உக்ரைன் மீது ரஷ்யா பாரிய இணையவெளித் தாக்குதல் – பல சேவைகள் முடக்கம்

ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால், உக்கிரமான மோதல்கள் ஆரம்பித்துள்ளன. ரஷ்யாவின் இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், உக்ரேன் மீது இணையவெளித் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உக்ரேன் அரசின் முக்கிய இணையதளங்கள், வெளியுறவுத்துறை, உட்கட்டமைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளின் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் சைபர் தாக்குதலால், உக்ரேன் அமைச்சர்களின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதளங்களில் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. உக்ரேன் அரசாங்க சேவைகள் பெரிய அளவிலான DDoS தாக்குதல்களால் சீர்குலைவது இது … Read more

பிரதமர் மோடியின்  பேச்சை,  ரஷ்ய ஜனாதிபதி கேட்பார் -லிதுவேனியாவில் அவசர கால நிலை அறிவிப்பு

உலக அளவில் மதிப்புமிக்க தலைவர் என்ற ரீதியில் இந்திய பிரதமர் மோடி என்பதால் அவரது  பேச்சை,  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்  கேட்பார் என இந்தியாவிலுள்ள உக்ரைன் தூதர் தெரிவித்துள்ளார். முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷ்ய எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் … Read more

இராணுவத்தினர் குறித்து தமிழர்கள் வெளிப்படுத்திய விடயம்! காலம் கடந்து வெளியாகும் தகவல்

யுத்தத்தின் போது தமிழர்களை இனப்படுகொலை செய்ததாக கூறுவது பெரும் பொய்யாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன், யுத்தம் முடிந்து ஒருவருடமாகுவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் யுத்தத்தை நிறைவு செய்த இராணுவத் தளபதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடவும் அதிகளவிலான வாக்குகளை வழங்கினர். இதன்மூலம் யுத்தத்தின் போது தமிழ் மக்களை இராணுவத்தினர் கொன்று குவித்தனர் என தெரிவிப்பதை தமிழ் மக்கள் நம்பவில்லை என்றே தெரிகிறது என சுட்டிக்காட்டியுள்ளார். இது … Read more

சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளரான பந்துல பத்மகுமார காலமானார். இவர் சிறுநீரக நோய் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இவர் சுமார் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இறக்கும் பொழுது அவருக்கு 71 வயது. இவர் லேக்கவுஸ் நிறுவனத்தின் ஊடக பிரிவின் பணிப்பாளராகவும், தலைவராகவும் நீண்ட காலம் கடமையாற்றியுள்ளார். தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ‘முல் பிடுவ’ என்ற பத்திரிகை கண்ணோட்டம் என்ற நிகழ்ச்சியை நீண்ட காலம் நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

ரோச் லைட்டுடன் நாடாளுமன்றம் வந்த ஹரின் பெர்னாண்டோ(Photo)

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, நாடாளுமன்றத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் மலசலக்கூடத்திற்குப் பயன்படுத்தக்கூடிய வகையில், டோச் லைட் கொண்டு வந்ததாகச் சபைக்கு அறிவித்தார். அதன் பின்னர், அமைச்சர் தினேஸ் குணவர்தன, இவ்வாறான உபகரணங்களால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும், எனவே அவையில் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் சபாநாயகரிடம் தெரிவித்தார். இதனால் அமைச்சர் தினேஸ் குணவர்தனவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலை காரணமாக நாடாளுமன்றம் … Read more

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக்கவின் இறுதி கிரியை சனிக்கிழமை

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக்கவின் இறுதி கிரியை எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பத்திரிகை ஊடகதுறையில் புரட்சியை ஏற்படுத்திய சிரேஸ்ட ஊடகவியலாளரான சுனில் மாதவ பிரேம திலக்க நேற்று மாலை காலமானார். இறக்கும் பொழுது அவருக்கு 78 வயது. 1944ல் பிறந்த இவர் பத்திரிகை துறைக்கு பாரிய பணியாற்றியுள்ளார். இவர் லேக்கவுஸ் நிறுவனத்தின் சிலுமின பத்திரிக்கையின் முன்னாள் பிரதம ஆசிரியரான பிரேம திலக்கவின் புதல்வராவார். பாடசாலை காலம் தொடக்கம் பத்திரிகையாளராக பணியாற்றும் எண்ணக்கருவுடன் செயற்பட்டு வந்த … Read more

கோட்டாபயவுடன் இரகசிய உடன்படிக்கையில் ரணில் – ஆங்கில ஊடகம் தகவல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவையும் அண்மையில் சந்தித்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 15ஆம் திகதி ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் இடம்பெற்ற ஒன்பதாவது பெரஹெர நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர்களை சந்தித்ததாக அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் குழுவொன்று நேற்று காலை ரணில் விக்ரமசிங்கவிடம் இது தொடர்பில் … Read more

புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு நியமனம்… போக்குவரத்து அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை

புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். இலங்கைப் புகையிரதத் திணைக்களத்துக்குச் சொந்தமான இரத்மலானை இயந்திரப் பொறியியல் தொழிற்சாலைக்கு இன்று (24) முற்பகல் கண்காணிப்பு விஜயம் செய்த போதே, ஜனாதிபதி அவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்தார். ஆட்சேர்ப்பு மற்றும் வள முகாமைத்துவம் உட்பட தற்போதுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் இரண்டு மாதங்களுக்குள் தீர்க்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.   ஜனாதிபதி ஊடகப் … Read more

இறுதிக் கட்ட யுத்தத்தில் நடந்தது என்ன? சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் – செய்திகளின் தொகுப்பு

சர்வதேச அரங்கில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்களை அச்சமின்றி எதிர்கொள்வதற்கான திராணி கோட்டாபய – மஹிந்த அரசாங்கத்திற்கு இல்லை என எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர், பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரையில் இவ்வாறு தெரிவித்த அவர், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், முன்கள வீரர்களை விட பின்னால் இருந்த ஒரு சிலர் தவறுகளை இழைத்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். … Read more

அதிக விலைக்கு டைல்ஸ் (Tiles) விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

அதிக விலைக்கு தட்டோடு (டைல்ஸ் டைல்ஸ் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். நுகர்வோர் விவகார அதிகாரசபையின் நேரடி தொலைபேசி இலக்கமான 1977க்கு இதுதொடர்பாக பொதுமக்களால் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவுகின்ற டைல்ஸ் தட்டுப்பாட்டை சாதகமாக பயன்படுத்தி சில வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு டைல்ஸ்களை விற்பனை செய்வதாக நுகர்வோரிடம் இருந்து … Read more