சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளரான பந்துல பத்மகுமார காலமானார். இவர் சிறுநீரக நோய் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இவர் சுமார் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இறக்கும் பொழுது அவருக்கு 71 வயது. இவர் லேக்கவுஸ் நிறுவனத்தின் ஊடக பிரிவின் பணிப்பாளராகவும், தலைவராகவும் நீண்ட காலம் கடமையாற்றியுள்ளார். தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ‘முல் பிடுவ’ என்ற பத்திரிகை கண்ணோட்டம் என்ற நிகழ்ச்சியை நீண்ட காலம் நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

ரோச் லைட்டுடன் நாடாளுமன்றம் வந்த ஹரின் பெர்னாண்டோ(Photo)

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, நாடாளுமன்றத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் மலசலக்கூடத்திற்குப் பயன்படுத்தக்கூடிய வகையில், டோச் லைட் கொண்டு வந்ததாகச் சபைக்கு அறிவித்தார். அதன் பின்னர், அமைச்சர் தினேஸ் குணவர்தன, இவ்வாறான உபகரணங்களால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும், எனவே அவையில் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் சபாநாயகரிடம் தெரிவித்தார். இதனால் அமைச்சர் தினேஸ் குணவர்தனவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை காரணமாக நாடாளுமன்றம் … Read more

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக்கவின் இறுதி கிரியை சனிக்கிழமை

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக்கவின் இறுதி கிரியை எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பத்திரிகை ஊடகதுறையில் புரட்சியை ஏற்படுத்திய சிரேஸ்ட ஊடகவியலாளரான சுனில் மாதவ பிரேம திலக்க நேற்று மாலை காலமானார். இறக்கும் பொழுது அவருக்கு 78 வயது. 1944ல் பிறந்த இவர் பத்திரிகை துறைக்கு பாரிய பணியாற்றியுள்ளார். இவர் லேக்கவுஸ் நிறுவனத்தின் சிலுமின பத்திரிக்கையின் முன்னாள் பிரதம ஆசிரியரான பிரேம திலக்கவின் புதல்வராவார். பாடசாலை காலம் தொடக்கம் பத்திரிகையாளராக பணியாற்றும் எண்ணக்கருவுடன் செயற்பட்டு வந்த … Read more

கோட்டாபயவுடன் இரகசிய உடன்படிக்கையில் ரணில் – ஆங்கில ஊடகம் தகவல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவையும் அண்மையில் சந்தித்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 15ஆம் திகதி ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் இடம்பெற்ற ஒன்பதாவது பெரஹெர நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர்களை சந்தித்ததாக அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் குழுவொன்று நேற்று காலை ரணில் விக்ரமசிங்கவிடம் இது தொடர்பில் … Read more

புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு நியமனம்… போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை

புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். இலங்கைப் புகையிரதத் திணைக்களத்துக்குச் சொந்தமான இரத்மலானை இயந்திரப் பொறியியல் தொழிற்சாலைக்கு இன்று (24) முற்பகல் கண்காணிப்பு விஜயம் செய்த போதே, ஜனாதிபதி அவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்தார். ஆட்சேர்ப்பு மற்றும் வள முகாமைத்துவம் உட்பட தற்போதுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் இரண்டு மாதங்களுக்குள் தீர்க்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.   ஜனாதிபதி ஊடகப் … Read more

இறுதிக் கட்ட யுத்தத்தில் நடந்தது என்ன? சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் – செய்திகளின் தொகுப்பு

சர்வதேச அரங்கில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களை அச்சமின்றி எதிர்கொள்வதற்கான திராணி கோட்டாபய – மஹிந்த அரசாங்கத்திற்கு இல்லை என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையில் இவ்வாறு தெரிவித்த அவர், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், முன்கள வீரர்களை விட பின்னால் இருந்த ஒரு சிலர் தவறுகளை இழைத்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். … Read more

அதிக விலைக்கு டைல்ஸ் (Tiles) விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

அதிக விலைக்கு தட்டோடு (டைல்ஸ் டைல்ஸ் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். நுகர்வோர் விவகார அதிகாரசபையின் நேரடி தொலைபேசி இலக்கமான 1977க்கு இதுதொடர்பாக பொதுமக்களால் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவுகின்ற டைல்ஸ் தட்டுப்பாட்டை சாதகமாக பயன்படுத்தி சில வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு டைல்ஸ்களை விற்பனை செய்வதாக நுகர்வோரிடம் இருந்து … Read more

சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கையைச் சேர்ந்த 6 பெண்கள் உட்பட 16 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்

கடந்த திங்கள்கிழமை (21.02.2022) இரவு 22:30 மணி அளவில் சுவிட்சர்லாந்து விமானநிலையம் ஒன்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த 10 ஆண்களும் (ஒரு முதியவர் உட்பட) 6 பெண்கள் உள்ளடங்களாக 16 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட இவர்கள் ஒரு தனி விமானம் மூலம் 45 சுவிஸ் பொலிஸாரின் பாதுகாப்புடன் மற்றும் 1 சுவிஸ் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரியின் கண்காணிப்பில் இலங்கை விமான நிலையம் வரை சென்று நேற்றைய தினம் (22.02.2022) காலை 9:00 மணி அளவில் … Read more

வடக்கு கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோருக்கு இடையில் நேற்று (23) நடைபெற்றது. கல்வி அமைச்சில் நடைபெற்ற இக் கலந்துரையாடலின் போது வடக்கு மாகாணத்தின் கல்வி தரத்தினை மேலும் அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. வடக்கு கல்விச் சமூகத்தினரால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டமை … Read more

இலங்கையில் மூடப்பட்ட நூற்றுக்கணக்கான பேக்கரிகள்! செய்திகளின் தொகுப்பு

பேக்கரி தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக அனைத்து பேக்கரி உரிமையாளர்களும் அநாதரவான நிலையில் உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி தொழிலை இனிமேலும் கொண்டு நடத்த முடியாது எனவும், சுமார் 200 – 300 சிறிய பேக்கரிகள் முற்றாக மூடப்பட்டு அவற்றின் உபகரணங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் உள்ள 7000 பேக்கரிகளில் சுமார் 4000 பேக்கரிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பாணை உற்பத்தி … Read more