ரஷ்யாவிடம் 300 மில்லியன் டொலர் கடன் கோரியுள்ள இலங்கை! – கொழும்பு ஊடகம் தகவல்

 கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், போர் தொடுப்பதற்கு முன்னரா அல்லது அதற்குப் பின்னரோ இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இலங்கை தற்போது பாரிய வெளிநாட்டு நாணய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதேவேளை, ரஷ்யாவுக்கு எதிரான … Read more

ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் உயர்மட்ட அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உயர்மட்ட இருதரப்பு சந்திப்புக்களில் பங்கேற்பு  

2022 பெப்ரவரி 28ஆந் திகதி ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்ட அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் ஐக்கிய இராச்சியம், பொதுநலவாய செயலகம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் உலக புலமைச்சொத்து அமைப்பு ஆகியவற்றுடன் 2022 பெப்ரவரி 28ஆந் திகதி உயர்மட்ட இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டனர். ஐக்கிய இராச்சியத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா, ஐ.நா. மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் தாரிக் … Read more

ரஷ்யாவிற்கு விழுந்த மற்றுமொரு அடி! அமெரிக்க நிறுவனங்கள் எடுத்த முடிவு

ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக்கா நிறுவனங்களான மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்ட், இனி ரஷ்யாவிற்கு சேவைகளை வழங்கப் போவதில்லை, என அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா திரும்பப் பெறாததை கண்டித்து அந்நாட்டு வங்கிகளுக்கு வழங்கி வந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. அமெரிக்கா அறிவித்த பொருளாதார தடைகளில் ஒரு நடவடிக்கையாக மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்கள் தங்கள் … Read more

பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கௌரவ பிரதமர் வலியுறுத்தல்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலாரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இன்று (02) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். பெலாரஸ் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் சுமார் 1500 இலங்கை மாணவர்களின் பெற்றோர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விரைந்து செயற்பட்டு கௌரவ பிரதமர் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய … Read more

ரஷ்யாவிற்கு விழுந்த மற்றுமொரு அடி! அமெரிக்க நிறுவனங்கள் எடுத்த முடிவு

ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக்கா நிறுவனங்களான மாஸ்டர் கார்டு மற்றும் விசா கார்ட், இனி ரஷ்யாவிற்கு சேவைகளை வழங்கப் போவதில்லை, என அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா திரும்பப் பெறாததை கண்டித்து அந்நாட்டு வங்கிகளுக்கு வழங்கி வந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. அமெரிக்கா அறிவித்த பொருளாதார தடைகளில் ஒரு நடவடிக்கையாக மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்கள் தங்கள் … Read more

இலங்கையில் 60 வீதமான பெண்கள், குடும்ப வன்முறையால் பாதிப்பு

இலங்கையின் கிராமப்புறங்களில் வாழும் 100 பெண்களில் 60 பேர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர் என்று வடமத்திய மாகாண சிறுவர் உரிமைகள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான பயிற்சி ஆலோசகர் கங்கானி திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு ஆண்கள் பலியாகி வருவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மகளிர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, திம்புலாகலை பிரதேச செயலகப் பிரிவில் மட்டும் சுமார் 500 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார். தேசிய சமாதானப் … Read more

மூன்றாம் உலகப் போர் அழிவுகரமான மற்றும் அணு ஆயுத யுத்தமாக இருக்கும்! ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷ்யா தயாராகவே இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  உக்ரைனுடன் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் உக்ரைன் அமெரிக்காவின் கட்டளையையே பின்பற்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.  இதேவேளை மேற்கு நாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை உக்ரைன் வாங்க ரஷ்யா அனுமதிக்காது என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மூன்றாம் உலகப் போர் அழிவுகரமான மற்றும் அணு ஆயுத யுத்தமாக இருக்கும் எனவும் ரஷ்யா அறிவித்துள்ளமை … Read more

அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக ஆரம்பிப்பது சாத்தியமில்லை

தற்போது நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக ஆரம்பிப்பது சாத்தியமில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் விடுதிகளில் தங்கி கல்வி கற்பதனால்; அவர்களிடையே கொவிட் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ளவாறு பல்கலைக்கழக கட்டமைப்பு தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார். விடுதிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் பொதுவாகப் பயன்படுத்துவதனால் மாணவர்களிடையே கொவிட் பரவுவதைத் தடுக்க … Read more

இலங்கையில் ATM பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

இலங்கையிலுள்ள பல வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கான ATM அட்டைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு ATM அட்டை வழங்கும் செயற்பாடு பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வங்கி அட்டை காலாவதியான பிறகு புதிய சேமிப்புக் கணக்குகளைத் திறக்க முடியாமலும் புதிய அட்டையைக் கோர முடியாமலும் வாடிக்கையாளர்கள் உள்ளதாக தெரிய வருகிறது. எந்த … Read more

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர அழகியல் பெறுபேறுகள் இந்த வாரம்

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அழகியல் பாடங்களுக்கான பெறுபேறுகள் இந்த வாரம் வெளிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று நிலைமை காரணமாக, க.பொ.த சாதாரண தர இசை, நடனம் மற்றும் நாடகம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் குறித்த காலத்தினுள் நடத்தப்படவில்லை.  அழகியல் பாடங்களுக்கான பெறுபேறுகள் இன்றி … Read more