதல் இரண்டு நாட்களில் 7,000 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை

ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என்ற அச்சம் இருந்த போதிலும் மாதத்தின் முதல் இரண்டு தினங்களில் சுமார் 7,000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சினால் நேற்று (03) வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நாட்டிற்கு மார்ச் மாதம் 1 ஆம் திகதி 2,902 சுற்றுலாப் பயணிகளும், 2 ஆம் திகதி 3,994 சுற்றுலாப் பயணிகளுமாக 6,896 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.இது தொற்று நோய்க்கு பின்னரான சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்றது. இவர்களில் … Read more