டெங்கு நோய் – மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அறிவிப்பு

டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைவாக 2,800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததாகவும், நான்கு பேர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இவ்வாண்டின் மாசி … Read more

புதிய சட்டத் திருத்தத்தால் கிடைக்கவுள்ள நன்மை: தொழில் அமைச்சர் அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியின் புதிய சட்டத் திருத்தத்திற்கு அமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தொழிலாளர் ஆலோசனைசபையின் மாதாந்த கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை ஊழியர் சேமலாப நிதியின் 30% பயனாளிகளின் நிதி வீட்டுக் கட்டுமான பணிகள் அல்லது மருத்துவ சிகிச்சைக்காக … Read more

காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது … Read more

யுகதனவி உடன்படிக்கையை விரும்பாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: சட்டமா அதிபர்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யுகதனவி மின் உற்பத்தி நிலைய உடன்படிக்கை குறித்து உடன்பாடில்லாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்னம் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கை குறித்து அமைச்சரவையில் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் முரண்பாடு இருந்தால் அமைச்சரவையை விட்டு அமைச்சர்கள் விலக வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றில் நேற்றைய தினம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதன் மூலம் உடன்படிக்கையை அங்கீகரிப்பதாகவே பொருள்படும் என … Read more

ஜனாதிபதி கோட்டபாய தலைமையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தொடர்ந்து எரிபொருள் விநியோகிப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், மின்சார சபையிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டதன் காரணமாக பெற்றோலியத்திற்காக வழங்கப்பட்ட 80 பில்லியன் ரூபா கடனை மீளச் செலுத்துவதற்கு நிதியமைச்சு இணங்கியுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார். சர்வதேச … Read more

கோட்டாபயவிடம் இருக்கும் இரகசியங்கள் அடங்கிய ஆவணம்! – ஐநா ஆணையாளர் நேரடியாக தலையீடு?

தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசியங்கள் அடங்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் அளித்த இரகசிய தகவல்கள் அந்த அறிக்கையில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித … Read more

ஜெனிவா கூட்டத்தொடர்! அரசாங்கத்திற்கு எதிராக காய் நகர்த்தும் சஜித்

ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமாக ஜெனிவா கூட்டத்தொடரை இலக்கு வைத்தே எதிர்க்கட்சி காய் நகர்த்துகின்றது என்பது புலனாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கருத்து சுதந்திரம் மீதான அடக்குமுறை மற்றும் ஊடகவியலாளர்களின் மீதான அச்சுறுத்தல் குறித்து இன்று நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த அரசாங்கமே … Read more

பாராளுமன்றக் குழுக்கள் பல இவ்வாரம் கூடவுள்ளன

அமைச்சுசார் ஆலோசணைக்குழுக்கள் உள்ளிட்ட பல பாராளுமன்றக் குழுக்கள் இவ்வாரம் கூடவுள்ளன. இதற்கமைவாக இன்று (22) வலுசக்தி அமைச்சுசார் ஆலோசனைக்குழு, விவசாய அமைச்சுசார் ஆலோசனைக்குழு, வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக்குழு என்பன கூடவுள்ளன. நாளை (23) தொழில் அமைச்சுசார் ஆலோசனைக்குழு மற்றும் காணி அமைச்சுசார் ஆலோசனைக்குழு என்பன கூடவுள்ளன. இதேவேளை, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கூட்டமும் இன்று (22) நடைபெறவுள்ளது. தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் … Read more

இலங்கை வந்து சென்ற அமெரிக்க ஹாலிவுட் நடிகர் ஜோர்ஜ் குளூனி!

அமெரிக்க ஹாலிவுட் நடிகர் ஜோர்ஜ் குளூனி கடந்த 19ம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தனது தனி விமானத்தில் அவுஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு சென்ற நிலையில், இம்மாதம் 19ம் திகதி அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். எரிபொருள் மற்றும் பணியாளர்களை மாற்றுவதற்காக அவர் தனது தனிப்பட்ட ஜெட் விமானமான Bombardier Express Global இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்த விமானத்திற்கு தேவையான சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை … Read more

வெலிகம தெனிபிடிய ஸ்ரீ கங்காதிலக மஹா விஹாராதிபதி மெத்தவத்தே சோரத மஹாஸ்திவிரபாத தேரருக்கு 'விமலகீர்த்தி ஸ்ரீ விஜித' என்ற கௌரவத்துடன் தென் மாகாண துணை தலைமை சங்கநாயக்கர் பதவி வழங்கல்

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமாக்ரி தர்ம சங்க சபையினால் வெலிகம தெனிபிடிய ஸ்ரீ கங்காதிலக மஹா விஹாராதிபதி கௌரவ மெத்தவத்தே சோரத மஹாஸ்திவிரபாத தேரருக்கு ‘விமலகீர்த்தி ஸ்ரீ விஜித’ என்ற கௌரவத்துடன் தென் மாகாண துணை தலைமை சங்கநாயக்கர் பதவிக்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் 19.02.2022 அன்று பிற்பகல் கலந்து கொண்டார். கோட்டே ரஜமஹா விகாரையில் அமைந்துள்ள கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமாக்ரி தர்ம மஹா சங்க சபை கேட்போர் … Read more