வடக்கு கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் வகையிலான கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஆகியோருக்கு இடையில் நேற்று (23) நடைபெற்றது. கல்வி அமைச்சில் நடைபெற்ற இக் கலந்துரையாடலின் போது வடக்கு மாகாணத்தின் கல்வி தரத்தினை மேலும் அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. வடக்கு கல்விச் சமூகத்தினரால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டமை … Read more

இலங்கையில் மூடப்பட்ட நூற்றுக்கணக்கான பேக்கரிகள்! செய்திகளின் தொகுப்பு

பேக்கரி தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக அனைத்து பேக்கரி உரிமையாளர்களும் அநாதரவான நிலையில் உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி தொழிலை இனிமேலும் கொண்டு நடத்த முடியாது எனவும், சுமார் 200 – 300 சிறிய பேக்கரிகள் முற்றாக மூடப்பட்டு அவற்றின் உபகரணங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் உள்ள 7000 பேக்கரிகளில் சுமார் 4000 பேக்கரிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பாணை உற்பத்தி … Read more

ஜனாதிபதி தலைமையில் உலக சாரணர் தின விழா , சான்றிதழ் வழங்கல்…

உலக சாரணர் தின விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையில் இன்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சாரணர் இயக்கமானது, 172 நாடுகளைச் சேர்ந்த 52 மில்லியன் சிறுவர்களைக் கொண்ட சிறுவர்களுக்கான உலகின்  மிகப்பெரிய தன்னார்வ அமைப்பாகும். ஒரு சாரணர் பெறக்கூடிய மிக உயர்ந்த விருது, ஜனாதிபதி சாரணர் பதக்கம் ஆகும். இவ்விழாவில் கலந்துகொண்ட இலங்கையின் தலைமைச் சாரணர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு, சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி … Read more

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் 6,000 மெற்றிக் டன் எரிவாயுவை விடுவிப்பதற்கு தேவையான டொலர்கள் இன்று வழங்கப்படவில்லை என்றால் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயுவை விடுவிப்பதற்காக சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்பட்ட போதிலும், நேற்று பிற்பகல் வரை இலங்கை மத்திய வங்கி எந்தவொரு டொலர்களையும் வழங்கவில்லை. லிட்ரோ நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு எரிவாயுவுடனான … Read more

உலகளவில் கொரோனா 42.83 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 42.83 கோடியை விட அதிகரித்துள்ளது. சீனாவில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 கோடியே 83 இலட்சத்து 15 … Read more

மின் வெட்டினால் வைத்தியசாலை கட்டமைப்பிற்கு பெரும் பாதிப்பு!

மின் வெட்டு காரணமாக வைத்தியசாலை கட்டமைப்புக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாளாந்த மின்வெட்டு நடவடிக்கைகளிலிருந்து வைத்திசாலைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. பிரதான வைத்தியசாலைகளில் மின்பிறப்பாக்கிகள் காணப்பட்டாலும் அவற்றுக்கு போதியளவு எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக மின்சாரத்தை பெற்றுக்கோள்வதில் தடைகள் ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த வைத்தியசாலை கட்டமைப்பினையும் பெரிதும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. கோவிட் தடுப்பூசிகள் உள்ளிட்ட தடுப்பூசிகள் குளிர்சாதன பெட்டிகள், … Read more

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 8 இலட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசியை பெறவில்லை

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 8 இலட்சம் பேர் இதுவரையிலும் பூஸ்டர் தடுப்பூசியைப் பெறவில்லை என்று சுகாதாரப் பிரிவு தெரிவிக்கின்றது. அத்துடன், தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிக்கலான நிலையில் இருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்தார். மேலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, நேற்று (22) 1,254 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், … Read more

வெள்ளவத்தை கடற்பகுதி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை (Video)

கொழும்பிலுள்ள வெள்ளவத்தை – பம்பலப்பிட்டி கடற்பகுதியில் ராட்சத முதலையொன்று சஞ்சரித்துள்ளமை புதிய பாதுகாப்பு கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்கள் மாலை வேளைகளில் பொழுதுபோக்கும் இடங்களை அண்மித்த கடற்கரை பகுதியில் இந்த முதலையின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.  இந்த நிலையில் கரையோரப் பகுதியில் இருந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களும், பொழுதுபோக்குக்காக கடற்கரைக்கு செல்லும் மக்களும் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.  கொழும்பின் கால்வாய்களில் இருந்து இந்த முதலைகள் கடலுக்குள் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. Source … Read more

இலங்கையில் கடுமையான அந்நியச் செலாவணி தட்டுப்பாடு! – முதலீகளுக்கு தயாராகும் இந்தியா

 இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் குறைக்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடுமையான அந்நியச் செலாவணி தட்டுப்பாடு நிலவுகிறது, இதனால் எரிபொருள் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடியாமல் கடந்த சில நாட்களாக பரவலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவடைந்து வரும் நிலையில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். டிசம்பரில் இந்தியா வந்திருந்த … Read more