மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பா? – அறிவிப்பு வெளியானது

இலங்கைக்கு போதியளவு டீசல் கையிருப்பு கிடைத்துள்ளதுடன், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதன் பின்னணியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐஓசி நிறுவனம் பெப்ரவரி 06ம் திகதி முதல் எரிபொருள் விலையை உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் (CPC) விலையேற்றத்திற்கு செல்ல அரசாங்கத்திடம் அனுமதி கோரியது, ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்ததையடுத்து, நுகர்வோர் … Read more

1987 போன்று பலாலியில் தரையிறங்கும் மோடி! தென்னிலங்கைக்கு கடுமையான செய்தி (Video)

இலங்கை தமிழர்கள் விடயத்தில் இந்தியா சாத்தியமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் அரசியல் கட்சிகள் சார்பில் இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பிய கடிதம் உரிய தரப்பினர்களுக்கு சென்றுள்ளமை உறுதியாகியுள்ளது. எனினும், காழ்ப்புணர்ச்சி கரணமாக இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இந்தியா எங்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளது. இந்நிலையில், நாங்கள் இந்தியாவிடம் … Read more

கொரோனா தொற்று பாதிப்பால் 58 இலட்சம் பேர் உயிரிழப்பு

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 58 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221 நாடுகளில் பரவியுள்ள நிலையில், மக்களை தொடர்ந்து பாதித்து வருகின்றது. இதனால் உலக நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்துகின்றன. ஆனாலும், வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து மக்களை பாதித்து  உயிரிழப்புக்களையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இதற்கமைய, கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 இலட்சத்து … Read more

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்த ஆபத்தான பொதி

ஐரோப்பிய நாடுகள் இருந்து வந்த பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் அடங்கிய 5 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பொதிகள் பிரித்தானியா, ஜேர்மன், கனடா ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளன. தனியார் முகவர் நிறுவனங்கள் மூலம் இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு போலியான முகவரியிட்டு பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். … Read more

சமுதித்த சமரவிக்ரம ஊடகவியலாளரின் வீட்டிற்கு வெகுஜன ஊடக அமைச்சர் விஜயம்

சமுதித்த சமரவிக்ரம சிரேஷ்ட ஊடகவியலாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார். பொலிஸ் மா அதிபரினால் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கான விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியதுடன், 60 பொலிசாரை கொண்ட குழு ஒன்று CCTV காட்சிளை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். நேற்று (14) தனிப்பட்ட முறையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீட்டுக்கு தான் சென்றதாக குறிப்பிட்ட அமைச்சர், பொறுப்பு … Read more

யாழில் 70 வயதில் முதுநிலை பட்டம் பெற்ற நபர் – பாராட்டும் தென்னிலங்கை மக்கள்

யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.  யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது 70வது வயதில் பட்டம் பெற்றதனை அவரது மகன் தனது பேஸ்புக் பக்கத்தில் பட்டம் பதிவிட்டுள்ளார். “எனது தந்தை தனது 70வது வயதில் M.P.A பட்டம் பெற்றுள்ளார்” என மகன் பதிவிட்டுள்ளார். வைத்தியரான மகனின் பேஸ்புக் பக்க பதிவை சிங்கள பேஸ்புக் பக்கங்கள் மீள் பதிவு செய்து வெளியிட்டுள்ளன. … Read more

மிகை வரி சட்ட மூலத்தில் ETF, EPF நீக்கப்படும்

மிகை வரி சட்ட மூலத்தில் ,ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன நீக்கப்படும் என்று நிதி அமைச்சர் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இதற்கான திருத்தம் பாராளுமன்ற விவாதத்திற்கு பின்னர் தெரிவுக்குழு சந்தர்ப்பத்தில் நிதியமைச்சரினால் சமர்பிக்கப்படும் என்றும் … Read more

இலங்கை சீனாவிற்கு சொந்தமாக மாறும் அபாயம்!! செய்திகளின் தொகுப்பு

இன்னும் 10 வருடங்களின் பின்னர் கொழும்பு மாத்திரமல்ல, முழு நாடும் சீனாவிற்கு சொந்தமாக மாறி விடும் என தொழிற்சங்க தலைவர் பெர்னாட் பெர்னாண்டோ கூறியுள்ளார். அதிகரிக்கும் சீனப் பிரசன்னம் குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன், நமது நாட்டின் உள்நாட்டு வளங்களை சீனா பறித்து நம்மை கடனில் தள்ளியுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு, Source … Read more