வடகொரியாவிலிருந்து 30,000 ஆர்பிஜி ஆயுதங்களுடன் இலங்கை வந்த கப்பல் மாயமான இரகசியம்! (Video)

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியிலேயே, வடகொரியாவிடம் கருப்பு பணத்தில் ஆயுதங்களை வாங்கிய தகவலை நிதி அமைச்சர் வெளியிட நேரிட்டதாக பிரித்தானியாவின் வேல்சில் இருக்கக்கூடிய கலாநிதி பிரபாகரன் (அரூஸ்) தெரிவித்துள்ளார்.  லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அமெரிக்க புலனாய்வு அறிக்கையின் படி போர் இடம்பெற்ற காலத்தில் இலங்கை அரசாங்காம் வடகொரியாவிடம் இருந்து பெருமளவான ஆயுதங்களை பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், முதலாவது அணு குண்டு … Read more

இலங்கை அபிவிருத்தி முறிகளின் நேரடி வழங்கல் ஊடாக திரட்டப்பட்ட நிதியங்கள்

இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட வழிமுறைகளின் செயல்திறன்வாய்ந்த தன்மையினை உறுதிப்படுத்தும் விதத்தில் 2022 சனவரி 01 தொடக்கம் 2022 பெப்புருவரி 15 வரை இலங்கை அபிவிருத்தி முறிகளின் நேரடி வழங்கல் வாயிலாக ஐ.அ.டொலர் 111.5 மில்லியன் கொண்ட தொகையுடைய நிதியங்கள் திரட்டப்பட்டுள்ளன. மேற்குறித்த காலப்பகுதியின் போது இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகள், மூன்று மாதங்களிலிருந்து ஐந்து வருடங்களைக் கொண்ட வீச்சுடைய முதிர்ச்சிப் பரம்பலில் காணப்பட்டு, பாரியளவிலான … Read more

சொத்துக்காக தகப்பனை கொலை செய்த இலங்கை கோடீஸ்வரர்?

1830 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்திய குஜராத் மாநிலத்தை சேர்ந்த போரா சமூகத்தை சேர்ந்த பெரும்திரளான வியாபாரிகள் இலங்கையை வந்தடைந்தனர். இவர்கள் சிறு வியாபாரங்களாக ஆரம்பித்து இன்றைய காலப்பகுதிகளில் இலங்கையின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்காளர்களாக மாறியுள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி கடந்த ஆண்டு டிசம்பர் 11ம் திகதி போரா சமூகத்தின் தலைவர் Dr. Syedna Mufaddal Saifuddin Saheb அவர்களை ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் சந்தித்தபோது கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியுடன் போஹ்ரா சமூகத்தின் தலைவரின் சந்திப்பு இவ்வாறிருக்க ஆடம்ஜி … Read more

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2022 சனவரி

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2021 திசெம்பருடன் ஒப்பிடுகையில் 0.6 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்புடன் 2022 சனவரியில் 58.7 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்தது. மாதகாலப்பகுதியில் தொழில்நிலையில் மீட்சியுடன் ஒன்றிணைந்து புதிய கட்டளைகள், உற்பத்தி என்பவற்றில் பதிவாகிய மேம்பாடுகள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், மாதத்திற்கு மாதம் அடிப்படையில் கொள்வனவுகளின் இருப்பு அதிகரித்த அதேவேளை நிரம்பலர்களின் விநியோக நேரம் நீட்சியடைந்தது. பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது, 57.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து 2022 இன் தொடக்கத்தில் பணிகள் துறையில் … Read more

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள அபாய நிலை! கவலை வெளியிட்டுள்ள அதிகாரிகள்

தற்போது வட மாகாணத்தில் மலேரியா நோய் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்பு பிரச்சாரத்தின் பணிப்பாளர், ஆலோசகர் சமூக வைத்தியர் பிரசாத் ரணவீர  கவலை வெளியிட்டுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் நான்கு வாரங்களுக்குள் நாட்டில் நான்கு மலேரியா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவற்றுள் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்குள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த வருடத்திற்குள் … Read more

ஜனாதிபதி தலைமையில் அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் தேசிய மாநாடு…

அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கத்தின் 9ஆவது தேசிய மாநாடு, இன்று (16) பிற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையில், கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்க்ஷ மண்டபத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை தொழில்சார் வளவாளர்கள் சங்கமானது (APLA), இலங்கை முழுவதும் வியாபித்திருக்கின்ற பிரத்தியேக வகுப்புகளின் ஆசியர்கள் ஒன்றிணைந்து, 2004ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தொழில்சார் நிபுணர்கள், அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 3,500 பேரை … Read more

அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

நிறுவனங்களின் பணியாளர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்கள் மிகை வரி சட்ட மூலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு நிதியங்கள் உட்பட 11 நிதியங்கள் இந்த சட்டமூலத்திற்குள் உள்ளடங்காது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பான உறுதியான தகவலை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். மிகை வரி சட்ட மூலம் தொடர்பில் அமைச்சரவை சந்திப்பில் நிதி … Read more

நீதி, வெளிவிவகாரம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்களை “ஒரே நாடு – ஒரே சட்டம்” செயலணி சந்தித்தது…

“ஒரே நாடு – ஒரே சட்டம்” என்ற எண்ணக்கருவை அடைவதற்காக, ஜனாதிபதிச் செயலணியினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்படவுள்ள யோசனைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் கவனத்திற்கொண்டு, ஜனாதிபதி அவர்களின் நோக்கத்தை அடைவதற்கு தங்களாலான ஒத்துழைப்புகளை வழங்குவதாக, அமைச்சர்கள் தெரிவித்தனர். “ஒரே நாடு – ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதிச் செயலணியினர், நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோரை கடந்த சில தினங்களில் … Read more

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் அரியவகை விலங்கினம் ஈன்ற கன்று!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையிலுள்ள அருகி வரும் விலங்கினமான அரேபிய ஒரிக்ஸ் (Arabian oryx), கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இந்த அரேபிய ஒரிக்ஸ் கன்று ஆரோக்கியத்துடன் இருப்பதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த புதிய குட்டி தனது தாயுடன் பொது மக்கள் பார்வைக்காக விலங்குகள் சரணாலயத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. பாலைவன பாலூட்டிகளான அரேபிய ஒரிக்ஸ்கள், அரேபிய பாலைவனத்திற்கு உரித்தானவையாகும். அங்கு சுமார் 1,000 அரேபிய ஒரிக்ஸ் மட்டுமே வசித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் … Read more

தேசிய கைத்தொழில் வல்லுநர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து விருது…

“நாட்டுக்கு புத்துயிர் அளிக்கும் தொழிற்றுறை மறுமலர்ச்சி” என்ற தொனிப்பொருளில், கைத்தொழில் துறைசார் வல்லுநர்களைக் கௌரவிக்கும் தேசிய கைத்தொழில் சிறப்பு விருது விழா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தலைமையில், நேற்று (15) பிற்பகல், பத்தரமுல்ல வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நடைபெற்றது. சிறப்புமிக்க சிறு, நடுத்தர மற்றும் பாரிய கைத்தொழில் உற்பத்திகள் மற்றும் சிறப்புமிக்க இயந்திர உற்பத்திகள் போன்ற துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த விருது விழாவின் போது ஜனாதிபதி அவர்களினால் பிளாட்டினம் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். பாரிய, … Read more