'டிரில்குட்றி அக்ராஸ்' வீதி பொது மக்களிடம் கையளிப்பு

அக்கரபத்தனை பசுமலை நாகசேன வீதியினை இணைக்கும் ‘டிரில்குட்றி அக்ராஸ்’ வீதியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் நேற்று (27) இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீதி சுமார் 295 இலட்சம் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

“தேயிலை சாயம்” புகைப்பட கண்காட்சி

மலையக மண்வாசனை சொல்லும் மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்பட கண்காட்சி இன்று 28 ஆம் திகதி கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் நடைபெறுகின்றது. தேயிலை சாயம் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இக்கண்காட்சியை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பார்வையிடமுடியும் என நிகழ்வு ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. மலையகத் தமிழர்களின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும், வாழ்வியலையும் பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் வலி சுமந்த வாழ்க்கையை எடுத்துக்காட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

உக்ரேனிய பிரஜைகளை நெகிழ வைத்த இலங்கை மக்கள்

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய பிரஜைகள் பெரும் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர். அவர்களின் திட்டமிட்ட கால எல்லையை நிறைவு செய்துள்ள போதிலும், அங்கு நடக்கும் யுத்தம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் பல நாடுகளில் உக்ரேன் சுற்றுலா பயணிகள் நாடு திரும்ப முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு உக்ரேனிய சுற்றுலா பயணிகள் பணம் … Read more

இலங்கை கடற்படைக்கான சுழியோடல் பயிற்சிகளுக்குக்காக ஐ.என்.எஸ் நிரீக்‌ஷாக் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

சுழியோடலுக்கான அதிநவீன வசதிகளைக்கொண்ட இந்திய கடற்படை  கப்பலான ஐ.என்.எஸ் நிரீக்‌ஷாக், இலங்கை கடற்படையினருக்கான சுழியோடல் பயிற்சிகளுக்காக (கலப்பு வாயு முறைமை) 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.  2.    கடற்படைப் பாரம்பரியத்திற்கு அமைவாக இலங்கை கடற்படையினரால் இக்கப்பலுக்கு சிறந்த வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் அக்கப்பலின் தளபதி மொகமட் இக்ரம் அவர்கள் கிழக்கு கடற்படை பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் பி.டி.எஸ்.டயஸ் அவர்களை சந்தித்திருந்தார். இச்சந்திப்பின்போது, எதிர்வரும் 10 நாட்கள் இக்கப்பல் தரித்து நிற்கும் காலப்பகுதியில் … Read more

பிரதமரின் அலுவலகம் திறக்கப்படுவதை நிறுத்திய அமைச்சர்

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குருணாகல் மாவட்ட இணைப்பு அலுவலகம் நேற்று முற்பகல் திறக்கப்படவிருந்த நிலையில், அலுவலகத்தின் திறப்பு விழாவை திடீரென மார்ச் 5 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக தெரியவருகிறது. குருணாகல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர், அலுவலகம் திறக்கப்படுவதை தாமதிக்குமாறு விடுத்த கோரிக்கையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. குருணாகல் – புத்தளம் வீதியில் யந்தம்பலாவ பகுதியில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதுடன் பிரதமரின் சகல ஒருங்கிணைப்பு பணிகளும் அவரது தனிப்பட்ட செயலாளரான இளைய புதல்வர் ரோஹித்த … Read more

ரஷ்யாவின் ரூபள் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி

ரஷ்யா – உக்ரேன் நெருக்கடிக்கு மத்தியில் இந்த நாடுகள் இரண்டிலும் நிதி செலவினம் அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் ரூபிள் நாணயமொன்று டொலருக்கு அமைவாக 30 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. இதேபோன்று பங்கு சந்தையும் வீழ்ச்சி கண்டுள்ளது. ரஷ்ய உக்ரேன் யுத்தத்தின் ஆரம்பத்தில் எரிபொருள் விலை அதிகரித்தது. இருப்பினும் தற்பொழுது ஓரளவு குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதற்கமைவாக அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 97.22 அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது. லண்டன் ப்ரண்டி சந்தையில் இது … Read more

"ஞாயிற்றுக்கிழமை கடினமான நாள்’’ உக்ரைன் இராணுவம் அறிவிப்பு

ரஷ்யா – உக்ரைன் போரானது தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய நாளில் போர் களத்தை மேலும் சூடுபிடிக்க வைக்கும் வகையில் பதிவான சம்பவங்கள் தொடர்பான தொகுப்பினை இங்கே பார்க்கலாம், உக்ரைனியர்களுக்கு நேற்று “கடினமான நாள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய துருப்புக்கள் எல்லா திசைகளிலும் எறிகணை  தாக்குதலை நடத்தியுள்ளன.                                          … Read more

ரயில் சேவை ரத்து செய்யப்படவில்லை

ரயில் சேவைக்கு தேவையான டீசல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் எந்தவொரு ரயில் சேவையும் ரத்து செய்யப்படவில்லை என்று ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக விஜேசுந்தர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்கக்கூடிய மாற்று முறை தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.   

இலங்கைக்குள் பிரவேசிக்கும் இரு எரிபொருள் கப்பல்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையின் மத்தியில் எரிபொருளை ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது. சிங்கப்பூரிலிருந்து இன்று இவ் இரண்டு கப்பல்களும் புறப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் ஒரு கப்பல் 28,500 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் தொன் ஜெட் எரிபொருளைக் கொண்டு வரவுள்ளது. மற்றைய கப்பல் 30,300 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் மற்றும் 7,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் கொண்டு வரப்படவுள்ளதாக எரிசக்தி … Read more

உலகளவில் கொரோனா தொற்றினால் 43.59 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 43.59 கோடியை கடந்துள்ளது.  சீனாவில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 கோடியே 59 இலட்சத்து 93 ஆயிரத்து 305 … Read more